புதன், 24 பிப்ரவரி, 2016

கோழை

இனி  கு >  கோ  திரிபினைச்  சற்று காண்போம்,

குவளை என்ற சொல்லுக்குப்   பேச்சில்  கோளை என்று நாவருகின்றது பேச்சில் மட்டுமோ?  எழுத்திலும் வந்துள்ளது.
,
குழப்பம் என்பதோ பேச்சில் கொழப்பம்  என்று வருவது மட்டுமோ,   கோழம்பம் என்றும் எழுத்தில் உள்ளது.  மற்றும்  -ப்ப -  என்ற  நடு  -ம்ப - என்றும் திரிந்துள்ளது.  இது இருமடித் திரிபு ஆகும்.

கடினமான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் சவத்துப் போகிறவனைக் கோழை என்கிறோம். இது ஒரு குழைவு ஆகும்.

குழை >  கோழை.

இதில் கு-கோ திரிபும் முதனிலை திரிதலும்  அடங்குகின்றன. குழை  என்பது முதனிலை திரியின் கூழை என்றே வரவேண்டும்;  மேலும் திரிந்து கோழை எனவருதனால்  இருமடித் திரிபாகிறது,

கூழை என்பது அறிவிற் குறைந்தோனைக் குறிக்கும்,

கருத்துகள் இல்லை: