செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

நீதிமன்றம் அணுகாத காலாடியின் மனைவி



தெருக்கோடியில் வாழும் காலாடி---  அவனை
வெறுக்கவும் மாட்டாள்-- வீட்டுப்பாவை
விரும்பவும் மாட்டாள்!
எதிர்த்துப் பேசினாலோ ---  அவனுக்குக்
கையும் பேசும் --- இரண்டு
காலும் பேசும்!
கால ஓட்டத்திலே --- ஆத்துக்காரி
கற்றுக்கொண்டாளே பாடத்தை;;
சேலை வரிந்துகட்டி --- நோக்கிச்
செல்வதில்லை நீதிக்கூடத்தை.

புதுக்கவிதை.

இவ்வரிகளில் எதுகை மோனைகளைப் பெய்திருந்தாலும்
சந்தம் தளை தொடை முதலியன இல்லை. சுவைத்து
மகிழுங்கள்.  குடும்பங்களில் நடப்பவையே உலக
அரசியலிலும் நடக்கின்றன. 



காலாடி :  சொற்பொருள் விளக்கம்:
https://www.blogger.com/blogger.g?blogID=7941642520803533372#editor/target=post;postID=6322947488159768951;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=2;src=postname 

கருத்துகள் இல்லை: