வியாழன், 25 பிப்ரவரி, 2016

கற்பனை : கற்பிக்கப்படும் பொய்மை

வி என்னும் பின்னொட்டுப் பெற்ற சொற்கள் சில உள்ளன. நம் நினைவுக்கு
வருபவை : கல்வி,  கேள்வி, வேள்வி,  கிளவி (சொல்).
அருவி, குருவி (குர்ர் என்பது ஒலிக்குறிப்பு),  முதலியவை.

இவற்றுள் கல்வி என்ற சொல்லுக்கு உரிய  அடிச்சொல் கல் ‍ கல்லுதல் என்னும் வினைச்சொல்.கல்லுதல் :  தோண்டுதல்.

கல்வியைப் பற்றிக் கூறியவிடத்து, வள்ளுவனாரும் : " தொட்டனைத் தூறும் மணற்கேணி"  என்று பாடினார். கல்வி ‍ தோண்ட ஊறும் மணற்கேணி அன்றோ?

கல்லுதல் என்ற சொல்லினின்று  பல சொற்கள் தோன்றின.

கற்றல்  ( கல் + தல் )
கற்பு.  அன்னை தந்தையரால் கற்பிக்கப்படும் ஒழுக்க நிலை..
கலை  ( கல் + ஐ )
கல் + ஆ  (  கலா )  நில்+ ஆ= நிலா போன்றது. பல்+ ஆ = பலா, பல சுளைகளை உடைய பழம்.

கற்பனை : கற்பிக்கப்படும் பொய்மை.  கல்+ பு + அன்+ ஐ.
விற்பனை படிப்பினை எனக் காண்க.

கல் என்னும் தமிழ் அடிச்சொல் பல மொழிகளிற் பரவிற்று.
கலா, கற்பனை முதலிய இனிய ஓசைச் சொற்கள் கவர்ந்துகொள்ளப்பட்டன.

கல்குலஸ், கல்குலேசன் முதலிய ஆங்கிலம் வரை சென்றன.

கல்குலுக்கிக் கணக்குப் பார்ப்பது தமிழர் திறம் என்று அறிவோம். அது கல்குலஸ் ஆயிற்று.

கால்சியம் என்ற சொல்வரலாறு யாது?

will edit.

கருத்துகள் இல்லை: