வியாழன், 11 பிப்ரவரி, 2016

ஓரம் என்ற சொல்

ஓரமென்பது  ஒரு பக்கத்தின் முடிவு அல்லது எல்லை.    இதை ஓர் என்ற சொல்லுடன் தொடர்புறுத்தவேண்டும்.  ஓர்  என்பது ஒரு பெயர்ச்சொல்  அல்லது எண்ணுப்பெயர் ,  ஓர்தல் என்ற வினைச்சொல் உண்டென்றாலும்  அது ஒருபக்க இறுதிக்குச் செல்வதைக் குறிக்கவில்லை.  இதிலிருந்து நாம் அறிவது யாதெனின்  ஒரு பெயரிலிருந்து விகுதி இணைந்து இன்னொரு பெயர் தோன்றுமென்பதுதான்,  விகுதி வினைச்சொல்லில்தான் இணையவேண்டுமென்பதில்லை என்று உணர்ந்துகொள்ளவேண்டும்,

ஓர் ​+ அம் >  ஓரம்   ஆகும்.
ஓர் + அல்  =  ஓரல்   (பொருள்:  ஒடுக்கம்).

ஒரு பக்கமாகப் போ என்றும் பேச்சில் உள்ளது.  ஓரம் கடந்தால் வீழ்ச்சி  ஏற்படலாம் ஆகையால்  வீழ்ச்சி ஏற்படுமுன் உள்ள இடமே பக்கத்தின் எல்லை  ஆகும்.

விகுதி பெறும் சொல்  உண்மையில்  நீண்டு விடுகின்றது ,   நீள்வது  மிகுதி . மிகுதி என்பது விகுதி என்று திரிந்து வழங்குகிறது.   ம -  வ  திரிபு  இது.

மிஞ்சுதல் -   விஞ்சுதல் .
மழித்தல்  -  வழி த்தல்
மிரட்டுதல் -  விரட்டுதல்
         விரட்டுதல் என்பதற்கு  அச்சுறுத்தல் என்றும் பொருளுண்டு.
மிருகம் :  இது விருகம் என்றும் வரும்.
மீதம் -   வீதம் ( விடப்பட்டது,  மிகுந்தது  என்ற பொருளில் )
(  மிகுதம் > மீதம் ,     பகுதி > பாதி எனல் போல.
பகு  பா,   மிகு > மீ.

இது  மிகுதி > விகுதி என்பதை உறுதி செய்கிறது,

விகற்பித்தல் என்பதும் மிகற்பித்தல்  (மிகல்+ பு+ இ+ தல் ) என்பதன் திரிபே.. மிகுதி என்பதும்  வேறுபடுதலே.  குறைதல் இன்னொரு வேறுபாடு.\\

சொற்கள் சிறப்புப் பொருளில் வழங்கிப்   பின் பொதுப்பொருள் அடைகை  இயல்பாம்.

இதன்மூலம்  ஓரம் என்பது விளக்கப்பட்டதுடன், தொடர்புடைய சிலவும் அறிந்து இன்புற்றோம்.


   






கருத்துகள் இல்லை: