செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சிறுவர் சிறுமியர் செந்தமிழ் கற்க...........



சிறுவர் சிறுமியர்  செந்தமிழ்  கற்க
எளிய முறையைக்  கைக்கொள் வதுவே
ஆர்வம் கெடாமல் அமைய உதவும்;
வேர்வை அடைந்து மிரள்வது நீங்கும்.
இருபதில்  ஆறு  கூட்டிய ஆங்கிலம்
உலகினில் எத்துணை எண்மை உடையது?
தமிழிலும் அத்துணை எண்மை உண்டே!
உயிர்மெய் விலக்கி விரல்விட்டுக் கூட்டினால்
அயர்வும் அச்சமும் தோன்றுமோ?
முப்பதின் மிக்கவை எப்படி?  இலவே!!

(இருபத்தாறு, முப்பது என்பவை எழுத்துக்களின்
மொத்த எண்ணிக்கை.) 
உயிர்மெய் என்பவை கலவை எழுத்துக்கள்.

கருத்துகள் இல்லை: