செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

வாரணம் ஆயிரம்

வாரணம்  ஆயிரம் சூழ வலம்வந்து 

என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள் .

வாரணம் என்றால் யானை.  ஆயிரம் ஆனைகள்  ( யானைகள்  என்றும் எழுதப்பெறும் )  வலம்  வந்தன என்றால்  இங்கு காட்டு யானைகளைக் குறிக்கவில்லை.

வாரணம் என்ற சொல்லே காட்டு யானைகளைக் குறிக்காது.  அந்த யானைகள் வலம்  வர உதவாதவை என்பது மட்டுமன்று;  வாரணம் என்ற சொல்லே அவற்றை  உட்படுத்தாது.

வாரணம் என்பது  வரையப்பெற்ற யானைகளைக் குறிக்கும் என்று அறியவேண்டும். வண்ணங்கள் தீட்டப்பெற்று அழகு படுத்தப்பட்ட யானைகளையே  பாடல் குறிக்கும்;  அதில் வந்த சொல் குறிக்கும்.
வரி வரியாகத் தீட்டப்பட்டு வலம் வருபவை அவை .

வரி + அண் + அம்  =  வாரணம் .
அல்லது:
வரை +  அண் + அம்  =  வாரணம் .

இதில்  வ என்ற குறில்  வா என்று நீண்டது.

எடுத்துக்காட்டுகள்

படி  + அம்  =  பாடம்.
உங்கள் கண்ணும்  கருத்தும் எழுதப்பட்டவற்றில் படிந்து  பின் நீங்கள்  அவற்றைத்  தெரிந்து  வாயிப்பதால்  ( வாசிப்பதால் )  (வாய்விட்டுப் படிப்பதால் )  அது  பாடம் ஆகின்றது.

இதன் முன் கருத்து படிதலே.   படித்தல் பிறவினை.

இப்புணர்ச்சியில்   (ட் + இ = டி ​ )  இகரம்  மறைகிறது.   இகரம்  கெட்டது  என்பர் இலக்கணியர்.  சுடு  > சூடு என்று பெயர் ஆவது போல் முதல் (எழுத்து) நீண்டு
ப > பா  ஆகிறது.

இன்னும் பல உதாரணம் காட்டலாம் என்றாலும்  இக்கருத்தே வலியுறும்.
உங்களுக்கு நேரமில்லை அன்றோ?

இப்படித்தான்  வரி +அணம்  என்பதிலும்  முதல்  (தலை) நீண்டு  இகரம் கெட்டு
வாரணம் என்றாகி,  அலங்கரிக்கப் பட்ட யானையைக் குறிக்கிறது,

வரை + அணம்  என்பதில் ஐ கெட்டு  முதல் நீண்டு புணர்ந்தது என்றாலும்  அதுவும்  இதே.

என்மட்டில் இவற்றுள் எதையும் நீங்கள்கொள்ளலாம். பெரிய வேறுபாடு ஏதுமில்லை.  விவாதம்  வேண்டியதில்லை.  ( வி(ரி) + வா (ய் ) + து ​+   அம் )  

அறிந்து இன்புறுவீர்.


--------------------------------------------------
அணம்  என்ற  இடைச்சொல் -   முன் இடுகைகளில் காண்க.
will edit

கருத்துகள் இல்லை: