வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பறக்கவுமே சற்றியலாக்.....

பறக்கவுமே சற்றியலாக் கோழிக்குஞ்சு
பக்கத்து வந்தமலைப் பாம்புகௌவி
இரக்கமென ஒன்றின்றிக் கொன்று தின்னும்
இழிவான உலகமிதில் நீதி எங்கே?
உரக்க அது ஒலிசெய்தும் ஓடி வந்து
உதவுதற்குயாருமில்லை என்னசெய்வேன்?
பொறுக்கவினி இயலாத புவியை நீங்கிப்
புகுதற்கே ஓரிடமோ  புகல்வாய் எற்கே.

8.7.2017

கருத்துகள் இல்லை: