புதன், 3 பிப்ரவரி, 2016

இலக்கிய மொழியும் பேச்சு மொழியும்

தமிழர்கள் தங்கள் மொழியை எப்போதும் திருத்தமாகப் பேசியவர்கள் அல்லர் .
அவர்கள் பேச்சு மொழியில்  பல்வேறு வகைகளில் திரித்துச் சொற்களை வழங்கியதால் பல  கிளைமொழிகள் தோன்றி, அவற்றில் பல கிளைமொழிகளாகவே   தொடர்ந்தன.  சில  உயர்த்தம் பெற்றுத் தனிமொழிகள்  ஆய்விட்டன.   வெளி நாட்டிலிருந்து  நாவலந் தீவினுள் வந்து வழங்கிய  மேலைச் சொற்களையும்  உள் நாட்டில் வழங்கிய பல பாகத மற்றும் தமிழ்த்  திரிபுகளையும் ஏற்றுச்   சமஸ்கிருதமும்  நன்கு புனையப்பெற்றது.  திராவிட  ஒலி யமைப்பை  அடிப்படையாக வைத்தே  அது உருப்பெற்றது. வெளி நாட்டினர் ஈண்டு வந்தேறி வாழ்ந்தனர் எனினும் அவர்கள்  எல்லோரும் ஓரினத்தினர் என்பதற்கோ  ஆரியர் என்பதற்கோ  ஆதாரம் தேவைப் படுகிறது.  ஆரியர் வருகை என்பது ஒரு தெரிவியல்   theory  என்ற நிலையிலேயே தொடர்கிறது.

நாம் சொற்கள்ளை  எப்படியெல்லாம் திரித்து வழங்குறோம் ......

பண்ணிகிட்டிருக்கேன்   -    பண்ணிக் கொண்டிருக்கிறேன்.!

இருக்கிறேன் >  இருக்  க் + இ     ற்   + ஏ + ன்.>    இருக்கேன் ,

இ, மற்றும் ற்  என்ற ஈரொலிகள் தொலைந்தன,    க்  +   ஏ =  கே  ஆனது. 

இலக்கிய இலக்கண மொழியும்  பேச்சு மொழியும் ஒருங்கே வழங்குவதால் 
இருக்கிறேன்  இருக்கேன் என்று திரிதலை நாம் முன்வைக்குமிடத்து  அதனை ஐயுறுவாரில்லை  என்றுணர்க . இலக்கிய மொழி ஈண்டு இல்லையெனில் 
இதனை உணர்த்துவது  பெரும்பாடாகவன்றோ  இருக்கும் ?




கருத்துகள் இல்லை: