செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சர்க்கரை நோய்



எங்கெங்கு நோக்கினும் சீனியடா --  அதை
எடுக்காமல் வாழ்வோனே ஞானியடா!--- எதிலும்
தங்கி ஒளிந்திடும் சீனிதன்னை --- உண்டால்
தாங்காமல் நோய்தாக்கும் மேனிதன்னை.

ஈரல் இருதயம் கண்களென ---  உனக்
கிருந்திடில் கால் இவை புண்ணழுகி,
தீரல் இலாவோர் கோரநடம் --- காட்டித்
தேரா மடுக்குள் ஊரவிடும்.

சில சொற்களுக்குப் பொருள்:



எடுக்காமல் -  உணவில் சேர்க்காமல் ; உட்கொள்ளாமல்.
இருந்திடில் -  வெட்டப்படாமல் இருந்துவிடுமாயின்.
தீரல் =  தீர்தல்; முடிதல்.
தேரா -  மீண்டுவராத.
மடு = நீர்நிலை;  மடுக்குள் = மடுவிற்குள்.
 

அடுத்து வியாதி என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

கருத்துகள் இல்லை: