வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

சேவை



சேவை என்ற சொல்லை ஆய்வு செய்யலாம்.
இச்சொல்லைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட முறை யாம் எழுதியதுண்டு.

சே என்ற அடிச்சொல்லைப் பற்றிய இடுகையும் இங்கு உள்ளது. அதையும் நீங்கள் இன்னொரு முறை வாசித்துக்கொள்ளலாம்,.
http://sivamaalaa.blogspot.com/2015/10/blog-post_61.html (“ சே அடிச்சொல்” )

செய் என்ற சொல்லும் சே என்று திரியும்.
செய் > செய்வை > சேவை.
செய் என்னும் வினை சே என்று முழுச்சொற்களில் திரிதலென்பது இயல்பானது ஆகும்.  அறியார்க்குப் புதிதாகத் தோன்றும் இது வரும் ஓரிண்டு இடங்களைக் கண்டு அதுகொண்டு நமதறிவினை விரித்துக்கொள்வோம்.

செய் > செய்தி > சேதி.
செய் > செய்தரு (பழங்கால வினைச்சொல்)..
செய் > செய்தரு+ அம் = செய்தாரம் > சேதாரம்.
தரு+ அம் = தாரம். எப்படி என்று குதிக்கலாம் சிலர்.  ஒரு+ ஊர் என்பது ஓரூர் என்று திரிவது போன்றதே இது. உயிர் வருவிகுதி முதலில் வருவதால் தரு என்பது தார் என்று திரிகிறது.  அப்படி இல்லாமலும். சொற்பிறப்புக்காக தார் என்று திரிவதும் உளது.  தரு> தார்.  (வாழைத்தார்)  வாழை தருவது வாழைத்தார்.  பிள்ளைகள் பெற்றுத் தருபவள் என்ற பொருளில் தரு+ அம் = தாரம் எனவும் ஆகும். மொத்தத்தில் தாரம் என்பது தரு அம் என்பதுணர்க.

சேதாரம் என்பது சேதம் என்பதன் விரிவாகக் கருதப்படுதலும் உளது.   அங்ஙனம் ஆயின். அதன் அடிச்சொல் யாது:?

செது > செதுக்கு.
செது + அம் = சேதம்’
செது+ ஆரம் =  சேதாரம்,

இவற்றில் முதனிலையும் நீண்டு தொழிற்பெயராம் என்பது உணர்க.  செதுக்குகையில் “சேதம்” ஆனது என்று பொருள். இங்ஙனம் இருமாதிரியாக வரும். ( இருபிறப்பிச் சொல்). இவ்வாறாவது, ஆர்தல் – பொருந்துதல் என்னும் பொருட்டாம். முழுப்பொருள்:  செதுக்கிப் பொருந்துதலுக்கு உண்டாகும் இழப்பு என்பது. இதை விளக்க, வழிமாறிச் செல்லுதல் தேவையாகின்றது.



.




கருத்துகள் இல்லை: