வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ஆனை புலி ஊருக்குள் வருதல்......தீர்வு!!



ஓர் உரையாடல்

:
தம்பி:    அண்ணே,  நம் ஊரில் இப்போது நடமாடவே
         அச்சமாய் இருக்கிறதே…..
அண்ணன்:  ஆமாம்  தம்பி.   என்ன செய்வது,  உடனே
         வேறே ஊருக்குப் போய்விடவா முடிகிறது ?  
         எதற்கும் பத்திரமாயிரு…….
தம்பி:    நம் காவல் துறைக்குத் தெரிவித்துவிட்டோம்.      
         ஆனால் யாரும்வந்து இந்தக் காட்டு 
         யானைகளைப் பிடிக்கமாட்டோம் 
                     என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். புலி
                    வந்து தொந்தரவு செய்து அது இப்போதுதான்
                    ஓய்ந்தது. அதற்குள் யானை வந்து
                    கரைச்சல் பண்ணுகிறது……

அண்ணன்:  அது,  காரணம் என்ன தெரியுமா?  
          காவல் துறையில  ஒன்றிரண்டு பேருக்குத்தான்
          யானை புலி பிடிக்கத்தெரியும். பாக்கிப்பேர்கள்
          எல்லாம் ஏட்டெழுத்துப் படித்தவர்கள். ஆளை 
          வேண்டுமானல் பிடிப்பார்கள்.  ஆனையைப் 
          பிடிக்கமாட்டார்கள். அதற்குக் காட்டிலாகா 
          அதிகாரியை வரவழைக்கவேண்டும். அவரெங்கே 
          போய்த் தொலைந்தாரோ தெரியாது.
அவர் வரும்வரை ஆனை இங்கேதான் இருக்கும்.


தம்பி:     நெருங்கிப் போகமுடியாத யானைகளாக

இருக்கின்றன…..அவர்கள்
வருவதற்குள் ஒரு மரஞ்ச்செடி கூட மிஞ்சாது…..காவல்துறைக்குள்ளேயே 
புலிப்பகுதி, ஆனைப்பகுதி என்று ஏற்படுத்திவிட்டால்
நமக்குத் தொல்லை இருக்காது….

செய்தி: தமிழ் நாட்டுச் சிற்றூரில் யானகள் புகுந்தன. 


cannot be justified.















 


கருத்துகள் இல்லை: