வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

அரசியலில் புகுந்த பெண்ணின் கதி



அரசியலில் பெண்ணொருத்தி ஆழ்ந்து வெற்றி
அடைந்திடிலோ அதைப்பொறுத்துக் கொள்ளார் பல்லோர்;
மருவறவே நின்றாலும் மாசே கண்டு
மறுபடியும் எழும்பாமல் வீழ்த்தும் நோக்கில்
துருவுறவே  தோன்றியன செய்த ழிப்பார்
துயரினொடும் ஓடவலால் யாது  கூடும்?
தெருவினிலே திரண்டவர்கள் முழங்கி னாலும்
தெருளுறுவார் மேலில்லை தோற்றார் மக்கள்.


கருத்துகள் இல்லை: