செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தீபாவளிப்பொருள். & தீபாவளி பொருள் difference

தமிழ் இலக்கணத்தின்படி சில சொற்புணர்ச்சிகளில் வலி மிகும்.  அப்படியென்றால்  வல்லின எழுத்து மிகுந்து வரும்.  எடுத்துக்காட்டு:

தீபாவளி + பொருள் =  தீபாவளிப்பொருள்.  

இதன் பொருள் என்னவென்றால்  தீபாவளிக்குப்  பயன்படும்  உணவு  சிற்றுண்டிகள் ,  மற்றும் ஆடை அலங்காரப் பொருள்கள் முதலானவை என்பதாகும் .

Oct 21, 2014, 
மேற்கண்ட 
மேற்கண்ட இடுகைத் தலைப்பில் தீபாவளி  பொருள் என்று  வந்திருப்பதால் வலி மிகவில்லை.  இந்தச் சொற்றொடரை விரித்தால்  தீபாவளி என்னும் சொல்லின் பொருள் என்று  போதரும்.   இதனை  தீபாவளி :  பொருள்  என்றோ   தீபாவளி -  பொருள்  என்றோ  நிறுத்தக் குறிகளுடன்  (punctuation )  எழுதலாம்.

இத்தொடர் சரியாகவே பதிவாகி இருப்பதால்  மகிழ்ச்சி யன்றி வேறில்லை.

தட்டச்சுப் பிழைகள்  காணப்படின்  சுட்டிக்காட்டுவீர்கள் என்று  நம்புகிறோம்.

நன்றி முன் உரித்தாகுக /


திரவியம்.

தமிழுரை  நாவினார்  சொற்களில் இடையிலோர் ளகர  ஒற்று இருப்பதைப்  பெரும்பாலும் விரும்புவதில்லை. எனினும்  "கேள்வி " என்பதிற் போல் சொற்களில் வருமேனும்    ஆங்கு  ஒருவாறு  "கேளிவி :"   என்றோ "கேளுவி " என்றோ  எளிதாக்கிக் கொள்வர்.   கேள்ப்பார்  என்றும் சொல்லாமல் கேட்பார் என்றும் சொல்லாமல்  "கேப்பார்"  என்று மாற்றி  நாவுக்கு நல்லது மேற்கொள்வர்.  . கேப்பார் என்பதில் வினைப்பகுதி யாது?    கே  என்பது மட்டுமோ??

தேடித் திரட்டிக் கொள்வதே  திரவியம்.  கடலிற் திரளும் முத்து  போன்றவையும்  திரவியமே.

திரள் >  திரள்வு  >  திரள்வி .>  திரள்வித்தல்.  (திரட்டுதல்).
திரள்வி + அம்  =   திரள்வியம்.>  திரவியம் .( ள்   கெட்டது , அதாவது  மறைந்தது )

வேறு வழிகளிலும்  விளக்கலாம்.   திர்  > திர  > திரள் ;  திர் > திர  > திரவியம்
எனினுமதே.
 நீர்த்துளிகள் ஒன்றாகி வருவது திரை.   திரைகடல் எனக்காண்க.

இறுதியில் ள்  வரும் சொற்களில்  அது  மறைவதைக் கண்டிருக்கிறீர்களா?

அவ்  ஆள் >   அவ்வாள் >   அவா   (  ஆவல் குறிக்கும் அவா வேறு ).

அவா பெரியவா;  அவா சொன்னா  சரிதான்,


ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

தாழ்ப்பாள்

தாழ்  என்ற சொல்லுக்குப்  பல பொருள் உண்டு .  இதனுடன் தொடர்புடைய தாழ்தல்,  தாழ்த்தல் என்ற வினைகளும் உள.  நாம் இங்கு கருதும் "தாழ் "  ஆங்கிலத்தில்   bolt, bar, latch; என்று  பொருள்தருவதாகும் .

இப்போதெல்லாம் கதவுகளில்  மேல்  நடு கீழ் என்று  முந்நிலைகளிலும்  தாழ்ப்பாள்கள்  பொருத்தப்படுகின்றன.   ஆனால் தாழ் என்பதன் அடிப்படைப் பொருள்  கீழ் என்பதே.  பண்டையர்   பெரும்பாலும் தாழ்ப்பாள்களைக் கதவின் கீழ் நிலையிலேயே அமைத்தனர் என்பது  தாழ்ப்பாள் என்ற சொல்லைச்  சற்று அணுகி ஆய்ந்தாலே எளிதிற் புலப்படுவதாகும் .

தாழிடுதல் என்ற  சொல்  bolting     என்பதற்கு நேரானதாகும் . தாழ் என்ற பகுதியும்  தாழ்ப்பாள் என்று பொருள்படும் .

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் திருவள்ளுவர்.  அடைக்கும் என்று மிகுத்துச்  சொன்னதால்  ( qualified )    தாழ் என்பதன் வேறு பொருண்மைகள்  சென்று பொருள்  மாறுபாடு செய்யாவென்க,

இனித் தாழ்ப்பாள் என்ற சொல்லைக் காண்போம்.

தாழ் >  தாழ்ப்பு > தாழ்ப்பு +ஆள்  =    தாழ்ப்பாள்  .

ஆள் என்பது  ஆட்சி   அல்லது  மேலாண்மை  குறிக்கிறது.  ஆங்கிலத்தில்  control என்பதற்கு  இஃது ஈடானது ஆகும்.  பு என்பது விகுதி .

பாளம் என்பது நீண்டு தடித்துத் தட்டையான பக்கங்களைக்  கொண்ட பொருளைக் குறிக்கும் ..
அடிப்படைக் கருத்து  நீட்சி  என்பதாகும்,  

பாள்   >   பாளம்.

ஒப்பு  நோக்குக :

பாள் > வாள்   ( இதுவும் அடிப்படை நீட்சிக் கருத்துத்தான் )   அரிவாள்  கொடுவாள்  முதலியன  .
வாள்> வாளம்  :  கடிவாளம் . Something long and is put in place. or "bites in"
தண்டவாளம் . அதாவது தண்டு நீட்சி .

எனவே  நீட்சி கருத்தும் பொதியப்பெற்று தாழ்ப்பாள் என்பது மிகு அழகாக அமைந்த சொல் ஆகும்.



கம்பன் எய்திய முடிவு

இராமனைப் பாடி இரும்புகழ் பெறினும்
கோமகள் விரும்பிய குறுமதிப் பதியால்
நாமகள் அருளும் நாடுகா  வலனின்
ஏமமும் இழந்தவன் உழந்தவன்  கம்பன்.

கிழங்கு விற்பளாய் வழங்கினும் நல்லருள்
வழங்கினள் அல்லள் அழுந்தூர்க் கம்பற்கு
அழுந்துயர் அவனைப் பற்றிடக்  குடியும்
அழிந்திட ஒழிந்தது நலந்திகழ் முடிவோ?

 .

பொருள்

பதி   அம்பிகாபதி 
நாடுகாவலன் -  அரசன் 
ஏமம் -  பாதுகாப்பு.
அழுந்தூர்  -  திருவழுந்தூர்/
கிழங்கு  விற்பள்  -  கலைமகள் .எடுத்த உரு .     

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

Another view of PM Najib's case

The money came into Najib's acc without he ever knowing it! Just like when you were in a public place and had left your basket on the ground, someone without your knowledge had slipped some drugs into it. You did not know. Later you carried the basket and the narcotics officer stops and arrests you for possession. Actus reus is there. No mens rea (guilty mind) my brothers. The account was operated by the bank in actual fact. Najib did not know what went into it. Najib had nominal control only. The bank had actual control. The bank received the money and made the documents and entered the sum into Najib account. When exactly was Najib informed by the Bank? What should Najib have done after the fact of this uninformed deposit? Can this case be argued from this line......? No mens rea! Discuss.......

ref comment: this AG had been appointed by a Prime Minister who had just unconstitutionally sacked the previous AG, which he had no right to do. - well the previous AG was also appointed by a prime minister. If unconstitutional, who and how according to the constitution can remove the AG? You may say the removal was morally wrong but it is legally right. Writer should have quoted the constitutional provisions for the reader..

by  apm,


Read:  http://www.sarawakreport.org/talkback/legal-establishment-calls-foul-on-najibs-regime/#commentarea

Legal Establishment Calls Foul On Najib's Regime.

If you have leg pain..........

கடினப் பட்டு  நடைமேற் கொண்டதால்
காலில் நல்ல வலி!
உடனே வெந்நீர் ஊற்றி உதவியும்
ஒழியா தயர்ந்த தொலி .

சொந்த மருந்துகள் செய்து தடவிட
சூழ் நிலை ஒப்பிட வில்லை .
சொந்தப் பாட்டியும் எந்தப் பாட்டியும்
சொல்லவும் அருகினில்  இல்லை .

ஆங்கில மருத்துவர் கண்டேன் அன்புடன்
அவரென் கால்களைத் தடவி
வீங்கிட வில்லை வீணிலேன் கவலை
விந்தைக் களிம்பிது  வென்றார்.

செருப்பினில்  அழுக்கென்று சொல்லியும் கைபடச்
செம்மகன் கழற்றி  விட்டும் ,
பொறுப்புடன்  பிடித்து வழித்து  வலிதனைப்
போக்கினார் முடிந்த மட்டும்

அப்புறம் தந்த களிம்பொன்று  அதனையே...............
அன்பர்கள் நீவிர்  கேட்பீர்.
இப்பொழு ததன்பெயர் இங்குரைப்பேன் தேய்க்க
எவ்வலிக்  கினியும்  தோற்பீர். ?

Name of Gel:  Fastum.
This is not an ad.
Any other  pl share.

  

புதன், 3 பிப்ரவரி, 2016

இலக்கிய மொழியும் பேச்சு மொழியும்

தமிழர்கள் தங்கள் மொழியை எப்போதும் திருத்தமாகப் பேசியவர்கள் அல்லர் .
அவர்கள் பேச்சு மொழியில்  பல்வேறு வகைகளில் திரித்துச் சொற்களை வழங்கியதால் பல  கிளைமொழிகள் தோன்றி, அவற்றில் பல கிளைமொழிகளாகவே   தொடர்ந்தன.  சில  உயர்த்தம் பெற்றுத் தனிமொழிகள்  ஆய்விட்டன.   வெளி நாட்டிலிருந்து  நாவலந் தீவினுள் வந்து வழங்கிய  மேலைச் சொற்களையும்  உள் நாட்டில் வழங்கிய பல பாகத மற்றும் தமிழ்த்  திரிபுகளையும் ஏற்றுச்   சமஸ்கிருதமும்  நன்கு புனையப்பெற்றது.  திராவிட  ஒலி யமைப்பை  அடிப்படையாக வைத்தே  அது உருப்பெற்றது. வெளி நாட்டினர் ஈண்டு வந்தேறி வாழ்ந்தனர் எனினும் அவர்கள்  எல்லோரும் ஓரினத்தினர் என்பதற்கோ  ஆரியர் என்பதற்கோ  ஆதாரம் தேவைப் படுகிறது.  ஆரியர் வருகை என்பது ஒரு தெரிவியல்   theory  என்ற நிலையிலேயே தொடர்கிறது.

நாம் சொற்கள்ளை  எப்படியெல்லாம் திரித்து வழங்குறோம் ......

பண்ணிகிட்டிருக்கேன்   -    பண்ணிக் கொண்டிருக்கிறேன்.!

இருக்கிறேன் >  இருக்  க் + இ     ற்   + ஏ + ன்.>    இருக்கேன் ,

இ, மற்றும் ற்  என்ற ஈரொலிகள் தொலைந்தன,    க்  +   ஏ =  கே  ஆனது. 

இலக்கிய இலக்கண மொழியும்  பேச்சு மொழியும் ஒருங்கே வழங்குவதால் 
இருக்கிறேன்  இருக்கேன் என்று திரிதலை நாம் முன்வைக்குமிடத்து  அதனை ஐயுறுவாரில்லை  என்றுணர்க . இலக்கிய மொழி ஈண்டு இல்லையெனில் 
இதனை உணர்த்துவது  பெரும்பாடாகவன்றோ  இருக்கும் ?




வாலை நறுக்கென்று.....

பிள்ளைக்கு மென்குட்டிப்  பூனையுடன் ஓடியாடி
துள்ளிக் குதித்திடத் தூண்டிடும் வெள்ளையுளம்  ;

சொல்லிக் கொடுப்பவர்க் குள்ளிலோர் நல்லாசை
அள்ளிப் படிப்பதில் ஆகிடணும் மேலெனவே.

கவர்ச்சிப் பொருள்களுடன் கல்விக்கோ போட்டி!
தவற்றை அறியாத் தடுமாற்ற   மென்றே

உவர்ப்பாய் வரும்பேச்சு "ஒழுங்காய்ப் படித்தே
உயர்ந்திடப் புத்தியுனக் கில்லை!"யென  வைதிட்டார்.

பாவம் சிறுபிள்ளை என்று கருதி அவன்
நோவ ஒறுத்திடா நுட்பநெறி ஆரறிவார்

கோலை எடுத்தால் குரங்குமே  ஆடிவிடும்
வாலை நறுக்கென்று வாதமும்  வந்திடுமே!!

will edit.. A spy programme attached to our browsers by third party to read and edit have been removed successfully.

வெள்ளி, 29 ஜனவரி, 2016

அட்சய பாத்திரம்

அட்சயப்  பாத்திரம் என்பது ஓர்  அழகான பெயர்.  இது அள்ள அள்ளக்  குறையாது வழங்கிக்  கொண்டிருக்கும் ஓர் ஏனத்தைக்  (  utensil  ) குறிக்கும்.  பழைய  மணிமேகலைப் படத்தில்  " அட்சயப் பாத்திராமி தாருக்குச் சொந்தமே?   ஆனந்தமே" என்று  கே.பி. சுந்தராம்பாள் பாடுவார்.

இந்தச் சொல்லை ஆய்வு செய்வோம்.

எல்லோரும் வந்து உணவை அள்ளிக்கொண்டு போகும் ஐயப் பாத்திரம்.

ஐயம் = பிச்சை .

இப்போது மறுபுனைவில் ஈடுபடுவோம்,

அள்ளு + ஐய   பாத்திரம்,

அள்  சு  ஐய  பாத்திரம்.

அட்சு  ஐய  =  அட்சைய  பாத்திரம்.

> அட்சய பாத்திரம். (  சை > ச    )  ஐகாரக் குறுக்கம்)

அள்  என்பது  வினைப் பகுதி.     சு  ஒரு விகுதி 


அள் என்பது  அள்ளு என்று உகரத்தில் முடிகிறது. உ  ஒரு சாரியை. வினையாக்க விகுதி .எனலும் ஆம். எது என்ற ஆய்வு பின் ..

அள்ளையப் பாத்திரம் என்றால்  அள்ளு ஐயப் பாத்திரம் என்று  தமிழ்ப் பேச்சிலேயே தங்கிவிடும். வேலை கிட்டி வெளி நாடு செல்வோரை நாம் தடுக்கிறோமா? அதுபோலத்தான்.


இந்தச் சொற்புனைவில்  சிறிய மாற்றத்தையே செய்துள்ளனர்.

அள்ளு(தல் )>   அள்+ ள்​ +உ  >   அள் + ( ள் + ச்  + உ )  >  அள்சு  > அட்சு . இதில் ஒரு 
ச்  மட்டுமே நுழைக்கப்பட்டது.   மற்றவை இயல்பாக நிகழும் திரிபுகள்

ஒரே  ஒரு சகர ஒற்றைப் போட்டுப்  பெரிய மாற்றமாக வெளிப்பட்ட சொல் இதுவாகும். இதைப் புனைந்த புலவர் மிக்கக் கெட்டிக்காரர். இதுபோன்று புதுப்புனைவுகள் மேற்கொள்ளத்  திறன்பெறுதல் நன்று. 

இப்படியும் காட்டலாம்:

அள்ளு  ஐயப்  பாத்திரம்>
அள் சையப்  பாத்திரம் >
அட்சையப் பாத்திரம் >
அட்சயப் பாத்திரம்.

இதில் அய்ய அல்லது ஐய என்பது  சை ய  என்று ஆனது
அகர வருக்க -  சகர வருக்கத் திரிபு.
இன்னோர் உதாரணம்:  அமணர் > சமணர்.

திங்கள், 25 ஜனவரி, 2016

Tolkappiyam is not dependent on other languages

Tolkappiyam is not dependent on Sanskrit sources and a work that demanded not only vast knowledge but also a lot of thinking from its author, according to Alexander Dubyanskiy, veteran Tamil scholar from Moscow State University.


Read more:

http://www.thehindu.com/news/national/tamil-nadu/tolkappiyam-is-not-dependent-on-sanskrit-sources-tamil-scholar/article489121.ece



Also on Tolkappiyam


Sivamala: Tolkappiyam timeline




ஞாயிறு, 24 ஜனவரி, 2016

றகரம் ஷகரமாய் மாற்றப்படும்,

தமிழுக்கு ற என்னும் எழுத்து சிறப்பானது. இதுபோலவே, அயல்மொழிகட்கு ஷ, ஜ, ஸ என்பவை சிறப்பனவை. சிறப்பு என்றால் இவ்வெழுத்துக்கள் அம்மொழிக்காரர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தவை. மற்றபடி, இவை எல்லாமும் மனித நாவினின்று வழிந்து பறந்து வெளிவந்து கேட்போனின் செவிப்பறைகளில் மோதுபவைதாம் . இவ்விடையத்தில் யாவும் ஒப்பனவாம்.

இப்போது பாருங்கள், றகரத்துக்குப் பதில் ஷகரம் இட்டுச் சொல்லை உருமாற்றிவிடலாம்.   படிப்போன்  ‍‍

நூறாண்டு புழங்கினும் மாறின எழுத்துகள்
கூறாது விடிலோ கொஞ்சமும் அறியான்.

ஆகையால்,  இப்போது ஒரு பயிற்சியில் ஈடுபடுவோம்.


சிறு >  சிஸு

சிறியர்  > சிஷ்ய‌
பெரியவரான குருவிடம், சிறியவர்களான சிஷ்யர்கள் பாடங்கேட்பர்,
வயது ஆகியிருந்தாலும் அறியார் குருவிற்குச் சிறியவர்தான்.

சிறுமைக்குள் அறிவுக் குறுக்கமும் அகவைச் சிறுமையும் அடங்குவன.

இறைவர் > இஷ்வர் > ஈஷ்வர். அல்லது  ஈஸ்வர்   .இகர நீட்சித் திரிபு. (முதனிலை நீண்டு நடு திரிதல்)

ஒரு சொல்லை மாற்றுகையில் ஒலிக்க எடுப்பாகவும் எளிமையாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லையேல் பயன்படுத்துவோரிடம் எடுபாடாது கெடும்,

புள் >  புட்சி  >பட்சி.   உகர அகரத் திரிபும்  ஓர் விகுதி பெறுதலும்.
கதை  > கிதை  > கீதை.  (  அகர   ஈகாரத்  திரிபு. )  கிதை  என்றே விட்டுவிட்டால்
இன்னா ஒசைத்தாகிவிடும்.  (அதாவது  ஒலி  நயக்  கேடாம் )

will edit 

அம்மாவாசையும் அயல்சேவையும்

அம் என்றால் அழகு. இந்த அடிச் சொல்லுக்கும் அம்மா என்ற தாய் குறிக்கின்ற சொல்லுக்கும்கூட ஒரு தொடர்பு இருக்கின்றது. நாம் தொட்டிலில் கிடக்கும்போது முதன்முதல் நாம் கண்ட அழகு அம்மாதான். அம்மை அழகு.

மா என்பது கரிய நிறம் குறிக்கும் சொல். சற்றுக் குறைந்த கறுப்பினை மா நிறம் என்பதுண்டு. மா>  மால். கரிய மால் உந்தியில் வந்தோன் என்று ஔவையாரின் பாடலொன்றில் வரும் தொடரை நினைவு கூர்க. திருமால் கரியோன், கறுப்புசாமி எனவும் படுவார்.

வாய் என்றால் இடம் என்று பொருள்.  இதில் ஓர் ஐ விகுதி சேர்த்தால் வாயை என்று வரும்.  யகரம் சகரமாக உரிய இடங்களில் வருதலை என் பழைய இடுகைகளில் கண்டு மகிழலாம்.  மறதி என்றால் ஒன்றிரண்டு காட்டலாம்,  வாயில்> வாசல்.  நேயம் >  நேசம், தேயம் > தேசம்.  தோயை > தோசை.  நீருடன் கலந்த அல்லது தோய்ந்த மாவினால்  சுடப்படுவது.  ஆகவே வாயை என்பது வாசை ஆகிவிடும். இதிலேதும் வியப்பில்லை/

இப்போது அமாவாசை என்ற சொல் காண்போம்.

அழகிய கருமை கலந்த இடமாகிவிடுகிறது  அம்மாவாசை தினத்தன்று
நம் ஆகாயம், ஆகாயமே ஆகாசமன்றோ?

அமாவாசையின் போது  அம் மா வாயை நம் வானம். அம் = அழகிய;  மா = கருப்பான;   வாய்  =  இடம்;  ஐ =  விகுதி .

இது பின் திரிந்தது.  அம்மாவாசை >  அமாவாசை. மகரம் கெட்ட இடைக்குறை.

அம்மாவாசை தமிழ் வா(ய் )த்தியார்களுக்குப்1 பிடிக்காது,  அம்மா+ஆசை யா? சீ  அமாவாசை என்று எழுது என்று திருத்த,  அமாவாசை ஆகி, பின் அயல்சேவையும் செய்யத்தொடங்கிகிவிட்ட சொல்லை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சிதானே  ( 1, வாய்த்தியார்  வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பார் ,  உப அத்தியாயி  வேறு. என்னே குழப்பம் கற்பிப்போருக்கு ).

தைப்பூசத்தில் மகிழ்வு பொங்குக.

will edit

சனி, 23 ஜனவரி, 2016

"உபயம்"

கோயில்களில் பயின்று வழங்கும் "உபயம்"  என்ற சொல்லினை இப்போது  காண்போம்.

கம்ப இராமாயணத்தில் உபயம், என்ற சொல் ". உவைய முறும் உலகின் "(கம்பரா. நிகும். 156). என்று வந்துள்ளதாக அறிஞர் கருதுவர் . உவையம் என்பதே உபயம் என்றாயிற்று என்பது கருத்து.
அ , இ  உ  என்ற முச்சுட்டுகளில்  உ  என்பது  முன்னிற்றல்  குறிப்பது.

உபயம் என்பது ஒரு வரியையும் குறிப்பதால்,  உபயம்  முன் வைக்கப்படும்  கோயிலுக்கான தொகையைக்   குறித்தது என்பது சரியான கருத்து ஆகும் .

உ >  உவ .
உவ >   உவன்.     ஒ.நோ :  அ > அவன் .
உவ > உவச்சன் =  (முன் நின்று ஓதுபவன் ).
உவ > உவை .
உவை > உவையம் > உபயம்.

முன் நிற்புக்   கருத்துடைய  சுட்டடிச் சொற்கள் இவை.

உவ என்பதில்  வ்  வகர உடம்படு மெய் என்பதுமொன்று. எனின்  உவச்சன் என்பது  உ ​+ அச்சன் =  உவச்சன்  எனல்வேண்டும்,   இங்கு அச்சன் -  தந்தை என்று  கொள்க,  ஓதுவாரைத் தந்தை எனல் பொருத்தமே.   ஐ > ஐயர் எனல்போல.

பயம் என்பது பயன் எனினும் அஃது சரியானதே.  திறம் >  திறன்  என்பதில்  மகர ஒற்று  னகர ஒற்றாயிற்று ,  உ+ பயம் =  உபயம் ,   சொல்லமைப்புகளில்  உப்பயம் என்று வாராமல் உபயம் என்றே இயல்பாக வருதல் முறையே. அன்றி உப்பயம்  உபயம் என  இடைக்குறைந்து வருதலும் எடுத்துக் காட்டலாம். பொருள்  :  கோயிற்   பயனுக்கு முன் வைத்த தொகை என்பதே
இங்கும் பொருள்.

Notes:

Payattal can also mean yielding a certain result,  Vizumiyatu payattal.   is an example.  u+payam thus can mean to yield beforehand,  that is,  setting aside from your yield from fields a portion for tax payment for the king.


வியாழன், 21 ஜனவரி, 2016

கணினிச் சொற்கள்

இப்போது பயன்பாட்டிலுள்ள் கணினி /இனையம் தொடர்பான சொற்கள் சில:

குறுவட்டு =  CD Player
தரவிறக்கம் = download
முகப்புப் பக்கம் = desk top
குறும்படம் -  icon
சொடுக்கு =  click. 

சிவஞான போதம் பாடல் 5

உயிர் என்பது ஒரு பழந்தமிழ்ப் பதம்.  இது சீவன் என்றும் வழங்கி வருவதாகும். உயிருடையோன் அல்லது உயிரன்,  சீவன் என்றும் கு
றிக்கப்பெறுவதுண்டு. உயிரனுக்கு ஆன்மா உண்டென்பதையும்  அவ் ஆன்மா பேரான்மாவைப் போன்ற ஆனால் அதனின் சிறிதாகிய ஒரு துண்டு என்பதும் கூறப்பட்டது.

இவ் ஆன்மா உடலில் வதியுங்கால் எவ்வாறு பேரான்மாவாகிய சிவனைக் கண்டுகொள்கிறது என்பதே ஐந்தாவது சிவஞானப் பாடல் எழுப்பும் கேள்வியாகும்,  அப் பேரான்மா கட்புலனுக்கு தெரிதலுறாமல் மறைந்தன்றோ உள்ளது?   அப்படி மறைவாயிருத்தலும் அப் பேரான்மாவின் இயல்புகளில் ஒன்றாயிற்றே!

சிவமோ  எங்கும் முழு நிறைவாகி இலங்குகின்றது. இம் முழு நிறைவைத்தான் பரிபூரணம் என்கின்றனர்.  ஆனால்  இதை இயல்பாக  ஓர் உயிரனின் ஆன்மா உணர்ந்துகொள்ள முடிவதில்லை.  வழிபாட்டுத் தலங்களில்  தெய்வச் சிலைகள் நிறுவப்படுதல் மூலமாக  கடவுளிருத்தல்  சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது, நிறுவுபொருட்களால்  சொல்லுதலும்
பதிவிசை மூலம் சொல்லுதலும் எனச் சொல்லுதல் பலவகை.  உணர்த்த உணர்வது ஆன்மாவின் இயல்பு ஆகும் .

கண்  வாய் மூக்கு  செவி மெய் முதலிய கருவிகள்  (  இந்திரியங்கள் ) தாமே எதையும் உணரமுடிவதில்லை. அவைகட்கு சீவன் அல்லது உயிரன்  ஒருவன் வேண்டும்.  அவனுடன் ஒன்று கூடி நின்று அவை நிகழ்வுகளை அறிகின்றன,
இந்த "நிற்பியைபு"  இன்றியமையாதது  ஆகும் . இதுவே  சந்நிதானம் எனப்படும். உயிரனும் தானே எதையும் உணர முடிவதில்லை.  முழு நிறைவாயுள்ள  சிவம் அல்லது  இறைமை  உயிரனைச் சூழ நிலவுகின்றது. அதனால் உயிரனும் செயல் பட்டு உணர்ந்துகொள்பவனாகிறான்.   இது விசேட சன்னிதானம் ஆவதாம் . சிவமில்லையேல்  உயிரன் சடம் .  உயிரன் இல்லையேல் ஐந்து இந்திரியங்களும் சடம்  ஆவனவாம்.

இதனை ஐந்தாம் பாடல் உணர்த்தும்.  பாடலை அடுத்துக் காண்போம்.

விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு 
அளந்தறிந்து  அறியா  ஆங்கவை போல 
தாம் தம் உணர்வில் தமியருள் 
கா ந்தங் கண்ட பசாசத்து  அவையே ,

விளக்கம் அடுத்து  \வரும்  இடுகையில். 

>
















ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டு

மாடு பிடிக்கின்ற  மாவலியோர் சட்டத்தின்
ஏடு படித்துயர்   ஏற்றறிஞர் ‍‍‍=== கூடிமன்றில்
போடும் தடையாற்  புகவில்லை கட்டுக்குள்! 1
நாடும் அவர்பக்கல் நன்று.

வீர விளையாட்டில் 2புக்குதம் தோள்களின்
வீறு வெளிக்காட்டும் வேணவா‍‍  ‍‍==  ஊறுபடச்
சீறு செழுங்காளை சேர்ந்து முடங்கிவிட‌க்
கூறு படலான தே


ஏறு தழுவும் எழுச்சி இளைஞர்மான்3
தேறு நிலைவருக தெள்ளிய ‍‍‍=== நீரினைப்போல்!
நேரும்  துயரனைத்தும் நீங்குக இல்லங்கள்
தோறுமே பொங்குநல் நாள்

அடிக்குறிப்புகள் :

1. கட்டு = ஜல்லிக்கட்டு. : ஜல் ஜல் என்று மணியொலியுடன் பாய்ந்து வரும்   மாடுகளை அடக்கிக் கட்டுதல்.  இந்த ஜல் ஓர்  ஒலிக்குறிப்பு.  ஜல் என்பது  குறைவுபட நின்ற  முதற்குறை . என்று இலக்கணம் உரைக்க .
2 புக்கு = புகுந்து 
3 மான் = மனம்,   மன்+அம் = மனம்; மன்>மான்,  முதனிலை நீண்ட பெயர்ச்சொல்
ஜல் ​+ இக்கட்டு =  ஜல்லிக்கட்டு;   ஜல் என்ற ஒலியுடன்  விரையும் மாடுகளால்  இக்கட்டு=  அதாவது  இடர் என்றும்  வேறு பொருளும் தரும் .. 

 will edit.  

சனி, 16 ஜனவரி, 2016

பொன்னாள்தைப் பொங்கலே greetings


போற்றும் திருவுடைய 
பொன்னாள்தைப் பொங்கலே
ஆற்றும் செயலனைத்தும் சீர்மிக்கு---
நேற்றினும்
இன்று சிறந்தினி 
நாளையும் புத்தொளியால்
நின்று நிலைபெறுக 
நேர்.

நேர் -  நேர்க;  நடைபெறுக. (ஏவல் வினை )
சீர்மிக்கு  =  சீர் மிகுந்து 

anti biotics

நுண்ணுயிர்க் கொல்லி மருந்தின்றேல் நோய்ப்பட்டுப்
பண்ணழிந்து வாழ்வும் பழுதாகும் === விண்ணிற்
பறந்துயர் எண்ணங்கள் பாழ்மிகும்  வேறு
சிறந்துயர் செல்வழி இல்.

வியாழன், 14 ஜனவரி, 2016

வேண்டவில்லை நீங்கள் தடை தாண்டிவந்தீர்!

விட்டுவிட்டுப்  பெய்தமழை நீர்த்துளிகாள்
எனைத் தொட்டுதொட்டு நீங்கி நின்ற இன்பக்கைகாள்.

வேண்டவில்லை நீங்கள் தடை தாண்டிவந்தீர்!  நானும்
தூண்டவில்லை  நீங்கள் துணிந்து வந்தீர்.

மலர்களைத் தளிர்களை  மரங்களின் இலைகளை
உலர்வறத் தழுவினும் எமக்கு நீரே.

உங்களின் பரத்தைமை வெறுக்கவில்லை
உங்கள் தொடர்பினை நறுக்கவில்லை

தீண்டுங்கள் எனைவந்து மீண்டுமீண்டும்;
தென்றலுடன் கூடி உலவுவீரோ
என்றனை மறவாது நெருங்கிவந்தே
ஒன்றென இயைவதில் இன்புகண்டேன்.

செவ்வாய், 12 ஜனவரி, 2016

பொறுக்கிக் கடைத்தெரு - இறுதியாக ஒரு,,,,,,, பார்த்துவிடுங்கள்.

பழசான காரணத்தால். பழுதினால்
ஓடாத எந்திரமும் பாடாத பாட்டுப்பெட்டியும்
ஓடவைக்கும் உதிரிப் பொருட்களைத்
தேடிக் கைவரச் செய்யும் இடமொன்று
சிங்கப்பூரில் உள்ளதென்றால் சிரிப்பீரோ கேட்டு?

பொறுக்கிக் கடை என்றும் புகல்வதுண்டு!
திருடர் சந்தை என்பர் சீன நன்மக்களும்.

வீசி வீணாக்குதல் கேடு
கெட்டுவிட்ட உட்பொருட்கு
அங்கு போய்ப் பெறுவீர்  ஈடு.

விசிறியின் சுற்றுத் தட்டு உடைந்தால்
அசர வேண்டாமே  அங்கு கிடைக்குமே.

புகழ்ப்பெற்ற பொறுக்கிக் கடைத்தெரு
பல்லாண்டு பழமை வாய்ந்த நல்லிடம்.
வீதிகளிலும் சந்துகளிலும் பொருட்கள் குவியல்.

வளர்ச்சிப் பணிகளின் நிறைவுக்காக‌
வரைந்து வைத்த திட்டங்களின்படி
இக்கடைத் தெருக்களும் சந்துகளும் இனி
இல்லாமற் போய்விடும்.
இறுதியாக ஒருமுறை சென்று பார்த்துவிடுங்கள்.
காலம் தாழ்த்தினால் அப்புறம்
படங்களில்தாம் பார்க்கலாம்,

Click here for more information:

https://sg.news.yahoo.com/6-singapore-landmarks-you-will-not-see-in-2017-003745950.html

From typewriters to a microscope set, you can find it all at this gem of a flea market. But the place, which is also known as Thieves’ Market to some, is running out of time as Singapore moves ahead,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

There is similar but a smaller place  in Johor Bahru near City Square but not for ladies.  Thieves and pickpockets too many,,,,,

திங்கள், 11 ஜனவரி, 2016

bacteria சின்கோலிகள்



ஞால மனைத்துமே  தாமே   இயைந்துள்ள
கோலம் கொழிக்கும்சின்  கோலிகளே  --- ஏலா
இடரும் தருவன ;  இன்பமும் சேர்க்கும்
சுடருமோ  இல்லையேல் வாழ்வு .  




சின்கோலி  =  bacterium;





மைக்ரோபு  நுண்புகள்

சனி, 9 ஜனவரி, 2016

கடைக்கண் இரங்கும் உளம்

முடக்கம் உறுவது முட்டுப் படுதலால் அஃதொழிக‌
அடக்கம் அடைதல் பணிவெனில் யாண்டும் அதுவளர்க‌
இடுக்கண் விளைப்பவர் இல்லா உலகெனில் பற்றிடுக‌
கடைக்கண் இரங்கும் உளம்பெறும் மாந்தர் வலம்பெறவே

வியாழன், 7 ஜனவரி, 2016

மனித வால்

நாய்க்கிருக்கும் நன்றியதோ யார்க்கும் இல்லை;
நரிக்கிருக்கும் பரிக்கிருக்கும் மாந்தர்க் கில்லை
நாய்க்கிருக்கும் வாலாட்டி  நன்றி சொல்லும்;
நரர்களுக்கு நன்றியில்லை; வாலும்  இல்லை .
பேய்க்கிறுக்கு மனிதன்முன் வாலும்  உள்ளான்;
பிழைபட்டு நன்றிகொன்றான் வாலை  விட்டான் .
நோய்க்கிறுக்கும் நுண்கிறுக்கும் வாய்க்கப் பெற்று
நுழைபெறுவான் வல்லரசுக் கழகத் துள்ளே.

According to anthropology,  humans had tails before.


அலைந்தலைந்து குலைந்திடுமோர் துன்பம்

போர்த் தந்தி    ரம்என்றால் புரிவோன்    செய்யும்
புதுத்தன்தி      றம்அன்றிப்      பிறிதொன் றுண்டோ
பார்த்தயர்ந்தான்  தன்விழியை  அவித்து விட்டுப்
பரதேயத் துள்புகுந்தான்  அலைக்க    ழிப்பான்.
ஊர்ச்சுவரே தாண்டிடுவோர்  ஒன்றி ரண்டே
உறுதி இது வென்றாலும் பட்ட நாட்டான்
ஆர்த்தெழுந்தான் ஆயிரம்பேர் தம்மைக் கூட்டி
அலைந்தலைந்து குலைந்திடுமோர் துன்பம் கொள்வான்.

பட்ட - அனுபவித்த .

The Pak strategy is quite simple. Send some crack shooters to inflict injury  in some important place or installation. Those are spotted and neutralized.  After that, send a few more to walk around in certain places .....They are sighted, but later disappeared. In pursuit of them, the affected country has to mobilize a large number of the forces for search operation.

The purpose for Pak is achieved......The affected country, their people and their forces --  all would be unduly burdened and their national and original focus shattered.

On their own, every country is suffering many diversions to their national focus,  many of them domestic in nature.   The terrorists are creating extra diversions.

Countries are no different from individuals.  If your neighbour is jealous of you, he will start creating some kind of "diversion" for you.

Each longs to see the other's downfall or at least fallback.
























புதன், 6 ஜனவரி, 2016

அணிகுண்டும் தனித் திறனும்.

அணிகுண்டு  என்பதை நீங்கள் கேள்விப் பட்டிருக்கமாட்டீர்கள்.  குண்டு என்பது வெடிக்கும் ஆதலால்  அணிதற்கு உரித்தானதன்று .  ஆயினும்  தீவிர வாதிகள் எனப்படுவோர் அணிந்துகொண்டு  அடுத்த நாட்டிற்கோ அல்லது பிற இடத்துக்கோ சென்று குண்டை வெடிக்கச் செய்வதனால்  அதை  அணிகுண்டு என்று சொல்லலாம்.   அணுகுண்டு போடும் சண்டைக்குப் பதிலாக  அணிகுண்டு கொண்டு செல்லும் போர்த் தந்திரம் இக்காலத்தில் நடப்பில் அதிகரித்து வருகின்றது.   .அறிவுடையோர்  கவலைப்படுதற்குரியது   இதுவாகும் .   குண்டு புழங்குவோர் சிலர் இதுபோது  உலகப்புகழ்  எய்திவிட்டனர். நடிப்பினால் புகழ் பெற்றோரை விஞ்சி விட்டனர் வெடிப்பினால் புகழ் பெற்ற ஒசாமா போன்றவர்கள்.

உடம்பில் கட்டிக்கொள்ளும் குண்டுக்குத்   தமிழில் வேறு பெயர்களும் வைப்பதற்கு நல்ல வசதிகள் மொழியில் உள்ளன .  உடுகுண்டு; வேய்குண்டு ;
புனைகுண்டு ;  கட்டுக்குண்டு ;  செருகு குண்டு ;  இடுப்புக்குண்டு; இடுபடை  என்றெல்லாம் சிந்தித்து  இவற்றுள் பொருத்தமானது என்று  படும் சொல்லை  மேற்கொள்ளலாம். இவைகள் உங்கள் மேலான சிந்தனைக்கு ஆம் .
உடம்பில் இடைவாரில் குண்டு வைத்துக்கொண்டு வந்து இறந்துவிட்டவனை வெடிகுண்டு வல்லுநர்  ஆய்வு செய்து  அவனுடம்பிலிருந்து  அதையகற்றும் பணியில்  அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ,  அது  எதிர்பாராத விதமாக வெடித்து  அவர் மாண்ட செய்தி  அண்மையில்  நாமறிந்தது ஆகும்.   இது  இந்தியா -  பஞ்சாப்  பதங்கோடு  வானவூர்தித் தளத்தில் நடந்தது.   அவ்  வல்லு நரின் குடும்பத்துக்கு நம் இரங்கல். குண்டகற்றுக் கலையில்  தனித் திறனுடையவர்  எனினும் குண்டு அவரை ஏமாற்றிவிட்டது.

இதுபோன்ற வேளைகளில் குண்டை அகற்றிய பின்புதான்  உடலைக் கைப்பற்ற வேண்டுமென்பது  விதி போலும். இல்லையேல் அது பின்னர் வெடித்துப்  பலரைக் கொல்லக்கூடும்.  ஆனால்  இனி,  வெடிகுண்டு அணிந்த உடலைக்  குண்டுடன் சேர்த்து மணல்மூட்டைகளுக்குள் வெடிக்கச் செய்து பின்பு மாமிசத் துண்டுகளைக்  கைப்பற்றுவதே  வழி  என்பதில் ஐயமில்லை.
தீவிரவாதிக்கு அதிக மரியாதை கேட்கும் மனித உரிமைக் குழுக்கள் புதிய வழிகளைச் சொல்லட்டும் .
இப்போது ஒரு கதை.  ஒரு காவல் நிலையத்தில்   ஓர்  இருகோடர் (கார்ப்பொரல் )  கடமையில் இருந்தார்.  வெளியில் தனியாக நடைச் சுற்றுக்காவலுக்குச் சென்றிருந்த ஒரு  புதிய  காவலர்  ஒரு குண்டு ஒன்றைக் கண்டு  தம்  நடைபேசியின்   walkie-talkie  மூலம் என்ன செய்வது என்று (மலாய் மொழியில் ) கேட்க, இருகோடர் விளையாட்டாக "தைரிய மிருந்தால் தலையில் சுமந்து கொண்டுவா" kalau berani boleh angkat kepala  என்று கூறி விட்டார்.    அவரும் அதைக் கொணர்ந்து   நிலையக் குறுக்கு மேசையில் இட,  பார்த்த இருகோடர் நிலையத்தை விட்டு ஓடிவிட்டார்.   நீ ஏன்  இப்படிச் செய்தாய்   என்று கேட்ட கடமை அதிகாரியிடம் :  "அவர் சொன்னார் , நான் செய்தேன் " என்றார் காவலர்.

"மூளையைப் பயன்படுத்த வில்லையா?"  என்று................. அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது .

அப்புறம் வெடிகுண்டு வல்லுநர் வந்து அதனைத்  தக்க பாதுகாப்புடன் செயலிழக்கச் செய்யும்போது நிலையத்தின் மேசை நாற்காலிகள் சாளரக் கண்ணாடிகள் முதலிய  நொறுங்கின , பக்கத்துக் கட்டடங்களிலும் இவை போன்ற  சேதங்கள் . எல்லாம் பின் சரி செய்யப்பட்டன,

இரண்டாம் உலகப் போருக்குப் பின் தென் கிழக்காசியா முழுவதும் வெடிக்காத குண்டுகள் பல கிடந்தன . இவற்றிலெல்லாம் தப்பிப் பிழைத்தோர்  நம் தாய் தந்தையர் .  அவர்களுக்கு நம் வணக்கம்.


சனி, 2 ஜனவரி, 2016

வருத்தப் படுவிய க - ய etc

இது ஒரு பேச்சு வழக்குத் தொடர். இதில் ,முதற் பதத்தில் திரிபு ஏதும் இல்லை.
வருத்த  என்பதை வலுத்த என்றால் பொருள் மாறிவிடும்.

இப்போது படுவீர்கள் என்பதைப் பார்ப்போம்.

படுவீர்கள்  > படுவீ (ர் ) க (ள் ) >  படுவீக.

ர்  என்ற ஒற்றெழுத்து  மறைவதைப் பலசொற்களில் எடுத்துக்காட்டியுள்ளோம்.

நினைவு கூர்க:

சேர் >  சேர்மி  >  சேமி.  சேமித்தல்.

ஆனால் ஒருமித்தல் என்ற சொல்லில் இப்படி வராது.

நேர் >  நேர்மி  > நேர்மித்தல். > நேமித்தல். இங்கு  அமையும்.

:ள்  வழக்கமாய்  மறைதல் உடையது .

அவள் >  அவ .

இனி,  க என்ற எழுத்து ய  என்று திரிவது காண்க. (படுவிய )

இதுபோல்  க - ய  என்று திரிந்த சொற்களைத் தேடுங்கள் .

மகன் என்பதைப் பேச்சில் சிலர் மயன்  என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா?  க - ய  திரிபு  அன்றோ?  

அகன் :  அகத்தில் உள்ளவனாகிய கடவுள்.  பெருமான் : பிரம்மன்.
          பிறவாதவனாகிய கடவுள்.   from akam.

அகன் > அயன்.  க > ய

இதையும் ஆய்வு செய்க.
இது போல்வன பிற -   தேடுங்கள்.

நல்லதொரு  பயிற்சியாய் இருக்கும் .

எம் பழைய இடுகைகளைப்  படித்தால் சில கிடைக்கலாம்.


வெள்ளி, 1 ஜனவரி, 2016

மனம் குறிக்கும் "மான்"



மன்னுதல் என்பதொரு வினைச்சொல்.  இது முன்னுதல் ‍  அதாவது
சிந்தித்தல்  என்ற சொல்லின் திரிபு. அன்றி  மன்னுதல் என்று இன்னொரு சொல்லும் உள்ளது. அதற்கு நிலைபெறுதல் என்று பொருளாம்.

முன் > மன் >  மனம்.  (அம் விகுதி ).

சில சொற்கள் முதனிலை நீண்டு விகுதிபெறாமலும் தொழிற்பெயராகும்.

இப்படி அமைந்ததே மான் என்னும் சொல். மான் எனின் மனம் என்று பொருள். மான் என்னும் விலங்கு,  ஏனை மான்கள் ஆகியவற்றுக்கும்  இதனுடன் தொடர்பில்லை


2அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்
சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரச கந்தம்
புத்திமான் ஆங்காரம் புரி அட்ட காயமே   (  திருமந்திரம் )

இங்கு  புத்தி மான்   எனின்  புத்தியும்  மனமும்  ஆங்க்காரமும் என்பது.  .
.

புதன், 30 டிசம்பர், 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்


ஈரா  யிரத்தினைக்  கூர்பதி   னாறணுக
சீரா யனைத்தும் செழித்தின்பம் ----  நேர்ந்திடுக;
வாரி அலைநில வல்நடுக்கம்  வாராவே 
சேருநற் பேரால்  சிற.


குறிப்புகள்:

கூர் =  மிகுக்கும்.  சிறப்பிக்கும் .
n. < கூர்²-. 1. Abundance, excess; improvement; உள்ளது சிறந்து மிகுகை. (தொல். சொல். 314.

 மிகுதல். பெரு வறங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 2.)

பதினாறு  என்பது  16  செல்வங்களையும்  குறிப்பது.  அது  2000 என்பதைச்  சிறப்பிக்கிறது.

அணுக -  வந்துகொண்டிருக்க .

வாரி -  கடல்.   வாரி அலை  என்றது சுனாமியை.

நற்பேர்  -  நல்ல புகழ்  வந்து சேரட்டும்.  அதனால் சிறக்க  என்றபடி, 


விவேகமும் வெண்டைக்குழம்பும்.

ஒருவர் ஒரு புதுவிதமான வெண்டைக் குழம்பு வைத்தார். அதைச் சாப்பிட்டுப் பார்த்தவர்கள் மிக நன்றாக,  சுவையாக இருப்பதாகப் பாராட்டினார்கள். பாராட்டியது மட்டுமா? ,  நாலைந்து முறை வந்து சாப்பிட்டுவிட்டுப்  போனார்கள். அதற்குப் பணம் கொடுக்காமல் போனவர்களும் அங்கு வந்து சாப்பிட்டோர் பட்டியலில் இருந்தார்கள்.

அவர்களில் ஒரு மனிதர் அந்த வெண்டைக் குழம்பு எப்படி வைப்பது என்பதை நன்கு உசாவி அறிந்துகொண்டார். சில நாட்களின் பின்னர்,ஓரிடத்தில் குழம்பு வைக்கும் வேலை அவருக்குக் கிட்டியது. அங்கு அந்த வெண்டைக் குழம்பை வைத்துப் பெரும்புகழ் எய்தினார்.

அவர் வேலை பார்த்த நிறுவனத்தில்  அவருக்குப் பதவி உயர்வு கிடைத்து, நல்ல சம்பளமும் கிடைத்தது. சமையற்கலைமணி என்ற பட்டமும் அவர்க்கு வந்து சேர்ந்தது.

முதல் முதல் அந்த மாதிரி வெண்டைக் குழம்பு வைத்தவர், பாவம்.
அவர் எந்தச் சிறப்பையும் அடையாமல் ஒதுக்கப்பட்டுக் கிடந்தார்; வெண்டைக் குழம்பு வேண்டியவர்கள்  எல்லாம் அந்த இரண்டாமவரிடமே போய்ச் சாப்பிட்டார்கள்.

நான் தான் முதன்முதலாக இப்படிக் குழம்பு வைத்தேன் என்று ஒருசிலரிடம் சொல்லிப் பார்த்தார். கேட்டவர்கள்  யாரும் நம்பவில்லை. இவன் பார்த்துச் செய்கிறான் என்று திட்டினார்கள்.

வழக்குப் போட்டுப் பார்த்தார்.  அது ஆதாரமற்றதாகக் கருதப்பட்டுத் தள்ளுபடியில் முடிந்ததுடன்,  செலவு தொகை வேறு கட்டும்படியான தீர்ப்பு விளைந்தது. இவர் நொடித்துப் போனார்.

அந்த ஊர்ப் பள்ளியில் ஒரு வகுப்பில் வாத்தியார் பிள்ளைகளிடம் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார். " பிள்ளைகளே, நீங்கள் எதையும்  கண்டுபிடித்தால்  தேசிய விருது பெறலாம். ஆகையால் கடினமாக உழையுங்கள் "  என்றார்.

வெண்டைக் குழம்புக்குக் கிடைத்த வெகுமதி என்னவென்று அவருக்குத் தெரிந்திருந்தால்தானே?  உலகம் திருட்டு உலகமென்று வகுப்பில் சொல்லமுடியாமா என்ன?

வேலைக்கென்றே சிலர் பிறந்திருக்கிறார்கள்.   புகழுக்கென்றே வேறு சிலர்  அமைந்திருக்கிறார்கள். இதை மாற்றிவிட முடிவதில்லை.


செவ்வாய், 29 டிசம்பர், 2015

சி போதம்: 4. பொருளுரை.

இது  முன் இடுகை   http://sivamaalaa.blogspot.sg/2015/12/4-preliminary-notes.html  -யின்  தொடர்ச்சி.


ஆன்மா அந்தக்கரணம்  அவற்றின் ஒன்று அன்று =  ஆன்மா என்பது  மனம், புத்தி, சித்தம்  அகங்காரம் என்ற நான்கு உட்கருவிகளில் ஒன்று ஆகாது; ( ஆகவே  அவற்றின் வேறானது ஆன்மா.)

சகச மலத்து உணராது =  இயல்பான கேடாகிய, ஆணவமென்னும் சகச மலத்தின் காரணமாக,  ‍தன் உண்மை விரிவு நிலையை உணராமையால்;

அரசு அமைச்சு ஏய்ப்ப ‍   =   அரசாள்பவன் தன் அமைச்சர்களுடன் கூடி அவர்கள் தரும் அழுத்தங்களால் உந்தப்படுதல் போல;

அவை சந்தித்தது நின்று  =  அவைகளுடன் கூடி  வாழ்தொறும் நிலையாய்  இயங்கி;

அஞ்சு அவத்தைத்து ‍=  ஐந்து  நிலைகளை உடையதாய் உள்ளது.
ஏ =  உறுதி கருதிய  ஏகாரம் ;  (தேற்ற  ஏகாரம் )

இவற்றுள்  சாக்கிரம் என்பது,  ஆன்மா  புருவங்களின் நடுவில் தங்கி , விடைய  நுகர்ச்சியில் மெத்தென  நிற்கு நிலையாம்,

சொப்பனம் என்பது ஆன்மா  கழுத்தில் நின்று  புலனுணர்ச்சிகள்  sense organs ஒடுங்கி எண்ணங்கள்  mind  ஓடும் நிலை.

சுழுத்தி   என்பது  முழு உறக்கம்;  இதில்  புலன்கள் முற்றிலும் ஒடுங்கி எண்ணங்களும்  ஒடுங்கிய நிலை.

துரியம் என்பது:   ஆன்மா  உந்தியில் நின்று கொண்டு  பிராணனுடன் ஒன்று பட்டு இயைந்து கிடப்பது. ஆகவே  பிராணன் என்னும் உயிர் வேறு; ஆன்மா என்பது வேறாம்.  ஆனால் உந்தியில் அவை இயைந்து நிற்கின்றன.

துரியாதீதம் என்பது:  ஆன்மா  மூலாதாரத்தில் நிற்பது.
துரியம் +  அதீதம் = துரிய + அதீதம் =  துரியாதீதம்.   துரியத்தைக் கடந்தது.
அதீதம்  =  கடந்து நிற்பது.  உந்தியைக் கடந்த இடம் ,    எனவே மூலாதாரம்.
துரிதல்  =  தேடுதல் . ( துருவுதல்  என்ற சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும் .  )  ஆன்மா உயிரைத் தேடிக்  கண்டு, ஒன்றுபட்ட இடம்  துரியம் என்றும்  அது கடந்த இடம்  துரியாதீதம் என்றும் சொல்லப்பட்டது.
அதீதம் <   அது +  ஈது  + அம்  =  அதீதம். (முன்னிடம் அது ;  இவ்விடம் - ஈது ; அம்  = விகுதி  ).  அங்கு இருந்தது,  விட்டு  இங்கு வருதல் ,   அதீதம். எனவே கடந்த இடமென அறிக.


திருமந்திரத்தில்:

காயப்பை ஒன்று சரக்குப் பலவுள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக்கு உள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே    2122

என்று திருமூலர் சொல்கின்றார்.  இங்கு கள்வன் என்றது ஆன்மாவை.  சரக்கு - இதுவரை எடுத்தோதிய  கரணங்கள்  அவத்தைகள் முதலான பலவற்றைக் குறிக்கும். ("பலவுள " என்றார் ஆதலின் ).  மாயப்பை , மாயும் அல்லது இறக்கும் பை.  அங்கிருந்து புறப்பட்ட ஆன்மாவுக்கு,  மற்றுமோர் பை என்றது  மறுபிறவியிற் பெறும் உடலை. ஒழிந்த அல்லது மாய்ந்த பையோ, மண்ணாகிக் கலந்துவிடுகிறது -  இயற்கையுடன் .

மயங்கிய -  கலந்த .

ஆன்மாவைக் கள்வன் என்றது ஏன் ?  சொந்தமில்லாத ஓரிடத்தில் உட்புகுந்துகொண்டு  குடியிருக்கும்  ஒருவனை  அல்லது ஒன்றை -    புகுந்தது மட்டுமின்றி  என் உடல் , என் தலை, என் கால் கை  என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்போனை /  இருப்பதை,  பின் எப்படிக்  குறிப்பிடுவீர் ?
அவன் கள்வனேயாம். என்ன வியப்பு?  இந்தக் கள்வன் வேறோர் உடம்பைத் தேடிப் போய்விட்டால் இவ்வுடம்பு பாழ்.  மண்.



தொடரும்
will edit









திங்கள், 28 டிசம்பர், 2015

மித x அமித

மிதம், அமிதம் என்ற சொற்களின்  அமைப்புப் பற்றி  முன்பு எழுதியுள்ளேன்.

மிதத்தல் என்பது  தமிழில் உள்ள வினைச்சொல் . இதிலிருந்து:

மித +  அம்  =  மிதம்  என்ற சொல் பிறந்தது.  மித என்பதன் ஈற்று அகரம் கெட்டது  (மறைந்தது). 

கனம்  இலாதது மிதக்கும்.  கனமானது மூழ்கும்.  மிதமானது என்றால்  அளவுடன் அமைந்தது,  கனமாகி மூழ்கிவிடாதது  என்று அறிக.  இது படகோட்டிகள் , கப்பலோட்டிகள் ஆகியோரின் பயன்பாட்டிலிருந்து  வந்துள்ளது என்பது தெரிகிறது. 

இது பின் தனது அமைப்புப் பொருளினின்றும்  விரிந்து  பொதுப்பொருளில் வழங்கிற்று.  moderate என்று  இதுபோது பொருள் தருகிறது.

இந்தப் பொருட்கு எதிராக அமைந்தது  "அமிதம்"  என்பதாகும்.  அமிழ்தல் என்ற சொல்லுடன்  இதற்குள்ள தொடர்பு  கண்டறியத்தக்கது. அமுக்கு  என்ற சொல்லையும் மறந்துவிடலாகாது.

அமிழ்   >  அமிழ்தல்  >  மிழ்த  >  மித.      ஆகவே  அமிழ் x  மித.   

மித > மிதம் .
மித  >  மிதத்தல். 

மி என்பதோ  மே எனற்பாலதுடன்  தொடர்பு உள்ளது .   மி> மே > மேல். 

அமிழ் > அமிழ்தல் > அமித. 

மித  x  அமித    அ  என்பதை எதிர்ச்சொல்லாக்க முன்னொட்டாகக் கொண்டாலும் இழுக்காது என்று அறிக.  அல்  > அ .   கடைக்குறை .

சனி, 26 டிசம்பர், 2015

Christmas Day tragedy! Singaporean family burns to death ..



Christmas Day tragedy! Singaporean family burns to death ...

theindependent.sg › Top Stories
1 day ago - Singaporean family burns to death in car crash – appeal for next-of-kin ... A Singapore-registered vehicle, a Land Rover, heading for Mersing is  .

A Singapore-registered vehicle, a Land Rover, heading for Mersing is believed to have hit a road signboard at the Sungai Dohol bridge near Kota Tinggi and collided onto the oncoming Toyota Corolla. Both cars burst into flames upon collision.
According to the Johor Fire and Rescue Department, four people burnt to death in the accident which happened early this morning at about 6.30 a.m. The burnt body of a woman was recovered from the Toyota Corolla; while the burnt bodies of a man, a woman and a child, all 3 believed to be Singaporeans, were found in the Singapore-registered car.
tragedy1tragedy2
A witness to the accident and a resident of Kota Tinggi, Mr Yang Yu Hua reportedly said that when he drove past the site soon after the accident, he saw passengers from a Malaysian-registered car involved in the collision pulling a boy out of the wreckage.
Mr Yang stopped to help and took the boy who looked physically unscathed to the Kota Tinggi Hospital. The boy appeared to be no more than 5-years old said Mr Yang.
Meanwhile a Ms Hanni Wong has initiated a search on her Facebook for the next-of-kin of the boy.  For photos click and read:

வியாழன், 24 டிசம்பர், 2015

உ-ஓ ; இ > ஏ திரிபுகள்

கவனிக்க வேண்டிய திரிபுத் தொடர்புகள்

புதை >  போதை.  (வினைச்சொல்:  புதைத்தல்.
விதை >வேதம்     ( விதைத்தல்)
புசி  >  போசனம்   ( புசித்தல்)
புகு  >   போகம்    ( புகுத்தல்,புகுதல்) புகு>போ>போகம்,

இவை ஆய்வுக்குரியவை .

உ-ஓ ;  இ > ஏ 

புதன், 23 டிசம்பர், 2015

களத்திரம்

சுதந்திரம்  என்ற பிற சொல் எப்படித் தமிழ்ப் பேச்சு  நிலைக்களத்தினின்று முகிழ்த்து  அயன்மொழிகள் புக்கு மேனிலைச் சொல்லாய் முன்னின்றது என்பதை முன் இடுகையில் ஒருவாறு குறித்திருந்தோம்.

இதே சிந்தனையில் நிற்குங்கால் திறம்> திரம் இறுதி பெற்ற
இன்னொரு சொல்லையும் கண்டு மகிழ்வது பொருத்தமாக இருக்கும்

இது களத்திரம்1 என்ற சொல்லாம்,


நெற்களம், போர்க்களம் என்று எந்தக் களத்தை எடுத்துக்கொண்டாலும் இவை எல்லாவற்றினும் மிக்கத் திறத்துடன் கையாளவேண்டிய களம்  மனையாள் வீற்றிருக்கும் களமாகிய வீடுதான் என்பர். இதன் காரணமாகவே களத் திறம் < களத்திரம் என்பது மனையாளைக் குறித்தது.


மிக்க அருமையான சொல். கணியத்தில் அதாவது சோதிடத்தில் 

பயன்படும் சொல்லாகுமிது.


------------------------------------------------

Note

1   This word has several meanings in skrt  besides a wife.  Notable among them are:
1kalatran. a wife , consort  ; the female of an animal  ; the hip and loins L. ; ; a royal citadel *  , a stronghold or fastness . ; (in astronomy.) the seventh lunar mansion 

* களத்து + இரு + அம்  =  களத்திரம் ;  களத்தில்  அரசர்  இருக்கும்  உயர் இடம்   *a royal citadel 




செவ்வாய், 22 டிசம்பர், 2015

சுதந்திரத்தில் தமிழ்

பழந்தமிழில் சொம் ( property)   என்ற  ஒரு சொல் இருந்தது.  இந்தச்
சொல்லிலிருந்து சொம்தம்  என்ற சொல் ஏற்பட்டது. சொம்தம்  சொந்தம் ஆயிற்று. இது வல்லெழுத்துப் பெற்று சொத்து ஆனது. சொத்து என்பதன் அமைப்புப் பொருள் ஒருவனுக்கு சொந்தமான பொருள் என்பதே

( சொம்  + தம்   :   இதைத்  தம்முடைய  சொம்  என்று  முறைமாற்றிப்  பொருள் கொள்ளவேண்டும் . This is a reverse word formation technique.   ஆனால் நாளடைவில்  "தம் "  தன்  பொருளை இழந்து  வெறும் விகுதியாகப் பயன்பட்டது,  .

சொம் தன் திறம்  என்றால் தானே திறமாக நிற்றல், அதாவது . சொத்துப் பற்றோடு நிற்பது ;  செல்வமில்லாது   நிற்றல் , ஒரு நிற்றலன்று. எனவே  சொம்  முன் நின்றது  மிகப் பொருத்தம் ., 

சொம்  வெறும் சொ என்று  குறைந்து சொ +தம்+  திறம்  சொதந்திரம் என்று பேச்சு வழக்கில் வந்து  பின்  சுதந்திரம் என்று திருத்தப்பெற்று அயற்சேவை செய்யத் தொடங்கி ஓர்  உயர் நிலையை அடைந்தது.

சொம் >  சொ >  சொ + து  >  சொத்து . இங்கும் சொ என்று குறைந்துதான்  சொத்து ஆனது.  சொ தம் திறம்  என்பது  உண்மையில்  ஒரு தொடர். இப்படி  முன் நிற்கும் சொல் கடைக்குறைந்து  சொல்  அமைந்த இடங்கள்  என் முன் இடுகைகளில்  கண்டுகொள்க.

திறம்  திரம் சொல்லமைப்பில் ஒரு போலி,
சொ
இதில் முழு விளக்கத்தையும் நேரம் கிடைக்கையில் எழுதுவேன், 

சுதந்திரத்தில் தமிழ் ......................

" ஆனந்த  சுதந்திரம் அடைந்துவிட்டோம்  என்று  ஆடுவோமே" 
(பாரதி பாடல்)

"சுதந்திரக் கொடி  பறந்திடப் பார்,   சூழும்  இருளும்  ஒழிந்திடப் பார்"
(  ஓமந்தூர்  ரெட்டி பாடல் ). 

பின்வர வறியாமல் சுதந்திரம் தொட்டார் (பாரதி. தேசீய. 42)

இது  பல்வேறு  பொருட் சாயல்களை உடைய சொல்.   political independence   என்பது  அவற்றுள்  ஒன்று .   இச்சொல்லின்  தொடக்கப் பொருள்  தான் சொத்து வைத்துக்கொண்டிருப்பதற்கு  உள்ள   திறம்  அல்லது  உரிமை  அல்லது அரசால்   விடப்பட்ட  நிலையே  ஆகும். பின்னர்   இன்னொன்று  ஈவித்துக்கொடுக் கும் சுதந்திரம்.  மற்றொன்று  நெற்களத்தில் குடிமக்கள் முதலியோர்பெறுஞ் சுதந்திரம். (J.)     இப்படிப்   பொருட் சாயல்கள் விரியும் .

திங்கள், 21 டிசம்பர், 2015

மகளைத் தேடிப்போய் மறைவெய்திய தாய்

வெள்ளப் பெருக்கினிலே --- தம்
செல்ல மகளிர்  இடர்ப்படுவர்  என்றே
உள்ளம் பதைபதைத்து --- உந்தேறி
ஒடி இறங்கினள் நீர்விரை வீதியில் .

ஆறிதோ முந்நீரிதோ  ---  தாய்
அதனைக் கடந்தனள்  வீட்டிற் புகுமுன்பு
சூறாவ  ளிச்சுழல்போல் --- காலைச்
சுழற்றிச் சுழற்றி  இழுத்தது  சென்றது.

ஒருசில  நாட்களின் பின் --- உயிர்
ஓய்ந்த நிலையில் தொலைவிற் கிடந்தனள்;
பெருநகர்  சென்னைதனில் --- வந்த
பேரழி வுய்த்திட்ட வேலைப் பெருமழை


மனிதர்க் கியன்றதனை --- நாம்
மனிதர் செயமுனைந் துயரநின் றாலுமே
புனித இயற்கையன்னை --- அவள்
புலியினும் மிக்கச் சீற்  றந்தனைத்   தந்தனள்

தப்பும் வழியறிவோம் ---இடர்
தாங்கும் தகைபுரிந் தோங்கி விளங்கிட
உப்புக் கடல்பொங்கினும்  --- அதை
உப்பக்கம் கண்டிட ஒப்பி  வினைசெய்க


will edit and add meanings later.

இந்த எழுதி  முந்நீரிதோ என்பதை முன்னீரிலோ 
.என்றே எழுதுகிறது.  இதை  மாற்ற வேறொரு எழுதியிலிருந்து  தருவிக்க வேண்டியதாயிற்று.
முந்நீரிதோ  -  கடலிலோ.
உப்பக்கம் --பின்பக்கம்;   (எதிர் நின்று ஒரு தடையாக  இல்லாமல்  பின்னால்  தள்ளிவைத்தல் )



 .

   

வெள்ளி, 18 டிசம்பர், 2015

On starving the bacteria



“Active starvation responses mediate antibiotic tolerance in biofilms and nutrient-limited bacteria.”

http://www.washington.edu/news/2011/11/18/what-bacteria-dont-know-can-hurt-them/
What bacteria don't know can hurt them

Australian researchers have found that zinc can 'starve' one of the world's most deadly bacteria by preventing its uptake of an essential metal.

http://www.sciencedaily.com/releases/2013/11/131111091136.htm



weeping virgin Mary

Bangladeshis flock to 'weeping Virgin'
This statue in Italy was said to weep blood
By Alastair Lawson 
BBC correspondent in Dhaka
Thousands of people in the Bangladeshi port city of Chittagong are flocking to a Roman Catholic church where tears are reported to have been seen on a statue of the Virgin Mary.
 The marble statue is kept in a glass case which scientists say could lead to condensation appearing on the Virgin Mary's face


Many of those visiting the church are Muslims, eager to see what some locals believe is a sign of the Virgin's dismay over the recent outbreak of violence in the country and elsewhere in the world.
Roman Catholic believers say it is the first time in Bangladesh that tears have been seen on a statue of the Virgin Mary.
In a country which is overwhelmingly Muslim, it is unusual for a symbol of the Christian faith to attract much interest.
But so many people are gathering outside the Chittagong church that police have been deployed to ensure law and order is maintained.
'Inquisitive'
Muslims are queuing to see the statue even though the Koran warns believers against showing an interest in religious idols.
Roman Catholics in Chittagong say that most people are queuing up to see the statue because they are inquisitive.
Around 90% of Bangladesh's 130 million population is Muslim.
In Chittagong, the second-largest city in the country, there are only around 8,000 Christians in a city of over four million people.
Many churchgoers claim the cause of the Virgin Mary's tears is recent outbreaks of violence in Bangladesh.
They point out that she has had a lot to be upset about in the last week alone.
On Monday, five people were gunned down in local election violence in the south-western district of Jhenida and, before that, there were a series of bomb explosions in the northern town of Dinajpur.
Scientists have already said that one possible explanation for the tears is the fact that the marble statue is kept in a glass case, which could lead to condensation appearing on the Virgin Mary's face.

சிவஞான போதத்தின் 4‍வது பாடல் preliminary notes.

ஆன்மா உள்ளதென்று காட்சி அளவையால் நிறுவியபின்,  ஆன்மா உளதாயின் அதன் தன்மைகள்  யாவை என்ற கேளவி எழல் இயல்பு ஆகும்.  சிவஞான போதத்தின் 4‍வது  பாடல், இதற்குப் பதிலாக அமைகின்றது. 

ஆன்மாவிற்கு ஐந்து அவத்தைகள் உள்ளன. அவத்தையாவது, அதன் உள்ளெழும் இடர்ப்பாடு.  

அவத்தை என்ற சொல் அவம் என்பதினின்று எழுகிறது.   அவி+ அம் = அவம்.  அவிப்பதாவது, கெடுப்பது. பயன் குறைப்பது.   அவி+ அம்+ தை = அவத்தை,   அம் தை என்பன தொழிற்பெயர் விகுதிகள். நட > நடத்தை என்பதில் தை விகுதி வந்தது.   அறம் என்பதில் அம் விகுதி வந்தது. இந்த அவத்தை என்ற சொல்லின்மூலப் பொருளையயும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இது, அவஸ்தை என்று மாறும்.  


அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை 
சந்தித்தது  ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சர் அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத்தைத்தே.

இது  நான்காம் பாடல்.  பாடல் பொருள் காணுமுன்  சில கருத்துகளைக் கவனிப்போம்.


பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் புல்லறிவாண்மை கடை என்றார் திருவள்ளுவ நாயனார். ஆன்மா அதன் இயற்கையான தன்மையில் மிகவிரிந்ததாகும். (வியாபகம் உடையது.)  ஆணவம் காரணமாக அது அணுப்போலும் மிகச் சுருங்கியதாகிவிடுகிறது. இத்துறை அறிஞர் கருத்தின்படி  அணு + அவம் =  ஆணவம் என்கின்றனர்.(சொல்லமைந்த விதம்‍ ‍‍: முதனிலை நீண்டது. உகர ஈறு கெட்டது ).  விரிபொருள் ஒன்று அணுப்போல் குறுகிவிட்ட கெடுதல்.
தன் விரிவுணராது குறுக்கம்பெற்று பொருளல்லவற்றைப்   ொருளென்று திரிபுணர்ச்சியில் மூழ்கி அல்லாடுதலே ஆணவ மா கும் என்பது காண்க. இது ஒரு கடைகெட்ட நிலையாம்.


ஆன்மாவிற்குச் சகசமாக அல்லது இயல்பாக உள்ள கேடாக ஆணவம்  உண்டாயிற்று.  ஆகவே அது ஆணவமலம் எனப்பட்டது. அதாவது ஆணவமாகிய கேடு. அது எதனால் ஏற்பட்டது  ? உண்மையில் மிகவிரிந்த நிலையில் நிற்கவேண்டிய ஆன்மா, அணுவளவில் குறுகிப்போய்,  அந்தக் குறுக்கத்தை ஆன்மா உணராது நிற்பதனால் ஏற்பட்டது.இதுவே அதன் அறியாமை அல்லது அஞ்ஞானம்


இவ்வுடலினுள் ஆன்மா நிற்குங் கால மட்டும் இது தொடரும், இதனைச் சகசமலம் என்றார் சகசம்  -  இயல்பு நிலை.

ஆன்மா உடலுள் புகுந்து வதியும் ஞான்று அது தனது முன் நிலையை மறந்து இயல்கின்றது. அந்த மறதியே அதன் அறியாமையை விளைக்கின்றது.

அந்தக்கரணம் என்பது மனம், புத்தி, சித்தம்,  அகங்காரம் என்பனவற்றை  உள்ளடக்கியது.இவை உட்கருவிகள்.  அந்தக்கரணம் <  அந்தர்க்கரணம்,   அந்தர் = உள். கரணம் = கருவி.
ஒரு விடையத்தை (பொருளை) நினைக்குங்கால்,  அக்கருவி மனம் எனப்படும்,

ஒரு விடையத்தை உறுதிகொள்ளுங்கால் அக்கருவி புத்தி எனப்படும்.

ஒரு விடையத்தைச்  சிந்திக்குங்கால்  அக்கருவி சித்தம் எனப்படும்.  

ஒரு விடையத்தை விரும்புங்கால், பற்றுங்கால்  அக்கருவி அகங்காரம் எனப்படும். 

தொடரும்.  Editor generates problems. Will continue later. Stay tuned and will be back as soon as possible.