ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

நீர்த்தேவதையும் ஐயப்பசாமியும்


நீர்த்தே வதையே எதற்கோ பெருமழை
பம்பையின் ஓரம் கொடுத்தாய்,
ஆர்த்தே எழுதரும் பற்றர் குழாம்கா
லடிவைப் பதனைத் தடுத்தாய்;
மூர்த்தியாம் மூலவர் ஐயப்ப சாமிகள்
முன்னுனை விட்டார் கெடுத்தாய்!
மாத்திரம் வெப்பமண் தந்திறுக் கம்பட
மாற்றிட் டிலைநெஞ் சிடித்தாய்

ிமைப் பக்கம் பற்றர்கள் நந்து மேலேறும்
ைகெல்லாம் ேறாகக் கிடக்கின்ற என்றும் 
ற்றர்கள் காலி வைக்கக் கூடுடியில்லை - ால
உள்ளுக்கு இழுக்கிறு என்றும்  ாம்பஉட்பச்
உயிரிகள் அலைகின் என்றும் குராமிகள்
உரையாடில் பிக்கொள்கின்றர்.  எப்பி ம
ேறுவ      என்று கைப்புகிறார்கள். அங்கு 
ெல்லிய இடர்ிலையை இப்பாடல் ாட்டுகின்று,

ு எழீர் ிரியிரத்ம். வெண்டையில் 
ாடப்பெற்றுள்ளு.  எல்லாம் வெண்பா அடிகாய்த்
ொடுக்கப்புகிறு இு.  ொல்லு வும்பியாக
ொடத்ாய் -த்ாய் -   கெடத்ாய்     - இடித்ாய் என்ற
ஒவ்ோர் அடியும் இயந்து முடிகின்று. 

ொருளுரை:
ீரின் ேவையே!  நீ ஏன் பம்பை நியின் ஓருள்ள
ிகில் பெரியையை ஏற்பத்ினாய்?
எப்பும் ஓலிெய்ுகொண்டு எழுகின்றக்ர் 
ூட்டங்கள் மையில் காலி வைப்ப
ிறத்ிவத்ாயே!  ங்கு எழந்துளியிருக்கும்
ூலான ஐயப்பாமிகள் உன்னு முன்ன
ிட்டால் நீ நிலைமையைக் கெடத்ுவிட்டாய்.
ீ மத்ிரம் மண்ணுக்கு வெப்பத்த் ந்து அ
இறுக்கம்பெறச் ெய்ு மாற்றித் ில்லை என்றால்
ங்கள் நஞ்சினை இடித்ுப்போட்டுவிட்டாய்.

ு அந்தீர்த்ேவையிடம் ெய்யப்பும் முறீடு.
ீர்த்ேவை : உருவ அணி.

ிழ்வீராக.        


ுறிப்பு:
{ மூலத்ில் இல்லாற்றங்கள் இங்கு சிசெய்யப்பட்ட:
9.12.2019)  
     

சாம்பிராணி முதலிய பொருள்கள்

தொல்காப்பியனார் தம்காலத்தில்  சொற்கள் சிலவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி வழிகாட்டினார்.  திரிசொல் திசைச்சொல் ஆலமரத்தடிச் சொற்களாய் இல்லிற்கு வெளியில் தமிழுடன் வழங்கிய வடசொற்கள் (  இற்றைச் சமஸ்கிருதம் இச்சொல்லிலிருந்து வேறுபடுத்தி அறியத்தக்கது ) என்று பாகுபாடு செய்து தெளிவுகாட்டினார்.

அதன் பிறகு நீண்டகாலம்   நாம் இன்று அறிந்துமகிழும் அளவிற்கு பெரும் சொல்லாய்வுகள் தமிழரிடை நடைபெற்றதாகத் தெரியவில்லை.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே இப்போது  ஆய்வுகள் நிகழ்ந்தேறி உள்ளன.

திரிசொற்களைப் பொறுத்தவரை இரண்டை நாம் கவனிக்கவேண்டும்:

1.   சொல் உருமாறிப் பொருள் மாறாமலிருப்பது.

2.  பொருள் மாறிச் சொல் உருமாறாமல் இருப்பது.

மூன்றாவது சொல்லும் பொருளும் மாறிவிடுவது.

மூன்றாவது அணிக்கு நாம் ஓர் உதாரணம் தரலாம்:

இது என்ற தமிழ்ச்சொல்லுக்கு நேரான மலாய்ச் சொல்: இத்து என்பது.  இத்து என்பது இது என்று  பொருள்படுவதே. இச்சொற்களிடை உள்ள ஒலியொற்றுமையை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.  இது என்பது ஒரு சுட்டடிச் சொல்.  ஏனை மொழிகளிலும்  சுட்டடிச் சொற்கள் உள்ளன.  சீனமொழிப் பேச்சில் இ என்பது  இவர், இவன்,  இவள் என்பவற்றின் ஒன்றை இடம்நோக்கி உணர்த்துவது ஆகும்.  இட் என்ற இலத்தீன் சொல்லிலும்  ஹியர் என்ற ஆங்கிலச் சொல்லிலும் சுட்டு ஒலி உள்ளது.  எதிலிருந்து எது வந்தது என்பதை எப்போதாவது எழுதுவோம். இப்போது மூடி வைப்போம்.

இத்து என்ற இது என்று பொருள்படும் மலாய்ச்சொல்,  சித்து என்று மாறி {(டி-சித்து ) என்று உருமாறி} அங்கு என்று பொருள்படுகிறது.  இதில் சொல்லும் மாறிவிட்டது.  பொருளும் மாறிவிட்டது.  சித்து என்பதில் நமக்கு அடையாளம் காட்டுவது  சொல்லின் இறுதிப்பகுதியே ஆகும். தமிழில் இது என்பதில் உள்ள இகரத்தைக் கொண்டே இங்கு என்ற இடப்பொருள் காட்டும் சொல் அமைந்துள்ளது காண்க. மலாய் மொழியில்  இகரம்  அண்மைப் பொருளினின்று சேய்மைப் பொருள் காட்டச் சென்று விட்டதால் இது மூன்றாவது அணி என்று மேலே சொல்லப்பட்டதற்கு நல்ல உதாரணம் ஆகின்றது.


சாம்பிராணி என்பதான சொல்லில் என்ன மாறியது?   சாம்புதல் என்ற சொல்லின் பொருளில் நெருப்பிட்டு எரித்தல் என்ற பொருள் இல்லாமல் அல்லது கிட்டாமல் போய்விட்டது.  இருந்தாலும் இப்போது இருக்கும்  சொற்களிலிருந்து அப்பொருளை மீட்டு எடுக்கமுடிகிறது.

சாம்பு  >  சாம்பல்.  (எரிந்து மிஞ்சியது).
சாம்பு   > சாம்பார்  ( வேவித்து குழைவாக்குவது).
சாம்பு >சாம்பான்   (  பிணம் எரிப்போன்.)
சாம்பு > சாம்பன்     ( எரிதவழ் இறைவன் )
சாம்பு >  சாம்பவர்   ( பிணத் தொழிலோர்).

இவை எல்லாம்  தீயிடுதலையும் எரிதலையும் குறித்தாலும்,  சாம்புதல் என்பதற்கு இப்போது கிடைக்கும் பொருள்:

1  ஒடுங்குதல்.  2  கூம்புதல்   3  சோர்தல்  4  வாடுதல்  5  உணர்வழிதல்
6  இழுத்தல்   7  கெட்டுவிடுதல்  8  சோம்புதல்  9  ஒளிகுறைதல்.

இவற்றுள் நேரடியாய் எரித்தல் பொருள் தரப்படவில்லை.

தீ இட்ட பிணம்  ஒடுங்கும், கூம்பும். சோரும். வாடும்,  இழுக்கும், கெடும், இறுதியில் தீ ஒளிகுறைந்து சாம்பலாகும்.   எனினும் இவையும் நாம் தீயினுடன் தொடர்புறுத்திய மீட்டுருவாக்கமே.

புகையை ஏற்படுத்திப்  பாம்பு, கொசு, ஈ முதலிய பல ஊர்வன பறப்பன அண்டாமல் அரணை உண்டாக்கும்   சாம்பு + அரண் + இ =  சாம்பரணி ஆகும்.  இது பின் திரிந்து சாம்பிராணி ஆனது.   சாம்பிராணியில்  ராணியுமில்லை; பிராணியுமில்லை.அது ஓர் அரணிதான்.  ஆனால் அது எரிக்கப்படுவதுதான்.
அரண்:  பாதுகாப்புத் தருவது.

நமது நிகண்டுகளில் உள்ள சொற்களையே அகர வரிசைகளும் உட்படுத்தி வெளிவந்தன.  சொந்த ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கவில்லை. உலகவழக்கிலிருந்து எடுக்கவில்லை. எடுத்துக்காட்டாகத் திராவுதல் என்ற சொல் உலகவழக்கில் உள்ளது. அகராதியில் இல்லை. ஒழித்தல் என்பதற்கு ஊற்றுதல் என்று மலையாளத்தில் பொருள் உண்டு; தமிழில் இல்லையாகிவிட்டது.  எழுப்புதல் ஒழுப்புதல் என்று யாழ்ப்பாணத்தில் சொல்கிறார்கள். அது அகரவரிசையில் இல்லை. தைதல் என்ற தன்வினை இல்லை; தைத்தல் என்ற பிறவினை உள்ளது.  விடுபட்ட சொற்களைச் சிலர் பட்டியல் இட்டுள்ளனர்;  அவை இன்னும் இடம்பிடிக்கத் திணறுவனவே ஆகும்.

பழங்கால மன்னர்கள் சிலரை உயிருடன் எரித்துக் கொன்றனர்  என்று தெரிகிறது.  சில சிற்றூர்க் கதைகளில் சுண்ணாம்புக் காளவாயில்  (சூளை யில்)  இட்டு எரித்துக் கொன்ற கதை வருகிறது.  இதுபோன்ற கதைகள் திரட்டப்படவேண்டும்.  இப்போது வீட்டில் பாட்டி சொந்தக் கதை சொல்லும் திறன் குறைந்து புதுக்கதைகளைத் தொலைக்காட்சிகள் பரப்பத் தொடங்கிவிட்டதால் பழங்கதைகள் அழிந்தன  அல்லது அழிந்துகொண்டே இருக்கின்றன.. திரிசங்கு புலையனான கதை புலையர்களில் சிலர் எப்படி உருவாக்கப்பட்டனர் என்பதைத் தரவல்லது ஆகும்.  வழக்கிலுள்ள கதைகளையாவது யாராவது சென்று திரட்டுங்கள்.  அவை ஆய்வுக்கு உதவும்.

சா>  சாம்பு > சாம்புதல்.   எரித்துச் சாம்பலாக்கிக் கொல்லுதல். உயிருடன்  எரிக்கத் தொடங்கினாலே சாவு.  அப்புறம் சாம்பலானால் என்ன?  துண்டுகள் கிடந்தால் என்ன என்பீரோ?

சாம்புதல் :  பொருள் உணர்வழிதல் : இது  சாவின் தொடக்கம்.  மற்ற பொருள் குறிப்புகளும் சாவினோடு தொடர்புற்றவை. உணர்வழிதல் முதலியவை ஓர் வெளிச்சத்தை இச்சொல்லுக்கு அளிக்கின்றன.

எரித்து அரண் செய்வது சாம்பரணி  ( சாம்பு-ராணி(பேச்சு), சாம்பி-ராணி (பைக்கட்டில்)  , எதுவோ?)

(பைக்கட்டு:  பைக்குள் வைத்துக் கட்டி வெளியில் எழுத்துகள் ஒட்டப்பெற்றது.)

தமிழாசிரியர்கள் பொருளறியாமலும் சிலவேளைகளில் திருத்துவர்.தவறுகள் இயற்கை.

சனி, 22 செப்டம்பர், 2018

பணபரமா அல்லது பணஃபரமா? கிரேக்க ஒலிப்பு முறை

இப்போது பணபரம் என்ற சொல்லைப் பார்ப்போம். இதை வேறு சிலர் பண பரம் என்று இருசொற்களின் புனைவாகக் கொண்டுள்ளனர்.

 பணம் என்பது பண்ட மாற்றுக்கு இடைநிகராக நிற்கும் செலாவணியாகும். பண்டம் என்ற சொல்லும் பணம் என்ற சொல்லும் பண் என்ற தமிழ்ச்சொல்லினடிப் பிறந்த சொற்களே. பண்டம் என்பது செய்பொருள் அல்லது பண்ணப்பட்ட பொருள். பண்+து+அம். = பண்டம் ஆகும். ண் + து என்பது புணர்ச்சியில் டு ஆகும் என்பது புணரியல் சொல்லும் இலக்கணம். பண் து > பண்ணியது. பண் என்பதனுடன் அம் விகுதி புணர்க்க, பணம் ஆகிறது. இதில் து என்ற இடைநிலை விடப்பட்டுள்ளது காணலாம். பண் து அம் : பண்டம்; பண் அம் : பணம். து என்பது இல்லை.

 பரம் என்பது பர அம் என்ற பகுதி விகுதி இணைப்பு. பர என்பது பரவு என்பதன் அடிச்சொல்லாகும். பணம் பரவிய நிலையே பரம் எனப்படுகிறது. இது பரம்பொருள் என்ற தமிழ்ச்சொல்லில் வரும் பரம் என்ற சொல்லின் கருத்தே ஆகும். பரவியது எனவே பணபரம் என்பது பணம்பரவிய கால நிலையைச் சோதிடத்தில் குறிக்கிறது.

 பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை ( சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும் முனைவர் மு வரதராசனார் முனைவர் ராசமாணிக்கனார் ஆகியோரின் மேலதிகாரப் பணியாளரும் ஆகியவர் )  

இவற்றை எல்லாம் கவனிக்காமல் கிரேக்க மொழி அகராதியில் இச்சொல் இருப்பதைக் கொண்டே அது கிரேக்கத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தது என்று முடிவுகட்டிவிட்டார். இந்தியா அல்லது குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்து கிரேக்கத்துக்குச் சென்றிருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதனை நாம் இதன் மூலம் நன்` கறிந்து கொள்ளலாம்.

செலா வணி என்பது : செல்லும் அணி வகை என்பதாம். செல்: செலா; நில் - நிலா. வில் - விலா; என்பவை போல தொழிற்பெயர். செல்லுவது அல்லது ஏற்கப்படும் மதிப்புடையது என்பது பொருள், அணி என்பது வகை எனல் ஆகும்.

பணபர இராசிகள் எனில் பணவரவு செலவு குறிக்கும் இராசிகள் அல்லது இராசியிடங்கள் என்பதாம்.

இவை:   2-5-8-11   ஆம் வீடுகள்.  பிறப்பு அல்லது சென்ம இராசிகளிலிருந்து எண்ணவேண்டும்

கிரேக்க மொழியில் இது பணஃபர என்று திரித்து ஒலிக்கப்பெறுவதால் பேராசிரியர் தடுமாற்றம் அடைந்தார் என்பது தெளிவு ஆகிறது.

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

சோதிடச் சொற்கள்: பணபரம், ஆபோக்லீபம்

இவைபோன்ற சில சொற்கள் நம் சோதிடமென்னும் கணியத்தில் கலந்துள்ளன.

இவை கிரேக்கச் சொற்கள் என்பது  எஸ்,வையாபுரிப் பிள்ளையாரின் கருத்து.

இது உண்மையாய் இருக்கலாம்.

அலக்சாந்தரின் படைவீரர்கள் பலர் பஞ்சாப் முதலிய இடங்களில் படையெடுப்பின் பின் தங்கிவிட்டனர்.  அங்கிருந்த பெண்களுடன் கலந்து கருவலும் வெளுப்பும் கலந்த நிறமுடையோராய் மக்கள் அமைந்தனர்.  படையெடுப்பில் இவைபோலும் கலப்புகளை எதிர்பார்க்கவேண்டும். கருக்கலைப்புகள்  அப்போது எளிதில் கிட்டுவதில்லை. இன்னும் பலரின் படையெடுப்புகளும் நடைபெற்றிருக்கலாம்.  மொழியில் புதுச்சொற்கள் புதுச் சொல்வடிவங்கள் நுழைதல் இயல்பு.

பணபரம் ஆபோக்லீபம் முதலியவை கிரேக்கச் சொற்கள் என்றார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.  சென்னைப் பேரகராதிப் பதிப்பாசிரியர்; பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர்.

தொடர்வது:  http://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_22.html

அடுத்த இடுகை.

தாது என்றால் என்ன

தாது என்ற சொல், தருதல் என்ற வினையடியாகப் பிறந்ததே.  இதன் பொருள் ஒன்றிலிருந்து பெறப்பட்டது என்றாலும் அத்தகு பொருள்கள் ஒருவாறு வரையறுக்கப்பட்டுள்ளன.

தாது :

மண்ணால் தரப்பட்ட  பொன் இரும்பு புட்பராகம் முதலியன.

பூவினால் தரப்படுவது:  பூந்தாது.

நரம்பினால் தரப்படும் துடிப்பு.  அதனின்று நோயறியும் நிலை.

காலத்தினால் தரப்படும் ஆண்டுக்கணக்கு.

மாற்றித் தரப்படும் பொருள்.

மலர்மொட்டு வாயவிழ்தல்

எரிப்பில் தரப்படுவது.   சாம்பல்.

இயற்கையினால் தரப்படும்  நிலம், வளி, நீர், விசும்பு, தீ முதலியன.

உடலினால் தரப்படுவது:  பிணிகள் முதலியவை.

இவ்வாறு தாது என்பது தரப்பெறும் பல பொருள்களைக் குறித்தன,


பேச்சு வழக்கில் சிலவே உள்ளன. பிற இலக்கிய வழக்கு உடையவை.   தா என்ற ஏவல் வினையிலிருந்து இதனை அமைத்துக்கொண்டுள்ளனர்.  பிற காரணங்கள்  மற்றும் மூலங்கள் கூறிக் குழப்பத் தேவையில்லாத சொல் இது.

து என்னும் தொழிற்பெயர் பிற பெயர்கள் வேறு சொற்களிலும் வந்துள்ளன:

கைது --  கையிற் பிடிபட்டது.  கையும் களவுமாய்ப் பிடிபட்டான் என்பது ஒருவகைக் கைது.

விழுது

பழுது.

மாது    (  அம்மா>  மா > மாது )

கோது.

சூது   ( சூழ்து என்பதில் ழகர ஒற்று கெட்டது) விளையாடும் போது சூழ்ந்து ஆடுதற் குரியது; இன்னும் விளையாடுவோர் வட்டமாக இருந்து ஆடுவது ஒரு காரணமாகும்.

தூது  (  தூய்து என்பதில் யகர ஒற்று கெட்டது,  தூதன் அனுப்பிய அரசனுக்குத் தீது எண்ணாத நேரியனாய் இருக்கவேண்டும் ).

சேது  ( சே:  செம்மை,  சிவம் ).

ஏது  ( ஏ என்னும் வினா)

வேது  ( வேது பிடித்தல்:  போர்வைகளால் போர்த்தி வியர்க்கச் செய்தல்)

இது  ( பொருட் சுட்டு)  

அது

கேது   இடுகையில் முன் விளக்கப்பட்டது.

வாக்கியம்}

ஒரு சித்தவைத்தியர் கூறியது:  முட்டையின் சிவப்புப் தாதை எடுத்து அதில்
இந்தச் சாதிலிங்கத்தை உரைத்துக் கலக்கி முழங்காலில் தடவவேண்டும், இப்படி 48 நாள் செய்யுங்கள்.


தா என்பது ஏவல் வினை.  எடுத்துக்காட்டு:

சங்கத் தமிழ்மூன்றும் தா.

செம்மாதுளை பிளந்து தா.

இனித் தாகம் என்ற சொல்:

தாகம்:  நீர் தருவதற்கு உள்ள நிலை. உடலுக்கு நீர் தருவதற்கு நேரம் வந்துவிட்டதைக் குறிப்பது.

தா:   தருதல் குறிக்கும்.

கு:    வந்து சேர்தல் அதாவது சேர்விடக் குறிப்பு.

அம்:  விகுதி (< மிகுதி).

தா+கு+ அம் =  தாகம்.

தவித்தல் என்ற சொல்:

தா+இ.   > தாவி > தவி.  (  இது முதனிலைக் குறுக்கம் ).

இங்கு வந்த இகரம் ஒரு  வினையாக்க விகுதி.  ஒரு வினையினின்று இன்னொரு வினை தோன்றல்.

நீர் தருக என்பது  தா+இ = தவி ஆனது.

தா என்ற ஏவல் வினை,  தரு, தந்து, தந்தான்/ள், தரமாட்டான் ,  ---- இவ்வாறு பல சொற்களில் குறுகுதல் இயல்பு.  தா>த.

இந்தா என்ற சொல்லில் குறுகவில்லை.

தா என்று கேட்குமுன் இந்தா என்று கொடுத்துவிடு (வாக்கியம்).

தா > தா இ > தவி >  தவி+ அம் = தாவம்   =  தாகம்

இவை தோற்றுவாய் ஒன்றான சொற்கள்.

வகரம் பகரமாகும்.  எ-டு:  வசந்தம் > பசந்த்.   இது  பல மொழிகட்கும் உரிய
திரிபு.

தாவம்> தாபம்.  ( நீர் விடாய்;  பொதுவாக விடாய் ).

தவித்த நாவுக்குத் தண்ணீர் கொடு.  (வாக்கியம்).  நீர் கொடு - நீர் தா இரண்டும் ஒன்றுதான்.


தாது மற்றும் தாவில் பிறந்த பிறவற்றின் உறவு விளக்கப்பட்டது.

இன்னும் பல பழைய இடுகைகளில் உள.




வியாழன், 20 செப்டம்பர், 2018

பாதாளம் வரை செல்வோம் தடுப்பவர் யார்?

இன்று பாதாளம் என்ற சொல்லினமைப்பையும் தெரிந்துகொள்வோம்.

பாதாளம் என்ற சொல் காதில் விழும்போது ஏதோ வேறொரு சிறப்பான மொழியில் மிக்கச் சிறப்புடன் அமைவுற்ற சொல்லினைப் போலன்றோ ஒலிக்கிறது.  இதனால் ஏமாந்துவிடக் கூடாது. மெய்ப்பொருள் காணும் மேலான எண்ணத்துடன் என்றும் செயல்படுதலே நன்றாகும்.

பரத்தல் என்ற சொல் விரிவாய் இருத்தல் என்று பொருள்படும்.  தொழிற்பெயர்கள் அதாவது வினைச்சொல்லிலிருந்து பெயர்ச்சொல்லாக மாறும் சொற்கள்,  பலவகைகளில் மாறும்; அதிலொரு வகை முதலெழுத்து நீண்டு அமைவதாகும்.  ஓர் எளிய உதாரணம்:  சுடு என்ற வினைச்சொல் சூடு என்று நீண்டமைந்து பெயராகிறது. பின்னும் அது ஒரு விகுதி பெற்றுச் சூடு என்று நிற்பது சூடம் ஆகும்.  பின்னும் அம் விகுதி அன் ஆகி சூடன் என்றாகும். பொருளிலும் மாறுதல் ஏற்படுதல் உளது.

இவ்வாறாக.  பர என்ற வினைச்சொல் பார் என்று அமையும். பார் என்பது இந்தப் பரந்த உலகம் என்று பொருள்படும்.  முன்னரே சொன்னோம்: பரத்தல் என்றால் விரிந்தமைதல். பார் என்ற சொல் பின்னர் இறுதி எழுத்து வீழ்ந்து பா என்று ஆகும். இந்த நிலையைக் கடைக்குறை என்பர். அதாவது கடைசி எழுத்துக் குறைந்து வருவதாகும். பொருளும் பரவலாக இருத்தல் என்பதே.

பாருங்கள்:  காலின் கீழ்ப்பகுதி பரவலாக அல்லது நடக்கும்போது நிற்க வசதியாக விரிந்து அமைந்துள்ளது.  மிகப்   பொருத்தமாக அதற்குப் "பாதம்" என்றனர்.  பா : பரவலாக;   து:  இருப்பது;  அம்: இது சொல்லின் இறுதி. அல்லது விகுதி.

பாதுகை: இது கீழே பரவலாக இருக்கும் காலணியைக் குறித்தது. ஒரு பற்றன் இராமபிரானின் பாதுகையே துணை என்று தொழுகிறான். இதனால் பாதுகை என்ற சொல்லுக்குத் துணை என்ற பொருளும் ஏற்பட்டது:  இது பெறுபொருள். 

தாள் என்பது  தாழ இருக்கும் காலைக் குறிக்கிறது.  "தாள் பணிந்து போற்றினேன் "  என்பதில்லையா:  அதுபோல்வது.  இது தாழ இருப்பதைக் குறிக்கும் தாழ் என்ற வினைச்சொல்லுடன் உறவுடைய சொல். உங்கள் அக்காவும் தம்பியும் உறவினர் ஆனதுபோலவே சொற்களெல்லாம் உறவுமுறை போற்றுகின்றன,  உறவு கண்டும் பொருள் காணலாம்.

பரந்து தாழ்வாக இருக்கும் பகுதியே பாதாளம் ஆகும்.  வழக்கில் அது மிக ஆழத்தில் இருக்கும் நிலப்பகுதியைக் குறிக்க வழங்கப்படுகிறது.  இயல்பான சொற்பொருளுக்கு மிக்க ஆழ்ந்த பொருளைத் தந்துவிடும் வழக்கு என்பது.  வழக்கு என்றால் எப்படிச் சொல்லை ஒரு மொழியில் மக்கள் வழங்கினார்கள் என்பது.  தொல்காப்பியப் பாயிரத்தல் பனம்பாரனார் எழுத்தையும் சொல்லையும் மற்றும் பொருளிலக்கணத்தையும் செய்யுள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் விதம் இவற்றையெல்லாம் ஆராய்ந்ததாகக் கூறுகிறார்.  இவ்வாறு பாதாளம் என்ற சொல் மக்கள் பயன் கொண்ட விதம் காணின் மேலாக உள்ள நிலப் பள்ளங்களைக் குறிக்காமல் ஆழமான நிலப் பரப்புப் பள்ளங்களையே பாதாளம் என்றனர்.  சொல்லின் அமைப்பை மட்டும் கண்டு உணர்ந்தால் பக்கத்தில் உள்ள படுகையைக்கூடப் பாதாளம் என்னலாம் எனினும் வழக்கில் அது இன்னும் ஆழமான பரந்த கீழ்நிலத்தைக் குறிக்கிறது; நாமும் இவ்வழக்குக்கு மதிப்பளித்து அவ்வாறே பயன்படுத்தி நம் மொழியைக் காப்போமாக.பாதாளம் என்பதும் ஒரு காரண இடுகுறிப் பெயரே ஆகும்.

பிழைகட்கு பின் கவனிப்பு.

இலக்குமி என்ற தெய்வச் சொல்

இல் என்பது தமிழில் வீடு என்று பொருள்படும் இனிய சொல். ஆத்துக்காரி என்பதனை இல்லத்தரசி என்று சொல்கிறோம்.

இல் என்பது ஓர் உருபுமாகும். கண்ணில்,   காதில், தோட்டத்தில் வீட்டில் என்று இவ்வுருபு இடப்பொருள் தருகிறது.

இல்லை என்று பொருள்தரும் இல் என்னும் சொல் வேறு பொருளுடைய வேறு சொல். இச்சொல் பற்றி ஈண்டு பேசவில்லை.

 ஆண்மகனை மணம்புரிந்து வீட்டுக்கு வரும் புதுப்பெண்ணை  இலக்குமி என்றே சொல்கிறோம். நம் வீட்டுக்கு ஓர் இலக்குமி வந்திருக்கின்றாள் என்று எல்லோரும் மகிழ்வுகொண்டாடுவர்.  கிருகலெட்சுமி என்ற தொடரும் வழக்கில் உள்ளது. இலக்குமி வீட்டுக்கு நல்லனவெல்லாம் கொண்டுவருபவள்.

இலக்குமி:

இச்சொல்லில் இல் என்ற  சொல் முன் நிற்கின்றது. இதைப் பிரித்தால்:

இல் :  வீடு.
அ  :      அவ்விடத்து.  அங்கு.
கு:        சேர்விடம்.
உ =     முன்பு.
மி :       இது ம் மற்றும் இ என்ற இரண்டும் இணைந்த இறுதி.  பூமி என்ற சொல்லுக்கு யாம் கூறிய விளக்கத்தை மனத்தில் இருத்திக்கொண்டு நோக்குக.

இதில் கு என்பதன் உகரம் கெட்டது,

இது " இல்லத்துக்கு வந்து சேர்ந்து முன் நிற்பவள் "  என்பதாகிய பொருளைத் தருகிறது.  இதில் வந்த  இகரத்தைப் பெண்பால் விகுதியாகக் கொள்ளலாம்.  பூமி என்பதில் அஃறிணைக்குரிய விகுதி எனலே பொருந்துவது.

இலக்குமி என்ற இதே சொல்தான் இலட்சுமி என்றும் விரிந்து கிருகலெட்சுமி என்றும் வருகின்றன

இலக்கு என்ற சொல்லும் இழு இலு என்பவும் தொடர்புடையன. அவற்றைப் பின்னர் காண்போம்.

புதன், 19 செப்டம்பர், 2018

காமாக்கியா என்பது என்ன தெய்வம்?

மேகாலயாவில் காமாக்கியா பீடம் என்று ஓர் அம்மனைப் போற்றுமிடம் உள்ளது,  இச்சொல் யாது என்பதை இப்போது அறிந்துகொள்வோம்,

காமாட்சி என்பது ஒரு தெய்வத்தின் பெயர்.

காஞ்சி காமாட்சி அம்மையை உங்களுக்குத் தெரியும்.

இந்தச் சொல்லை இருவகையாகப் பிரிக்கலாம்.

மக்களைக் காக்கும் மாண்பினை உடையாள் என்பது ஒரு வகை.

கா :  காக்கும்;
மாட்சி :  மாண்பு.

இது தெய்வத்தைக் குறிப்பதால்  மாண்பு என்பதை மாண்பு உடையாள் என்று பொருள் கூறல் வேண்டும்.

கா+  மாட்சி  =  காக்கும் மாட்சி (உடையவள்.)

இனி இதனைக் காமம்+  ஆட்சி என்றும் பிரிக்கமுடியும்.

காமம் + ஆட்சி
=  காம +  ஆட்சி .  இதில் முதல் சொல்லில்  ( நிலை மொழியில்) உள்ள  இறுதி அகரம் கெடும் அல்லது விடப்படும்.   காம்+  ஆட்சி =  காமாட்சி ஆகிவிடும்.

காமாட்சிக்கு  ஓர் ~ ஆள் பெண்பால் விகுதி சேர்த்தால்:

காமாட்சியாள் என்றாகும்.

ஆட்சி என்பது ஆக்கி என்று திரியும்.   இன்னொரு சொல் எடுத்துக்காட்டாக:
பட்சி > பக்கி.

ஆகவே  ஆக்கியாள் என்று மாறிவிடும்.

காமாக்கியாள்.  இந்த ஆள் விகுதியில் உள்ள ள் பிற மொழிகளில் வருவதில்லை.

காமாக்கியாள்  >  காமாக்கியா.

முடிவு:  மேகாலயா முதலான மாநிலங்களில்  காமாக்கிய(/யா) என்றே வழங்கும்  இவ்வம்மனின் பெயர்.

அம்மனின் பெயர்:  எப்படிச் சொன்னாலும் முழுநிறைவே :  பூரணமே.
எல்லோரையும் வாழ்விக்க வேண்டும்.

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

effective, x.e~. = கேட்கும் xகேட்காது. ( colloq.)


ஒரு மருந்து நோயைக் கட்டுப்படுத்தவல்லது,  சரிப்படுத்திவிடும் என்றெல்லாம் எழுத்தில் குறிப்பிடுவார்கள். இந்தக் கடினப் பதங்களையெல்லாம் மக்கள் இயல்பான பேச்சில் கையாளுவதில்லை.

உனக்குச் சோகை பிடித்திருந்தால் இந்த மருந்து கேட்கும் என்று பேச்சில் சொல்வர்.  அகராதிகளைப் பொருத்தவரை,  காதால் கேட்கப்படுவதைத் தான் கேட்கும் என்போம்.

ஆனால் மருந்து நோயைக் கேட்கிறது என்பதை நீங்கள் அறிந்ததுண்டோ?

சோகை நோயில் இரத்த ( அரத்த )  சோகை என்பது கடின வகை என்று கூறுவதுண்டு.  சோகை பிடித்தவன் எப்போதும் உடல் வலிமை குன்றிக் காணப்படுவான். இப்படிப் பேசிக்கொள்வார்கள். நோயைப் பற்றி அறிய வேண்டின் மருத்துவரை நாடவும்.  இப்போது சோகை என்ற சொல்லைக் காண்போம்.

சோர்வு என்பதே நமக்குச் சொல்லப்படும் அறிகுறி.

சோர்தல் >  சோர்கை >  சோகை.  இதில் ஒரு ரகர ஒற்று மறைந்தது.

சோகை என்பது ஒரு நோயின் பெயராய் ஆகிவிட்டது. இதற்கு ஆங்கிலத்தில் எனிமியா என்பர்.  இது நோயோ அல்லது நோயின் அறிகுறியோ என்பதை மருத்துவர்பால் உசாவி அறிக.

ரகர ஒற்று மறைந்த சொற்களை முன் இடுகைகளில் கண்டி மகிழவும்,



B12. Mecobalamin. Neromethyn.  Peripheral Neuropathies.

திருத்தம் பின்.

திங்கள், 17 செப்டம்பர், 2018

மோடிக்கு வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும்  மோடியார்க்  கோர்நற்
சிறந்த பரிசுசீர் ஞாலத்தில்  செப்பின்
வருந்தேர்தல் வெற்றி வழங்குவ தன்றி
அருந்தொண்டிற் கானது சொல்.

எல்லாம் நலமேதான் சூழ்கென்று தொண்டாற்றும்
வல்லார் திருமோடி வாழ்கவாழ் கெந்நாளும்
மக்கள் நலத்திட்டம் மாணுக மாறாமல்
தக்கதே தாவிக் கணம்.

வழங்கவ தன்றி = வழங்க + அதன்றி = வழங்க அது
அன்றி; 
வழங்குவதன்றி எனினும் இதற்கு இணையான 
பொருள் தரும்.

மாணுக :  சிறக்க.

தா இக்கணம் :  தாவிக்கணம்  -  தாவிக்  கணம்..

கணம் என்பது  திரட்சியுமாம்.   தாவி = இடம் மாறி  
மக்கள் திரட்சி -   கணம்   -   ஆகும் என்பதுமாம் . 

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

போற்றியும் பூசாரியும்.

தமிழில் வழங்கும் பூசாரி அல்லது "குருக்கள்" என்ற சொல்லுக்கு நேரான பதமாகப் போற்றி என்ற சொல் மலையாள மொழியில் சிற்றூர்களில் வழக்கில் உள்ளதென்பதை அறிந்தபின்னர், அதை ஓர் இடுகையில் தெரிவித்திருந்தேம்.

பல இடுகைகள் அழிக்கப்பட்டன போலவே கள்ளக் கடவுச்சொற்களுடன் இவ் வலைப்பூவின் உள்ளே புகுந்தோர் ஏனோ அதை அழித்துவிட்டனர்.

ஆனால் இச்சொல் வழங்கும் இடங்கட்குச் சென்று அம்மக்கள் இச்சொல்லைப் பயன்படுத்தாமல்  யாரும் தடுத்துவிட இயலாது ஆகையால் இதனால் இவர்கள் கொள்கைக்குக் கிட்டிய ஏற்றம் என்னவென்பது எமக்குப் புரியவில்லை.

"பழைய போற்றி போய்; புதிய போற்றி வந்நு "  என்று போசுகிறவர்கள் பேசிக்கொண்டுதான் உள்ளனர்.

பூசாரி என்ற சொல்லில்:

பூசை.   ஆர் என்ற பணிவுப்பன்மை விகுதி.   இ என்ற இறுதி விகுதி.  இவைகளில் கூட்டுத்தான் பூசாரி என்ற சொல். பூசை என்பது பூசெய் என்பதன் திரிபு என்று தமிழ்ப்புலவர்கள் கூறியுள்ளனர்.

செய் என்ற சொல் சை என்று திரியும்.

கைச்செய்கை >  கைச்சைகை.   இதில் செய் என்பது சை ஆனது.

நன்செய் புன்செய் என்ற சொல்லின் இறுதியும் நஞ்சை புஞ்சை என்று திரியும்.
இவை ஏற்கத்தக்கவை என்று பேராசிரியர் கா. நமச்சிவாய முதலியார் கூறியுள்ளார்.

சாப்பாட்டைக் குறிக்கும் செய்வம் என்ற சொல்லும் சைவம் என்று திரியும்.
சிவம் என்பதும் சைவம் என்று திரியும் .  இருவேறு சொற்கள் ஒரு முடிபு கொள்ளுதல் இதுவாகும்.   செய் என்பது பயிர்செய்யப்பட்ட உணவுப்பொருளைக் குறிப்பது ஆகும்.  செய்வம் என்பது சைவம் என்று திரிந்தபின் முன்னது வழக்கிழந்தது.

பூசெய் > பூசை.

போற்றி என்பது பூசாரியைக் குறிக்கும் மலையாளச் சொல்.

பூசை+ ஆர் + இ =  பூசார்+ இ =  பூசாரி.

பூஜாரி என்பது அயலாக்கம்.

போற்றி என்று பூசைசெய்வோரைக் குறிக்கும் வழக்கு தமிழரிடை இல்லை.

திருத்தம் பின்


பதிட்டித்தல் பிரதிஷ்டை

பதிட்டித்தல் என்றொரு வினைச்சொல் உள்ளது.  இதற்கு நிறுவுதல் என்று பொருள் கூறலாம். இதன் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

இடுதல் என்ற சொல் பிற்காலத்தில் இட்டித்தல் என்று நீட்டப்பட்டது. அவ்வக்காலத்தினர் தங்கள் கற்பனைக் கேற்பச் சொற்களை நீட்டிக்கொண்டனர். இவற்றுளெல்லாம் எது சரி எது தவறு என்பது வாதமன்று. அவர்களின் பயன்பாட்டுக்கு அது தேவைப்பட்டதா, பொருந்தி அமைந்ததா என்பதே காணற்குரியதாகும். பழமைப்படியே சென்றால் புதுமை தவறாகத் தோன்றலாம். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்பார் பவணந்தி முனிவர் என்னும் இலக்கணியர்.  ஆக அது வழுவன்று.

ஒன்றைப் பதிந்து இட்டு வைத்தல் -  பதி இட்டித்தல்.  ஓர்  ஏட்டிலாயினும் உரிய மேட்டிலாயினும் பதிந்து இட்டுவைத்தல் பதிட்டித்தல் ஆகும். பெரும்பாலும் சிலைகள் இவ்வாறு  இருக்குமிடத்தில் பதிந்து இட்டு வைக்கப்பட்டன.

பதி என்பது அயலாக்கமாக  ப்ரதி என்று திரியும்.இட்டி என்ற இப்புதிய வினையடி இஷ்டி என்றாகும்.

ப்ரதி + இஷ்டி + ஐ =  ப்ரதிஷ்டை ஆகிவிடும்.

அயல் பலுக்குதலில் ஐ முழுமையாக ஒலிக்கப்படுவதில்லை.  ஐ என்பது அ என்றே நின்றுவிடும்.  ஆக அயலார்க்குப் ப்ரதிஷ்ட என்று உருக்கொள்ளும்.

ட்ட என்று டகரம் இரட்டித்து வருங்கால் ஷ்ட என்று திரிதல் அயற்போக்கு ஆகும்.  எடுத்துக்காட்டாக: மனத்தை எங்கு இடுகிறோமோ அங்கு இட்டமிருக்கிறது என்று பொருள்.  இடு + அம் = இட்டம்.  இது பின்னாளில் இஷ்ட என்று மாறியமைந்தது.  இவனைப் பெண் இட்டப்பட்டாள் என்று டகர ஒலிகளை இட்டு இடருறாமல் இஷ்ட என்று மெல்லிதாக்கினார்கள் என்றாலும் இது செந்தமிழியற்கைக்கு ஒத்தது அன்று என்றனர் தமிழ்ப்புலமையினோர்.

கடுமையானது கட்டம்.  இது கடு+ அம் =  கட்டம்.  கடின நிலை என்று பொருள். எந்தப் பேராசிரியன் வந்து புளுகினாலும் இதுதான் பொருள். பின்  அது: கஷ்டம் என்று ஆனது. இப்போது கட்டம் என்ற சொல் இப்பொருளில் வழக்கின்றி ஒழிந்துவிட்டதுபோல் உள்ளது.  நான் கு  கோடுகள் இணைந்து  ஓர் அடைப்பு ஏற்பட்டால் அதைக் கட்டு + அம் =  கட்டம் என்று சொல்கிறோம்.  இது கடினமான நிலை என்ற பொருள்படாமல்  ஓர் கட்டுக்குள் உள்ள நிலை என்று பொருள்படலாம். பல்லவி முடிந்து அடுத்து அனுபல்லவி என்னும் கட்டத்திற்கு வந்துவிட்டோமென்று பாட்டுவாத்தியார் சொல்கிறார். இவ்வாக்கியத்தில் கட்டம் என்ற சொல்லின் பொருளை அறியலாம். பல்லவி அனுபல்லவி சரணம் என்பதை எடுப்பு தொடுப்பு முடிப்பு என்பர் தனித்தமிழாசிரியர். பதிட்டித்தல் என்பது  ப்ரதிட்டை( ப்ரதிஷ்டை) என்றானது இதில் ஓரளவு விளக்கமுறும்.

பதித்து இடுதலே பிரதிஷ்டை,  அது முன் பதிட்டித்தலாகும்,

வடசொல் என்று குறிக்கப்பட்ட எந்தச் சொல்லிலும் வட ஒலிக்குரிய எழுத்துக்களை நீக்கி விட்டால்  அது ஏற்றற்குரிய தமிழ்ச்சொல் ஆகிவிடும் என்றார் தொல்காப்பியனார். "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ"  என்றார்.
கஷ்டம் என்பதில் வடவொலிக்குரிய எழுத்து  ஷ் என்பது.  அதை எடுத்துவிட்டு,  இன்னோர் எழுத்தைப் போடவேண்டும்:  கஷ்ட >  க(ட்)ட.  ஆக டகர ஒற்றுடன் ( எழுத்தொடு  புணர்ந்த ) சொல் அமைந்து விடுகிறது.  இங்கு இரண்டாவதாகச் சொல் என்றது தமிழ்மொழிக்குரிய  சொல்.  வடவெழுத்து நீக்கித்   தமிழ் எழுத்தை இட்டால் சொல் தமிழாகிவிடுகிறது.  இப்படிக் கூறியதற்குக் காரணம் இந்தச் சொற்கள் தமிழ்ச் சொற்கள். வடக்கே சென்று வட எழுத்துக்கள் புகுந்தன.  அதாவது கட்ட > கஷ்ட ஆகிற்று,  அதை மீண்டும் பழைய நிலைக்குத் திருப்ப கஷ்ட என்பதைக் கட்ட என்று மாற்றவேண்டும் என்றார் தொல்காப்பியனார்.  இந்த நூற்பாவுக்குப் பிறர் எழுதியவை தள்ளுபடி செய்யப்பட்டது அறிக. வடசொல் என்பது வடக்குத் திசையில் பேசப்பட்ட பாணி.  அல்லது மரத்தடியில் பேசப்பட்ட பாணி.  எதுவானாலும் நூற்பாவின் பொருள் இதுதான்.   ஒரீஇ என்றால் விலக்கி.  தொல்காப்பியர் கூறிய வடசொல் என்பது  தமிழ்ச் சொற்கள் திரிந்து வழங்கியமை ஆகும்.

வடசொற் கிளவி என்று தொடங்கும் நூற்பாவுக்கு பலர் விளக்கம் வரைந்துள்ளனர் என்றாலும் ஓர் எளிய நூற்பாவை எடுத்துப் பூனையைப் புலியாக்கிப் பொருள்கூறியுள்ளனர்.  இதுபோல்வது தேவையற்ற திறமை ஆகும்.

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. 5

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். 6

தொல்காப்பியம் சொல்லதிகாரம்,

பொருள்:

வடசொல் -  தமிழ் நாட்டின் வடக்கில் வழங்கும் அல்லது மரத்தடியில் வழங்கும்  பேச்சின்;   கிளவி -  சொற்கள்  ;  வட எழுத்து ஒரீஇ  -  வட ஒலிகளுக்கு உரிய எழுத்துக்களை விலக்கி;   எழுத்தொடு புணர்ந்த -  விலக்கிய எழுத்துக்களுக்கு உரிய தமிழ் எழுத்தை  ஆங்கு இட்டு  இணைக்க;   சொல் ஆகும்மே - அவை  செய்யுட்குரிய (தமிழ்ச்) சொற்களாகிவி டும்.

சிதைந்தன -  உருமாறிவிட்டவை;  வரினும் - வந்தாலும்;  இயைந்தன -  மீட்டுருவாக்கம் செய்து சேர்க்கக்கூடியவற்றை;   வரையார் -  விலக்காமல் ஏற்றுக்கொள்க . புலவர் ஏற்பர் என்பது.

வடம் : ஆலமரத்தடி.    ஆலயங்கள் இங்குத்தாம் தோன்றி வளர்ந்தன.  ஆல்+ அ + அம்:  ஆலயம்.   இது ஆலமரத்திடம் என்று பொருள்படும்.   ஆல்: மரப்பெயர்; அ - அவ்விடம்.  அம்: விகுதி.  ஆலோசனைகளும் இங்குத்தாம் நடைபெற்றன;  ஆல் -  ஆலமரத்தடி; ஓயனை> ஓசனை > யோசனை.  ஓய்ந்து சிந்தித்தல்.  ஆலமர் கடவுள்:  சிவபெருமான். அல்லது பிறவும் இருந்திருக்கலாம். இதை நான் ஆராயவில்லை.  ஆக வடமொழி ஆல் மொழி ஆகலாம்.

ஆலமரத்தடியில் சாமி கும்பிட்ட மொழி ஆகும்.   ஆர் என்பது பணிவுப் பன்மை விகுதி;  இய -  அடைவு.  ஆரிய - பணிதற்குரிய ( பயன்பாட்டுமொழி).   வெளிநாட்டு மொழி என்பதற்குரிய குறிகள் இல.

வட என்பது திசை குறிக்குமானால்.  திசைச்சொல்லின் இது ஒரு வகையாகிறது.  வடசொல் என்பது  தனியாகச் சொல்லப்படக் காரணம்?  தமிழ்நாட்டின் இற்றை எல்லைகள் படி பார்த்தால்,  வடதிசை நீங்கப்   பிற முப்புறமும் கடல். கடலில் வழங்கிய சொற்கள்?  கடற்கு அப்பாலிருந்த வந்த  சொற்கள்?  அவைதாம் திசைச்சொற்களோ?  பாருங்கள்:

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி. 4 

என்பதால் செந்தமிழை ஒட்டி யிருந்த பன்னிரண்டு நிலத்திலும் வழங்கியவை திசைச்சொற்கள். இவையும் செந்தமிழைச் சேர்ந்தவை என்றே நூற்பா சொல்கிறது. வேறுபாடுகள் இருந்திருக்கலாம்.  கொடுந்தமிழ் என்பது பொருத்தமான வரணணையாகத் தோன்றவில்லை.

அடுத்து:  அத்தியாயம் என்ற சொல் ஆய்வோம்.


சனி, 15 செப்டம்பர், 2018

அகத்திருக்கும் ஆத்துமா; பதிந்திருப்போர் மன்பதை

அகத்து இருப்பதாக உணரப்படுவது ஆத்துமா. இதைச் சுருக்கி அழகாக ஆத்மா என்றும் எழுதுவார்கள்.

வீட்டிலிருந்து வீட்டைப் பார்த்துக்கொண்டு பிள்ளைகுட்டிகளையும் கவனித்துக்கொண்டு கணவனுக்கு பணிவிடைகள் புரிந்துகொண்டு இவற்றின்மூலம் மன்பதைக்கு ( =  சமுதாயத்துக்கு) நலம்புரிவாள் ஆத்துக்காரி.

தமிழின் தன்மை வேறு.  ஆங்கிலத்தின் இயல்பு வேறு. எமக்கு ஆங்கிலம்போல் பேசுதல்தான் பிடிக்கிறது.  யார் எந்த மந்திரத்தை எந்தக் காதில் ஓதினாலும் எமக்குப் பிடித்ததையே செய்வோம். அப்படியானால் ஆத்துக்காரியை ஆங்கிலக்காரியைப்போல் உச்சரித்து இன்பம் காண்பது வேண்டுவதே.

ஆத்துக்காரி > ஆத்கேரி  :  இது நன்றாக இருக்கிறதா?

நன்றாக இல்லையென்றால் இந்தி மொழிப் பாணியில் "ஆத்கார்"  அல்லது "ஆத்கர்"  வெகு விமரிசையாக இருக்கும்.

அல்லது மண்டரின் மொழிப் பாணியில்:  ஆ தூ காங்  என்னலாம்.  அதுவும் இனிமைதான்.

எல்லாம் இனிமை.  எங்கும் இனிமை. எமக்குப் பூனை கத்தினாலும் இனிமையே.

மேலே மன்பதை என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தேம்.  அதை ஆய்ந்து இப்போது தெளிவாக்கி உலவவிடுவோம்.

மன் என்பது அடிச்சொல்.

மன் + இது + அன் =  மனிதன்.
மன் >  மான்:   மான் + து + அன் = மாந்தன்.
( சொல்லாக்கத்தில் மான்+து = மான்று என்று வராமல் மான்+து  = மாந்து என்று வருவது ஒரு வகை.)

~ன்ற என்று வராமல்  ~ன்த   ~ந்த என்று ஏன் வருகிறது என்றால்:

அப்படியும் வரும்.  வேண்டிய வேண்டியாங்கு வரும்.

ஈன்+தல் என்பது  ஈந்தல் என்னாமல் ஈன்றல் என்று வந்தது.
ஆனால் மான்+து + அன் என்பது மான்+தன் என்று நின்று  மாந்தன் என்று முடிபு கொள்ளும்.

இருவகையாகவும் இனிமை கருதிச் சொல்லாக்கி உள்ளனர்.

மனிதன் என்பதில் முழு "  இது " பயன்படுத்திவிட்டு  மாந்தனில்  து மட்டும் பயன்படுத்தியுள்ளனர்.    சொல்லை ஆக்கியவனே அரசு.  சட்டியை எப்படி உருவாக்க வேண்டுமென்று குயவனே தீர்மானிக்கிறான்.  சமையல்காரன் அந்தச் சட்டி வேண்டாமென்றால் இன்னொரு சட்டியைப் போட்டு ஆக்கிக்கொள்ளவேண்டியதுதான்.

மன்  >  மான் இவை இரண்டும் அடிச்சொற்கள்.

இனி மன் என்பதிலிருந்து சமுதாயத்தைக் குறிக்க (குமுகம் அல்லது குமுகாயம்)  ஒரு சொல்லை உருவாக்க வேண்டுமென்றால்:

மன்:  மனித வருக்கம் குறிக்கும் அடிச்சொல்.
பலரும் வருக்கத்தில் பதிவு பெற்று வாழ்கின்றனர்.

மன் + பதி + ஐ =  மன் + பத் + ஐ = மன்பதை.

இகரம் வீழ்ந்தது. கெட்டது .  அல்லது வீசப்பட்டது.

மன்பதை என்பது குமுகம்.  பல மனிதர் ஒன்றுபட்டு இருப்பது.

( பத் ) >  (பது ) > (பதுங்கு  ).
( பத் ) >  (பது )  > ( பதை  )  இதைப் பின் விளக்குவோம். பதைத்தல்.
(பத் )  > ( பதை ) > மன் +( பதை)   =  மன்பதை.   (  மனிதர்கள் பதிந்து வாழும் நிலை).
பதி வந்த பதிவுச் சொற்கள் பல.  தளபதி,  சேனாதிபதி,  அதிபதி,  பதிவிரதை என்ற வழிச் சென்று காண்க.

இனி ஆத்மா என்பதையும் அகத்துமா என்பதிலிருந்து கண்டோம்.  அகத்திருக்கும் பெரியது ஆத்துமா எனினும் அமையும்.  சற்று வேறு பட்ட விளக்கமும் ஏற்புடைத்தே.  இதற்கு ஓர்  இடுகையே உள்ளது. காண்க.

உலகில் பலவும் அறிந்தோரும் உளர்.  ஒன்றே ஒன்றுதான் என்று பிடித்துக் தொங்கி விழுந்தோரும் உளர்.  உலகம் பலவிதம். 

ஆத்துமா >  ஆத்மா பற்றி:





அகத்து என்பது ஆத்து என்று மாறும். தெரியாதபோது ஆத்துக்காரியைக் கேட்டு அறியவேண்டும்.  ஆத்காரியையும் கேட்கலாம்.

கைகேயி

கைகேயி பற்றி ஓர் இடுகையில் முன்னர் விளக்கியிருந்தோம்.  அது இப்போது இவ்வலைப்பூவில் கிட்டவில்லை. பழைய எம்கையெழுத்துப் படியிலும் நெளிபொதிவு வட்டுக்களிலும் உள்ளது.  நன்`கு சிந்தித்து எழுதியது ஆதலின் அதனை மறுபார்வை செய்யாமலே மனத்தினின்று மீட்டு இங்கு எழுதுகின்றோம்.

கைகேயி என்பவள் இராமாயணத்தில் வரும் ஒரு கதைப்பாத்திரம். தசரதனின் மனைவி. பரதன் என்ற பாத்திரத்தின் தாய்.

கை என்பது தமிழ்ச்சொல்.   தோளிலிருந்து தொடரும் இரு உறுப்புகள். கரம் என்பது மற்றொரு சொல்.

கேசம் என்பது முடி. இங்கு தலைமுடி.  கேசி முடியை உடையவள். இது கேயி என்றும் திரியும்.  சகர யகர ஒலிமாற்றம்.

கைவரை நீண்ட முடி உடையவள். முடியழகி.

கேகய நாடு என்று ஒரு நாடு சொல்லப்படுகிறது.  கேகய நாட்டினள் "கைகேயி"
என்றும் சொல்லமைப்பைத்  தருவர். கேகய நாடு என்பது கைவரை முடியுடைய பெண்ணின் பிறந்த ஊர் என்றும் விரிப்புறலாம். இராமாயணப் பெயர்களில் பல இயற்பெயர்கள் அல்ல.  பத்து இரதங்களை உடையவன் தசரதன் என்பது ஓர் காரணப்பெயர்.

பேச்சில்:

1.   நீட்டமுடிக் காரி:    மறுபெயர்:  கைகேயி.

2   நீட்டமுடிக்காரியின் ஊர்:    மறுபெயர்:   கேகய.

பிற சுவையான திரிபுகள்:

கேரளம் - கைராளி.
சீலம் -  சைலம் > ஷைலஜா.  ஒழுக்கத்தின் உறைவிடமான அம்மன். ஒழுக்கமான வாழ்வில் தோன்றியவள்.

தமிழில்:

தைவருதல் -  தேய்த்தல்.   [ தேய் > தை.]  இது ஏகாரம் ஐகாரமாய்த் திரிதல்.
 இன்னும் பல திரிபுகள் உள்ளன;  அத்துணை எளிதல்ல.

தை >  தைத்தல்.

தைதல் என்ற தன்வினைச் சொல் இல்லை.(  தைகிறான், தைகிறாள் இன்ன பிற )  வழக்கிழந்தது.  இது நடந்தபின் அதைச் சரிசெய்ய தைவருதல் என்ற வினை தோன்றிற்று.  இது சங்க இலக்கியங்களில் கிட்டும் சொல். தைலம் என்ற சொல்லும் மிக்கப் பழையதே. அது சங்க இலக்கியத்தில் இல்லாவிட்டாலும் பழையதுதான். யாரும் எழுதிவைக்காத சொல்லெல்லாம் புதியது என்பது மடமையாகும்.  வீட்டில் தேய்க்கும் மருந்து அல்லது எண்ணெய்.  வீட்டுப் பேச்சில் வாழ்ந்து நம்மிடம் வந்துள்ளது.  தைலம் பற்றிய இடுகை காண்க.

வான்மீகி ஒரு சங்கப்புலவன் என்பது எம் முடிபு. பிறர் ஒப்புவதால் அல்லது ஒப்பவில்லை என்றால் ....................................................

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

அகம் பிரமஸ்மி

இவ்வுலகில் எத்தனையே உடல்கள் உயிருடன் உலவுகின்றன. இவற்றின் உயிர்கள் இறைவனை ஒப்பிடுங்கால் மிக்கச் சிற்றளவிலானவை. எல்லையற்றோன் இறைவன்  --  என்று எல்லா வேதங்களும் ஓதுகின்றன.

உடல் நமக்கு உள்ளது;  அதனுள் ஆன்மாவும் உள்ளது.  நாம் ஒவ்வொருவரும் நான் என்று தன்னைக் குறித்துக்கொள்ளும்போது  அந்த "நான் " எது?  உயிரா அல்லது உடலா?

நான் என்பது இவ்வுடலில்லை.  நான் வெளியேறிய பின் இவ்வுடல் அசைவற்று இயக்கமற்று விறகுபோல் கிடக்கும்.  அப்போது  அது எல்லா உணர்ச்சிகளையும் இழந்து கிடக்கும். உயிர் போய் விட்டதென்பார்கள். " நேரமாகிவிட்டது;  சீக்கிரம் தூக்குங்கள்" என்று பேசிக்கொள்வார்கள்.

குடம்பை தனித்தொழியப் புள் பறந்துவிட்டது என்று வள்ளுவனார் கூறியது இந்நிலைக்கு முற்றப் பொருந்துமொரு வாக்கியமாகும்.  அப்போது சிலர் துயர்தாங்காது அழுதுகொண்டிருப்பர். பட்டினத்தடிகள் சொன்னதுபோல இன்று செத்த பிணத்துக்கு இனிச் சாகும் பிணங்கள் அழுதுகொண்டிருக்கின்றன என்பதே முற்றுமுண்மை ஆகும்.

இக்குடம்பை தனித்தொழியப் பறந்துவிட்டதே அதுதான் ஆன்மாவாகும்.  நான் என்று நாமெல்லாம் குறித்துக்கொள்வது இவ்வுடலன்று; இவ் ஆன்மாவே யாகும்.

இவ்வுடல்பால் உள்ள பற்றினை முற்றும் அறுக்கவேண்டுமென்பதே பெரியோர் நமக்குரைப்பது ஆகும்.   தாயுமானவர் கூறியதற்கொப்ப  எல்லா மலங்களும் ஊறித் ததும்பும் மெய்யுடன் உங்கட்கு உள்ள தொடர்புதான் என்ன?
உங்கள் உடல்கள் நீங்கள் அல்ல.

ஒவ்வொருவரும் நான் இவ்வுடல் அன்று என்று உணர்வேண்டும். அகத்திருப்போன் உங்கள் பெருமான் ஆவான். அவன் ஆன்மாவுடன் ஒற்றுமை முற்றுடையோன்.  ஒரு பெருங்காந்தத்திலிருந்து தெறித்து விழுந்த துண்டு கவர்ந்துகொள்ளுமாற்றலும் உடையது.  அதுபோலவே.

நான் வேறு. இவ்வுடல் வேறு.  " அகம் பிரமஸ்மி".

நான் இவ்வுடல் என்பதோ அகங்கார மெனப்படும். இஃது பூதவுடல்.

பூத்தல் - தோன்றுதல்.  பூ+ து + அம் =  பூதம்.  (தோன்றியது).   தோன்றிய உடல் இறப்பது.  தோன்றாமை ஆன்மாவின் அழிவிலா உண்மை.

பூ -  பூத்தல் : தோன்றுதல்.  பூ+ம் + இ = பூமி:  தோன்றியது.  மகர ஒற்று ஓர் இணைப்பொலியாகும்.

யானே பிரம்மன். இவ்வுடல் வேறு.

வடகிழக்கு அசாமிலிருந்து கும்பகோணச் செலவு.

வடகிழக்கி      னின்று  தொடர்வண்டிப் பயணம்
விடமுடிந்த  தில்லை விழுநீட்சி  உடைத்தாம்
கடகடவென்  றோசை செவிகட்கே இனித்தாம்
கடவுளுந்தம் அன்பில் கனிபோலும் அளித்தார்.




  
திரு மோகன் ஐயப்ப குருசாமி அவர்கள் வடகிழக்கு மேகாலயா
அசாம்  ஷில்லோங்கிலிருந்து தென் திசைக் கும்பகோணம் பயணமானார்.
இப்பயணம் இயற்கை அழகை விரித்துணர்த்தியது.  பல கோவில்களைக்
காணச் செய்து இறும்பூது எய்துவித்தது. தம் இனிய பயணத்தை முடித்துக் கொண்டவர்களாய் அவரும் குழுவினரும் தென்னாடு மேவினர்.
இப்படத்தில் அவர்கள் பயணம் செய்துகொண்டிருப்பதைக் காணலாம்.






 உங்கள்  வடகிழக்கு இந்தியப் பயணம் எப்போது?

பயணமும் மகிழ்ச்சி தரும்.....

அடிக்குறிப்புகள்

தொடர்வண்டி -  கோத்திழுவை வண்டி  ( ட்ரெய்ன்)
இனித்தாம் -  இது முன்னும் பின்னும் வரும் அடிகளில் இறுதிச் சீர்களின் இயைபு கருதி "வலிக்கும்வழி வலித்தல்" என்னும் உத்தி பின்பற்றி வல்லெழுத்து மிகுக்கப்பட்டது. இவ்வுத்தி தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டது காண்க.
=  இனிதாம்.
உடைத்தாம் = உடையதாம்.




நரகா சூரன் ( நரகாசுரன், நரக அசுரன் )

நரகாசூரன் பற்றிய கதைகள் அல்லது தொன்மப் பதிவுகள் தீபாவளிப் பண்டிகையின் போதுதான் வெளிவந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும்.

நரகா சூரன் என்பவன் கிருஷ்ண பரமாத்மாவினுடைய மகன் என்றும் பரமாத்மாவே  அவனைக் கொன்றுவிட்டார் என்றும் கூறுவதுண்டு. வேறு வகையில் சொல்லப்பட்ட கதைகளும் பல.

விட்ணு அல்லது விஷ்ணு நீரின் அமைப்பினர் (  அம்சம் _).  இதற்குக் காரணம் கடலும் விண்ணும் நீல நிறம்.  இரண்டுமே மழை தருவன..  கடலின் நீரிலிருந்து எழுந்தது என்ற கருத்தை " நீரகம்"  எனற சொல் குறிக்கிறது.  இதுபின் நரக என்று மாறிற்று.  சூறாவளி என்ற சொல்லில் உள்ள சூர் என்பது
சூரன் ஆயிற்று.  நீரக சூர என்பதே பெயர்.  இதுபின் நரகாசூரன் என்று மாறியமைந்தது.

இன்றும் மொழியில் பல சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி வழங்குகின்றன.
றகரம் என்பது இரு ரகரங்களை இணைத்த எழுத்து.  இதை( றகரத்தை) உற்று ஆய்ந்து உணரலாம்.  றகரம் ஏற்பட்ட பின்  புதிய விதிகள் தோன்றிப் பின்னர் மரபுகளாயின.. வேறுபாடின்றி வழங்கும் சொற்களை இலக்கண நூல்களில் காணலாம்.

சூறாவளி, சூராவளி,  சூர,   அசுர என்பவற்றில் வரும் ரகரங்களை வைத்து வாதிடலாகாது.

சூர் சூரை சூறை என்பன ஒலிக்குறிப்பு அடிப்படையில் எழுந்த சொற்களாகலாம்.

நாராயணன் என்ற பெயருக்கு  நீராயினன் என்பதே மூலச்சொல்.  இது விண், கடல் மேகம் எல்லாவற்றையும் உட்படுத்தும்.

இச் "சமய"க் கருத்துகள் இயற்கை வணக்கத்திலிருந்து எழுந்தவை.  மாரி என்ற அம்மன் பெயரும் இன்றும் மழையைக் குறிக்கிறது.  மேகங்கள் கறுத்து மழை பொழிகிறது.  காளி என்பது இக்கருத்தை வலியுறுத்துவதே. இயற்கை அழகைப் பராவியதே முருகவணக்கம்.  நாற் கணங்களின் ஆட்சியனே கணபதி.செம்மை ஒளியே சிவமாகும். சூரிய சந்திரர் தேவர்கள் என்பர்.  கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார் என்பதே இந்துக் கொள்கை ஆகும்.

எல்லாம் இயக்கமுடையவை ஆதலின் அவற்றில் கடவுள் இல்லை என்று கூறுதல் இயலாது.

விண்ணு அல்லது விஷ்ணுவில் தோன்/றியதே சூறாவளி. அது  விண்ணனின் பிள்ளை என்பதில் எந்த முரணும் இல்லை.

நீரில் விழுந்திறத்தலே நீரக - நரகச் சாவு. நரகம் என்று ஒன்றில்லை என்று வாதிட்டால் அவரைக் கடலில் களைந்து அதை மெய்ப்பிக்கலாம். இன்று நீரகக் குண்டு என்ற ஹைட்ரோஜன் குண்டு வேறு உள்ளது. அதுவும் நரகமே. அது நீரின் அமைப்பாக உள்ளது.

திருத்தம் பின்

புதன், 12 செப்டம்பர், 2018

நீக்கமற நிறைந்த பூரணானந்தம்





பார்க்கின்றேன் பார்க்குமிடம்  எங்குமெங்கும் ---  ஒரு
நீக்கமற  நிறைந்துள்ளான்  மகிழ் பூரணன்;
மேற்கினிலே கிழக்கினிலே திசைஎட்டிலும் --- அவன்
மிசையிருப்பான் அகத்திருப்பான் இடமெங்கிலும்.
தூக்கமதில் இணைகையிலே தோய்ந்திருப்பான் --- இரு
தோற்றுருக்கள் தம்மிலுமே பகுந்தும்நிற்பான்;
ஆக்கத்திலும் வந்து  முன்நிற்கிறான் --- இந்த
அகிலமெல் லாமவனே அயிர்ப்பதில்லை.

பாடல்: சிவமாலா.
படங்கள் உதவியவர்: மோகன் (குருசாமி).

 அரும்பொருள்:

மிசை -  மேலே;    அகத்து -  உள்ளே;    எங்கிலும் -  எங்கேயும்;
பகுந்து  -  வெவ்வேறாக;    அகிலம் - உலகம்.
அயிர்ப்பதில்லை -  சந்தேகமடைவதில்லை.




இறைப்பற்றர் மோகன்
(ஐயப்ப குருசாமி)




பொங்கு பொக்கம் பொக்கிடம் பொக்கிஷம்

முதலில் பொக்கம் என்ற மலையாளச்சொல்லை அறிந்துகொள்வீராயின் பொக்கிஷம் என்பதை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சட்டியில் பாயசம் செய்யும்போது  அது வெம்மை குறைந்த நிலையில் பாதி மட்டத்தில் இருந்து கொதித்துக் கொதித்து அதன் மட்டம் உயர்ந்து வெளியில் வழியத் தொடங்கிவிடுகிறது.  வழிநிலைக்கு வளர்ந்த பின்பு அது பொங்குவதாகக் கூறுவோம். கேரளாவில் ஒரு பெண் உயரமாக வளர்ந்துவிட்டால் " அவள் பொங்ஙி  (பொங்கி)"  என்று சொல்வர்,  உயரத்தைப் பொக்கம் என்பர்.  மட்டம் உயர்ந்துவிட்டதை இது குறிக்கிறது.

திரவியம் என்ற சொல்லில் எந்த 'மகிமை" யும் இல்லை.  திரட்டு என்பது சொல். அதன் அடி  திர  -  திரள் என்பது.    திர + இயம் =  திரவியம்.  மனிதன் திரட்டி வைத்துக்கொள்வது திரவியம்.  வேண்டாமென்று எறிந்துவிடுவது குப்பை. பொருளுக்குத் தரப்ப்டும் தரமும் மதிப்பும் மனப்பதிவு முறையிலானது. சொல் மனம் தரும் மதிப்பு முறையில் அமைவதில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

குப்பைக்கும் பொக்கிடத்துக்கும் வேறுபாடு காணமுடியாவிட்டால் நீர் ஞானி ஆகிவிட்டீர்.

திரட்டப்படும் பொருள் மட்டம் உயர்ந்துவரும்.  பொன்னையும் மணியையும் ஒரு சட்டியில் இட்டு வைக்க,  சேரச்சேர  மட்டம்   உயரும்/  ஆகவே அது பொங்குகிறது.  பொக்கம் கூடிவிட்டது. சேர்த்துவைக்கும் இடம் பொக்கிடம் ஆகிறது. பொங்குமாறு  இடுவதே பொங்கிடம்.  தமிழியல்புப் படி பொங்கு + இடம் = பொக்கிடம் ஆகும்.   இரும்பு பாதை > இருப்புப்பாதை;  இரும்பு பெட்டி - இருப்புப் பெட்டி. கரும்பு சாறு :  கருப்பஞ்சாறு.  தமிழ்ப்புலவர்கள் இதனை வலித்தல் விகாரம் என்பர்.   மிகுந்து நிற்றலே மிகு> விகு> விகு+ ஆர் + அம் = விகாரம்.  ஆர்தல்: சூழ்தல்.  சுற்றிலும் மிகுந்து நிற்றல் விகாரம். மிகுவது வேறு உருக்கொள்ளும். ஆகவே வேறுபாடு அடைதல் என்பது பெறப்பட்ட பொருள்.
உறுபொருள் வேறு. பெறுபொருள் வேறு.

இது போலும் திரிபுகள் பல.  ஒன்று:  மிஞ்சு > விஞ்சு.  இன்னொன்று: மிகுதி > விகுதி.

எதை எங்கு இடுகிறோமோ அங்குதான் அதற்கு இடம்//  இடு+ அம் =  இடம். இடமென்ற சொல்லிலும் எளிய கருத்தே அடங்கியுள்ளது.  இப்படி மிக்க எளிய கருத்துக்களிலிருந்து தோன்றி இயற்கையாக வளர்ந்ததே தமிழ் மொழி.  ஆகவே  அதனை இயன்மொழி என்று சொல்கிறோம்.

பொக்கிடம் என்ற சொல்லைப் பல ஆண்டுகட்கு முன் விளக்கிச் சொல்லி இருக்கின்றேன். இன்று விளக்க ஒரு வாய்ப்புக் கிட்டியது மகிழ்ச்சியே ஆகும்.

பண்டை வழக்கில் பிள்ளை இல்லாதவனுக்கு எந்த மதிப்பும் உயர்வும் இல்லை.  இதற்குக் காரணம் அவன் தொழிலை அவன் பிள்ளைகள் மேற்கொண்டு பொருளியல் விரிவுற்று பிழைப்பு உறுதி பெற்றது.   மக என்றால் பிள்ளை.  மகமையே மகிமை என்று திரிந்தது.

மேற்படி முறையில்  விளக்குவது மகிமை என்ற சொல்லுக்குப் போதுமானது.  மக இம் மெய் என்று விரிக்கலாம்.   இம் மெய் =  இந்த மனிதன் ( உடல்)   மக =  பிள்ளைகளை உடையது  எனினும் அதுவே.

பொக்கிடம் என்பது பொக்கிஷம் என்று   மெருகூட்டப்பட்டது.  மக மை என்பது மகிமை > மஹிமை என்று பூசிக்கொண்டது.    அழகு படுத்தும் நம் கற்பனைகளுக்கு ஏற்ப எச்சொல்லையும் அழகுபடுத்திக்கொள்ள அறியாதவன் அல்லன் மனிதன் என்பவன்.

மக + து + அம்  =  மகத்து + அம் =  மகத்து(வ்)(அ)ம் =  மகத்துவம்.   வ்+ அ = வ.
வ் :  வகர உடம்படு மெய்.    து: இது உடையது என்பது.   அம்:  அமைவு அல்லது வெறும் விகுதி. துவம் என்பது தமிழில் புனைவுற்ற ஒரு சொல்லிறுதி அல்லது ஈறு. 

ஷ என்ற ஒலியையும் ஹ என்ற ஒலியையும் பிற்காலத்தில் மனிதன் மொழியில் நுழைத்துக்கொண்டு மகிழ்ந்தது அவன் மன வளர்ச்சியன்றிப் பிறிதில்லை. தான் இருக்குமிடத்தைப் பிறன் அறியாமல் விளையாட அறிந்த மனிதன் எல்லாவற்றிலும் மறைத்து இயங்குவதிலும் மன மகிழ்ச்சி  அடைந்தது ஒரு வளர்ச்சி என்றே கருதவேண்டும்.

பொங்கும்படியாக இட்டுவைத்தால் அது பொங்கு இடு அம் பொக்கிடம் .

எழுத்துகள் மாறின் திருத்தம் பெறும்.





துயில்கொண்ட மூளை

பிறந்தநாள் கொண்டாடிப் பின்பிரியா  அன்பால்
விருந்துணவு  இட்டாலும் விந்தை ---- பொருந்தும்
அருந்துமின் பத்தால் மகிழ்ச்சியே  ஆகா
திருந்தினிய மூளைத் துயில்.

கருத்து:  மகிழ்ச்சி மிகுந்துவிட்டால் மூளை உறங்கிவிடுகிறது.

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

அசாம் எழில்

எழில்தானும் கொஞ்சும்  இயற்கை   வளமார்
பொழிலென்று யாரும் புகலும்  ---- விழிஈர்
அசாமையே  கண்டார்  அதுவாமா  னந்தம்
திசாமுகம்  எங்குமே தேன்


.

அன்பு அனுப்பு அன் அண் பொருள் அறிதல்

அனுப்பு என்ற சுட்டடிச் சொல்

தமிழ் மொழியில் சுட்டுச் சொற்கள் எவை என்றால் அவை அகரம், இகரம் மற்றும் உகரம் முதலியவை. தமிழ் மொழியில் மிகப் பலவாகிய பதங்கள்
இவற்றைக் கொண்டு இயல்பான முறையில் உருவானவை ஆகும்.

அனுப்பு என்ற சொல்லுக்குச் சிலர் செலுத்து, வருத்து என்றவற்றை நிகர்ச்சொற்களாய் வலிந்து எழுதுவதுமுண்டு. அனுப்பு என்பதே இன்றமிழ்ச் சொல் ஆதாலால் பொருந்துமிடத்து அதையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

அ என்ற தலையெழுத்து அங்கு என்று பொருள் படுவது. இதனின்று அமைந்த அன்~ மற்றும் அண்~ என்பவை அணுகு, அடுத்துச்செல், பக்கத்தில் போ என்று பொருள்படுவது. அண் ( அணுகு ) என்பது அன் என்றும் வரும். அ என்பதே சுட்டு மூலம். அன் அண் என்பன அதனின்று வளர்ந்த மிகுதிகள்.

உ என்ற இரண்டாம் எழுந்து உங்கு அல்லது முன் என்று பொருள்தரும்.

பு என்பது ஒரு வினையாக்க விகுதி.

அன் + +பு என்பது முன் போகும்படி செய் என்பதே.

எல்லாரையும் அணைத்துச் செல் என்னும்போது அண் என்பதன் பொருளை அணை என்பதில் தெரிந்துகொள்ளுங்கள். அண் என்பது அங்கிருப்பதனை உட்படுத்திக்கொள்வது என்பதாகப் பொருள்தரும். அனைத்தும், அனைவரும் என்ற பதங்களில் இச்சொற்கள் எல்லோரையும் உட்படுத்தியே செல்கிறது. இது பொருளின்படி பார்த்தால் அணைவரும், அணைத்தும் என்றுகூட அமைந்திருக்கலாம். பொருளில் அழிவில்லை என்றாலும் சொல் அனைத்து, அனைவரும் என்றிருப்பதால் மரபின்படி அனை என்றுதான் நாம் சொற்றொடக்கம் செய்கின்றோம் என்பதறிக. ஆகவே அண் = அன்.

ஆதலின் அன்+ + பு என்பது முன் அடுத்துப் போம்படி செய் என்பது.

அன் என்பது மன நெருக்கத்தை குறிக்கவும் வரும் அடியாகும். அன்பில் இருவர் நெருக்கம் கொள்வது அறிக. அன் - அன்பு.  பு விகுதி.   அன் என்பதே அடி.   0னகரத்துக்குப் பிந்தியது ணகரம்.  இரு சுழிகள் இட்டபின்னரே மூன்றாவதை இடுகிறோம்.  தேகிகள் இருவர் நெருங்கிப் பழகுதலே பின்னர் அவர்களிடை மன இணைப்பு உண்டானதாக அறியப்படும்.

இன்னும் ஆழ்ந்து சிந்தியுங்கள். அன்பு என்பதற்கும் அனுப்பு என்பதற்கும் ஓர் உகரமே வேறுபாடு. ஒன்று அன்+பு. இன்னொன்று அன்+ +பு. அன்பில் மனத்தை அனுப்புகிறோம். அனுப்பு என்பதில் பொருளையோ மனிதரையோ அனுப்புகிறோம். எல்லாம் அடுத்து நெருங்குவதுதான். நெருங்கும் பொருளிலே வேறுபாடு. இப்படி அறியவே, அனுப்பு என்பதும் நல்ல தமிழ் என்பது வேறுவிளக்கம் வேண்டாமல் நன்`கு புரியும்.

மலையாளத்தில் அயிச்சு என்பர். அனுப்பினேன், அனுப்பினான் என்பவையும் ஏனைப் பொருளுருக்களும். அ இ அங்கு செலுத்து, இங்கிருந்து என்பதே சொல்.  அயிச்சு என்னாமல் இயச்சு என்று சொல் அமைந்திருக்கலாம்.  ஆனால் மொழியில் அப்படி அமையவில்லை. அமைந்தவற்றுக்கே இலக்கணம். அமையாதன உட்படாதனவே.  இதன் காரணம் இயங்கு என்று ஒரு சொல் இருப்பதே.  இ+அ+கு:  இயங்கு.  இப்படிச் சொற்களை ஆய்ந்து முரண்களையோ பிற வடிவங்களையோ கண்டு வாதிடாமல் மரபு போற்றவேண்டும்.  ஓர் எல்லைக்குப்பின் மரபு குறுக்கிட்டு வாதத்தை நிறுத்திவிடும்.  நாட்டு எல்லை போல்தான்.  சிங்கப்பூர் எல்லை ஜொகூர் நீரிணை வரைதான். மொழியும் அப்படியே. எல்லையே மரபு.

காரணங்களை அறிந்து மரபுடன் பொருத்தி அகமிக மகிழ்வீர்.

திருத்தம் பின்.