ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கம்பன் எய்திய முடிவு

இராமனைப் பாடி இரும்புகழ் பெறினும்
கோமகள் விரும்பிய குறுமதிப் பதியால்
நாமகள் அருளும் நாடுகா  வலனின்
ஏமமும் இழந்தவன் உழந்தவன்  கம்பன்.

கிழங்கு விற்பளாய் வழங்கினும் நல்லருள்
வழங்கினள் அல்லள் அழுந்தூர்க் கம்பற்கு
அழுந்துயர் அவனைப் பற்றிடக்  குடியும்
அழிந்திட ஒழிந்தது நலந்திகழ் முடிவோ?

 .

பொருள்

பதி   அம்பிகாபதி 
நாடுகாவலன் -  அரசன் 
ஏமம் -  பாதுகாப்பு.
அழுந்தூர்  -  திருவழுந்தூர்/
கிழங்கு  விற்பள்  -  கலைமகள் .எடுத்த உரு .     

கருத்துகள் இல்லை: