செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

திரவியம்.

தமிழுரை  நாவினார்  சொற்களில் இடையிலோர் ளகர  ஒற்று இருப்பதைப்  பெரும்பாலும் விரும்புவதில்லை. எனினும்  "கேள்வி " என்பதிற் போல் சொற்களில் வருமேனும்    ஆங்கு  ஒருவாறு  "கேளிவி :"   என்றோ "கேளுவி " என்றோ  எளிதாக்கிக் கொள்வர்.   கேள்ப்பார்  என்றும் சொல்லாமல் கேட்பார் என்றும் சொல்லாமல்  "கேப்பார்"  என்று மாற்றி  நாவுக்கு நல்லது மேற்கொள்வர்.  . கேப்பார் என்பதில் வினைப்பகுதி யாது?    கே  என்பது மட்டுமோ??

தேடித் திரட்டிக் கொள்வதே  திரவியம்.  கடலிற் திரளும் முத்து  போன்றவையும்  திரவியமே.

திரள் >  திரள்வு  >  திரள்வி .>  திரள்வித்தல்.  (திரட்டுதல்).
திரள்வி + அம்  =   திரள்வியம்.>  திரவியம் .( ள்   கெட்டது , அதாவது  மறைந்தது )

வேறு வழிகளிலும்  விளக்கலாம்.   திர்  > திர  > திரள் ;  திர் > திர  > திரவியம்
எனினுமதே.
 நீர்த்துளிகள் ஒன்றாகி வருவது திரை.   திரைகடல் எனக்காண்க.

இறுதியில் ள்  வரும் சொற்களில்  அது  மறைவதைக் கண்டிருக்கிறீர்களா?

அவ்  ஆள் >   அவ்வாள் >   அவா   (  ஆவல் குறிக்கும் அவா வேறு ).

அவா பெரியவா;  அவா சொன்னா  சரிதான்,


கருத்துகள் இல்லை: