திங்கள், 18 செப்டம்பர், 2017

சயனம் சயனி அனந்த சயனம்




சயனம், சயனித்தல் என்பன நம் கவனத்தை ஈர்ப்பன.
சிலர் உட்கார்ந்துகொண்டே உறங்குதலும் உண்டு; நின்றுகொண்டே தூங்கி விழுந்துவிடுதலும் உண்டு. நல்லபடி தூங்க வேண்டுமானால் சாய்ந்துகொண்டு (அல்லது படுத்துக்கொண்டு ) தூங்குவதே சரி.
எனவே சாய் என்ற வினையினின்று “சயனித்தல்”   “சயனம்” என்பன அமைவுற்றது மிக்கப் பொருத்தமென்போம்.
பல சொற்களில் இப்போது நாம் கண்டுவருவதுபோல சாய் என்பதன் முன் நிலை நெடில் குறிலானது. சாய் -  சய் > சயனி.
சாவு+அ,ம்  -   சவம் என்று குறுகினாற்போலவே  இங்கும் குறுகியுள்ளது. இங்கனம் குறுகினவை பல. பண்டைத்தமிழிலிருந்து  உதாரணம் ஓன்று   சொல்லவேண்டின்,  காண் > கண் என்பதுகாண்க. எச்சவினை நிலையிலும் காண் எனற்பாலது கண்டு, கண்ட என்று குறுகவில்லை? இத்தகு குறுக்கங்கள் இயல்பு என அறிக.
இனி அனந்த சயனம் காண்போம்.
அனந்தம் :  அன் + அந்தம் .அந்தம் அல்லாதது.  அந்தம் – முடிவு. அல் > அன் திரிபு.
ஆகவே முடிவு அற்ற உறக்கம் என்பது பொருள்.

கருத்துகள் இல்லை: