புதன், 2 ஆகஸ்ட், 2017

இரவில் விழித்தெழுந்தால் கவலையே!.....

இரவில் விழித்தெழுந்தால் ‍== அந்த‌
இனிமைப் புறாக்களைக் காணாக் கவலையே!
உறவென் றிலையெனினும் ==  அவை
குமுறிப் பறப்பதும் உண்பதும் ஈர்த்தெனை
வரவழை காலையினை  == என்னும்;
வல்லமை இன்மையின் வாளா திருப்பனே!
இரவும் விலகுதற்கு === இனி
இருத்தல்  கிடத்தலே  அன்றியென் செய்வது?

இருந்திடும் போதினிலோர் == தமிழ்
இன்கவி என்பதே என் துணை ஆனது!
வருந்துதல் நீக்கியதே ==  நல்ல‌
வண்ணக் கவின் தனில் எண்ணம் பதிந்தன.
அருந்துகி றேன் தமிழ்த்தேன்  === அது
அந்தி இரவினிக் காலை பகலென‌ப்
பொருந்துமெந் நேரத்திலும் == அந்தப்
புறாக்கள் இவண்சேர் விடியலும் வந்திடும்.

கருத்துகள் இல்லை: