ஞாயிறு, 2 மார்ச், 2014

காலம்

காலே இல்லாத காலமே ---  உனக்குக்
கால்முளைத்து நீண்ட தெப்போது?
காலில் உருளை மாட்டிகொண்டாய் -  நீ
கனவே கமாக ஓடுகின்றாய்!

நேரமே நகராமல் நிற்கின்றாய் --- நீ
நிகரில் உளைச்சலை விற்கின்றாய் ,
ஊரைச்  சுற்றிடப்   போம்போது    ----- மட்டும்
ஓட்டமெடுப்பது உறு முறையோ!


பல்லிக்குப் பல் இல்லாததுபோல் காலத்துக்குக் கால் இல்லை,  அது கால் என்ற சொல்லினடிப் பிறந்ததென்றாலும் .

நேரம் நிற்பதாவது " நேரமே போகமாட்டேன்" என்கிறது  என்று   சொல்லும் நிலை.Such person is obviously bored.  She or he might be depressed too. If this person goes for a tour or travel.  she might feel better. At that point,  the time begins to run..

சனி, 1 மார்ச், 2014

விபத்து

விபத்து  என்னும் சொல்லைச் சற்று கவனிக்கலாமே!

ஆபத்து,  ஆதரவு என்னும் பதங்களை  முன்பு முன்கொணர்ந்து உரையாடியுள்ளோம்,

மலையாளத்தில் "என்ன ஆயிற்று?"  அல்லது "என்ன நடந்தது"  (என்ன ஆயிற்று உனக்கு ? ) என்பதை  "எந்து பற்றி?"  என்று  கேட்பர். இப்படித் தமிழர்  உரையாடுவதில்லை.  தமிழில் இதை முறையாகச் சொல்வதானால் -"உன்னை எதுவும் பற்றிக்கொண்டுவிட்டதா?"  என்றால் அதில் அர்த்தமுண்டு.
அதற்குப் பதிலாக, என்னை என்ன பேய் பிசாசு பற்றிக்கொண்டுவிட்டதென்றா கேட்கிறாய்? என்று திருப்பிக் கேட்கலாம். இயல்பாக நாம் இப்படிக் கேட்கமாட்டோம்.   பற்றி என்ற சொல்லினை நன்கு கவனித்தால் தமிழ் நாட்டிலும் இத்தகைய சொற்பயன்பாடு இருந்திருக்கக்கூடும்.

எங்கேயும் விழுந்து புண்பட்டுவிட்டல் அதை "விழு பற்றி "  எனலாம். விழு பற்று (தல் ),  விழுதலாகிய நிகழ்வு (என்னைப்) பற்றியது, பற்றிக்கொண்டது  என்பதாம்.

பற்று என்பது பேச்சில் பத்து எனவரும்.

விழுபற்று -  விழுபத்து  -  விபத்து.  றகர ஒலிகள் தகர ஒலிகளாய் ஆயின என்பது மட்டுமின்றி ழுகரமும் மறைந்த இடைக்குறைச்சொல்.

ஒரு காலத்தில் why grapple with such a messy word composition and corruption. Not quite neat isn't it?  Tamiz should not be so messy என்று இந்தச் சொல்லை வீசிஇருப்பார் நம் தமிழாசிரியர்.    இத்தகைய திரிபுச் சொற்களையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு இது நாள் வரையிலும் காத்து வைத்திருக்கும் சமஸ்கிருதத்துக்கு நாம் நன்றி சொல்வோம்.

ஓடு  ஓடுதல்  தாவு தாவுதல்  என்று வினையிலிருந்து தொழிலுக்குப் பெயர் வந்தது  என்பது கற்பிக்க எளிதல்லவா !

ஒப்பிடுக:

பற்று >  பற்றி >  பத்தி  >  bhakti.   இறைப்பற்று.




விபத்து என்ற சொல்லின்  அமைப்புப் பொருள்  விழுதல் தான் என்பதை சமஸ்கிருதமே தெளிவாக்குகிறது.  vipadpadyate: (விபத்துப்பட.....) to fall or burst asunder என்பதைக் கண்டு தெளியலாம்.

விழுதல் என்ற "கரு"விலிருந்து இத்தகைய பெருந்தொகையான சொற்கருத்துகள் உருப்பெற்றுள்ளமை  மகிழ்ந்து இன்புறத்தக்கது.

குறிப்புகள்

தமிழில்:

பற்று  (பத்து). grasp, grip, seizure; 2. acceptance; 3. adherence, attachment, affection, clinging of the mind to sensual objects, of two kinds, viz., aka-p-par6r6u, pur6a-p-par6r6u ; 4. connection, affinity, bond; 5. piece put on or nailed on for strength; 6. solder; 7. paste, glue; 8. particles of boiled rice adhering to the cooking pot; 9. pot containing particles of food adhering to it, as impure; 10. place under one's possession; 11. resting place; 12. portion of a country consisting of many villages; 13. receipt; things received; 14. support; 15. pillar; 16. love, devotion; 17. friendship; 18. path to salvation; 19. riches, treasure; 20. family life; 21. paddy field; 22. bundle; ass of betel leaves; 23. purpose, intention, principle; 24. plaster; poultice; medical application; 25. disease of the skin, ring-worm, psoriasis; 26. cement; 27. a kind of song; 28. village, parish

விபத்து = விபத்தி.  (விழுபற்றி >  விழுபத்தி >விபத்தி )
விபத்தி . misfortune;  poverty;  agony; danger;  death;  destruction
விபத்தி   change;  case; suffix of declension

பேச்சில் யாரும் பற்றி  என்னாது ; பத்தி என்றே சொல்வது  காண்க :  அதைப் பத்தி இதைப் பத்தி .........!

It is to be noted that the media uses the term vipaththu for accident.  pErunthu vipaththu,  rail (thodarvaNdi) vibattu, vimAna vipaththu (air accident or disaster).

சங்கதத்தில் :

vipadpAdayati   (விபத்துப்பாடு )   : to cause to perish , destroy , kill .
vipad   :  going wrongly , misfortune , adversity , calamity , failure , ruin , death
vipadpadyate: (விபத்துப்பட.....) to fall or burst asunder MBh. xi , 95 ; to come between , intervene ,
prevent , hinder ; to go wrongly , fail , miscarry , come to nought , perish die
vipadAkrAnta (விபத்தாகிறான் தா(ன்))  and vipadgata  ( விபத்திற் கிட) fallen into misfortune
vipaduddharaNa. (விபத்துத்தாரண)
vipaduddhAra  (வ்பத்துத் தாரம்) m. extrication from misfortune
vipadgrasta (வி பத்துக்குறுக்கிடு). seized by mñmisfortune , unfortunate ;
vipaddazA  (விபத்தாயது)  a state of mñmisfortune , calamitous position
vipadyukta  (விபத்துத்தம்) attended with mñmisfortune , unfortunate
vipadrahita  (விபத்திறுதல்) free from mñmisfortune , prosperous  இறுதல் -முடிதல்

பிறைக்கோட்டுக்குள் உள்ள தமிழ் ஒலிஒற்றுமை காட்டுவதற்கு .  Do you know that Sanskrit used a Dravidian sound system all the way.....!




வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

இரவிலே வந்தான்.....

மாலை வந்து மயக்கி இரவு வந்து இனிப்பை வழங்குகிறது என்று நம் தமிழ்க் கவிஞர் பாடுவர். இன்றைய உலகில் இரவு வந்ததும் வேலைக்குப் போகும் பெண்மணிகளும் ஆண்மக்களும் உள்ளபடியால் இவ்வமைப்புக்குள் இவர்கள் எங்ஙனம் உள்ளடங்குவர் என்று கேட்கக்கூடாது. அது கவிச்சுவை காணும் போக்கு அன்று. 

இரவிலே வந்தான் 
இன்ப சுகம் தந்து 
மருவியே சென்றான் - அந்த  
மாயக் கள்ளன் யார்?

என்று பெண் கேட்பது போலும் ஒரு பாடல் உண்டு.   எப்படிப் பாடினாலும் தமிழ் இனிமையே தரும்.  யார் என்றது  நீர் அறியீர் என் நெஞ்சுக்குள் உறைபவரை என்று அறிவித்தற்பொருட்டு.  சொன்னால் புரிந்துவிடுமோ உமக்கு? என்றபடி.   சென்றான் = காலையில்  சென்றான் என்று கொண்டுகூட்டுதலில் தப்பில்லை.


காலை வந்துற்றதும் தலைவன் பிரியும் நேரம் அதுவேன்பது இலக்கிய வழக்கு.    இதைக் கூறும் அள்ளூர் நன்முல்லையாரின் இன்னொரு சங்கப் பாடலை இப்போது பாடி மகிழ்ந்திடுவோம்.  "அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் "  என்ற அவர்தம்  பாடலைச்  சின்னாட்களுக்குமுன் படித்து இன்புற்றோம் .  

குக்கூ  என்றது கோழி  அதனெதிர் 
துட்கு என்றன்று என் தூய நெஞ்சம் 
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் 
வாள்போல் வைகல் வந்தன்றால் எனவே.  குறுந்  157.

கோழி கூவினதும் தலைவிக்கு அச்சம் தோன்றிவிட்டது.  "காலையே  அதற்குள் ஏன் வந்தாய் ? என் செய்வேன்"  என்று அஞ்சுவாளானாள்.
தோள் சேர்தல், தோள் தோய்தல் என்பவை  எல்லாம்  இப்போது  திரையில் நாம் அடிக்கடி கேட்பவை.   இலக்கியத்தில் இது இடக்கரடக்கல்  என்னும் ஒரு முறையாகும்.

காதலியின்  நெஞ்சமோ தூய்மையானது. தவறுதலாக ஏதும் நடந்துவிடவில்லை என்பது குறிப்பு. தோள்தோய் என்பது இனிமேல் மணமுடித்துத் தோள்சேர விருக்கும் (தலைவன்) என்று பொருள்தரும், முக்காலமும் உணர்த்தும் வினைத்தொகை இதுவென்றாலும்,  "தூய" என்றதனால் எதிர்காலத்தையே காட்டுவது.

துட்கு  : அச்சம். இந்தக் காலையோ ஒரு வாளானதே!  தமிழ் மொழியிறைவனாராகிய வள்ளுவனாரும் குறள் 334ல்  வாளென்றே கூறினார்.. வைகல் = காலைப்பொழுது.   வந்தன்று = வந்தது, அல்லது ;   வந்துவிட்டது எனற்பொருட்டு.  ஆல்  என்பது அசை.  வந்து+அன்+து  = வந்தன்று; நாம் பேசும்  "வந்தது" என்பதில் "அன்" இல்லை.  அவ்வளவில் நிறு த் தி அதை எளிதாக உணரலாம். பகுதி விகுதி சந்தி இடை நிலை சாரியை  என்று  மூழ்கினால் படிப்போருக்குக் கடினமாகிவிடும்.   என்றன்று  = என்றது.  

எளிய இனிய பாடல் தந்த புலவர் நன்முல்லையாரைப் போற்றுவோம்.  


குறிப்பு:

துள்+கு = துட்கு   (அச்சம்)
துள் + (அ) +கு =  துளக்கு.  (துயர் ).

வியாழன், 27 பிப்ரவரி, 2014

அட்டகாசம்

அடுதல் = சுடுதல், சூடேற்றுதல்.   "அட்ட" எனின் சுட்ட, சூடேற்றிய என்று பொருள்.  எச்சவினை.  அட்ட பால் என்றால் காய்ச்சிய பால்.  இந்த அடுதல் எனும் சொல்லைப் பற்றி முன்னரே இங்கு கூறியுள்ளேன்.
காய் >  காய்ச்சு > காய்ச்சுதல்.

காய் > காயம் > காசம்.  (வாய் > வாயில் > வாசல்; பயல் > பசங்க ; வயந்தம் > வசந்தம் ;  இயைவு > இசைவு ; அயல் > அசல் (அயல் நாட்டுப் பொருள் அசலானது , தம்  நாட்டுப் பொருள் தரம் தாழ்ந்தவை என்று தமிழர் நம்பினர்).  நேயம்- நேசம்.

கயத்தல் >  கசத்தல்   (கசப்பு )  ய>ச
கயங்குதல் >  கசங்குதல்             "
ஆகாயம் >  ஆகாசம்

இஃது பிற மொழிகளிலும் உண்டு. This rule of interchangeability of ya -sa is not language-specific.  The position of ja is similar.   e.g., Jesus <> Yesu.   Hadyaai <> Hapjaai.   Jacob <>Yacob .   Examples are plentiful.

Once a point has been successfully established, we should not belabor the point.


அதுபோல் காயமென்பதும்  சுட்டபொருளைக் குறிக்கும்.  ,காய்ந்தது , காய்தற்குரியது, எனப் பொருளுக்கேற்ப அர்த்தம்  .வரும் .

அட்டகாசம் என்றால் சுட்டதையே போட்டுக் காய்ச்சுவது ...... அட்டதையே  இட்டுக் காய்ச்சுதல்.

The meaning today is figurative.    புலிகள் அட்டகாசம் !   -  செய்தி.

புதன், 26 பிப்ரவரி, 2014

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல்........

இதுவரை சொல்லாய்வு தொடர்பான இடுகைகள் சிலவற்றைக் கண்டோம். இப்போது ஓர் இடைவேளை வேண்டுமன்றோ? அழகிய குறுந்தொகைப் பாடலொன்றைப் படித்து இன்புறலாமே!

இது 237-வது பாடல்.   சங்கப் புலவர் அள்ளூர் நன்முல்லையார் பாடிய இது நம்மைக் கவரும் பாடலாகும்.

வெளி நாட்டுக்குச் சம்பாதிக்கச் சென்ற தலைவன் (காதலன்) தன் சொந்த   நாட்டுக்குப் புறப்படுகின்றான்.  தன்  நாட்டுக்குள் அடியெடுத்து வைத்தவன் ஒரு தேரில் ஏறிக்கொள்கிறான்..அந்தத் தேர்ப் பாகனும் தேரினைச் செலுத்திக் கொண்டிருக்கிறான்.  முற்றப் பொருளீட்டி மீள்கின்றவன் ஆனாலும் அவன் நெஞ்சில் அமைதியில்லை. இல்லை இல்லை  அவனது நெஞ்சமே போய்விட்டது.....தொலைவில் அவன் வரவு நோக்கி இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிற தலைவியினிடம்  போய்விட்டது. அவளைச்  சென்று தழுவுதற்குரிய இரு கைகள் மட்டுமே மிச்சம் உள்ளன. அவளை அணுகுங்கால் இந்தக் கைகள் செயலிழந்து தழுவ முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது? இத்துணை தொல்லைகளையும் பட்டு மீண்டுவந்தும்  என்னதான் பயனோ?

அவள் வீடும் அவன் வீடும் அருகருகே இல்லை. இப்போது தேரில் சென்று கொண்டிருக்கும் இடத்திற்கும் அவள் இல்லத்திற்கு  மிடையே ஒரு பெருங்கடல்போல்  முழங்கித் தாக்கும் புலிகளை உடைய ஒரு பெருஞ்சோலையும் உள்ளது..  அந்தச் சோலையைக் கடக்க வேண்டும்.


"தேரினை வேகமாய்ச் செலுத்து பாகனே! " என்று  கட்டளை இட்டபடி அவன் எண்ணச் சுழலில் அலமருகின்றான். அவளைத்  தழுவும் என் ஆசை கனவாகிவிடுமா? என்று அவன்  தவிக்கின்றான். பாடல்,பாகனுக்கு அவன் சொன்னதாக வருகின்றது

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் நடந்துகொண்டுவிட்டேனே...........என்கிறான்.

பாடல் இது:

அஞ்சுவது அறியா அமர் துணை தழீஇய
நெஞ்சு நப்  பிரிந்தன்று  ஆயினும் எஞ்சிய
கைபிணி நெகிழின் அஃது எவனோ?  நன்றும் 
சேய அம்ம !  இருவாம் இடையே !
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு 
கோட்புலி வழங்கும்  சோலை 
எனைத்தென்று எண்ணுகோ? முயக்கிடை மலைவே!  (குறுந்தொகை)



அமர் =  விரும்பிய.  தழீ இய = தழுவிய . நப்  பிரிந்தன்று  =  நம்மைப் பிரிந்தது (அவள் பால் சென்றுவிட்டது )
.எஞ்சிய = மிச்சமுள்ள;   கை பிணி நெகிழின் -  கைகள் தழுவாமல் நெகிழ்ந்துவிட்டால்;
அஃது எவனோ?  =  அதனால் யாது பயனோ?  நன்றும்  =  காதலால்தோய்ந்து  தழுவக் கிடைக்கும்  அந்த ஒரு நன்மையுங்க்கூட;   சேய = வெகு தொலைவாகி விட்டதே ;  அம்ம = "அம்மம்மா ".
மாக்கடல் திரையின் = மாவாரியின் அலைபோல் ; முழங்கி = கர்ச்சித்து / உறுமி;

வலனேர்பு =  வலப்புறமாகப் பாய்ந்து தாக்கும்;  கோட்புலி  =  உயிரை எடுத்துக்கொள்ள` வரும் புலி(களையே);  வழங்கும் = நமக்குப்  பரிசாகத் தரும்  நிலையினதாகிய ;   சோலை  -  மரங்கள் செடிகள் அடர்ந்த காட்டுப்பகுதி;;

எனைத்தென்று -  நான் என்னவென்று ;  எண்ணுகோ =  எண்ணுவேன்;
முயக்கிடை =  எங்கள் ஒன்று சேர்தலுக்குத்தான் ; மலைவே =  எத்தனை பெருந்தடைகள்!

என்றபடி.  இது என் உரை.

சங்கப் பாடல்களுக்குத் திணை துறை எல்லாம் உண்டு.  அதன்படி இது தேரோட்டிக்குத்  தலைவன் கூறியது. காதலன் காதலி என்று  சொல்லாமல்  தலைவன் தலைவி என்று மாண்புபெறக் குறிப்பிடுவர்.

குறிப்பு :

கை+பிணி = கைப்பிணி   (கைக்கு வந்த நோய்)

கை + பிணி + நெகிழின் =  கைகளின் தழுவல் சோர்ந்துவிடுமாயின்.  இங்கு வலி மிகாது . ("ப்  " வராது.). வந்தால் பொருள் மாறிவிடும்.

மலைவு என்பது மிக்கப பொருத்தமான அழகிய சொற்பயன்பாடு ஆகும். அந்தப் பெருஞ்ச்சோலையில் திரிந்து  வழிச்செல்வோரைத் தாக்கி உயிர்குடிக்கும் புலிகளில் எதுவும் இந்தத் தலைவனை எதிர்ப்படுமா ? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.  அது நிகழ்ந்தாலும் நிகழலாம்,  அன்றி ஒரு தொந்திரவுமின்றி அவன் அச்சோலையைக் கடந்துசென்று தலைவியை அடைந்தாலும் அடையலாம். எது நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்லற்கில்லை. இந்த நிலையை, "மலைவு " என்றது சிறந்த சொல்லாட்சி ஆகும். மலைவு - மனத்தில் ஏற்படுவது.

ஏர்பு  =  எழுதல். வலனேர்பு   - இங்கு  வலப்புறமாக எழுந்து (பாய்ந்து)  தாக்குதல் என்பது பொருள்  . இந்தக்  கோட்புலிகள் வலமாக வந்து தாக்குபவை என்று  நன்முல்லையார் நமக்கு அறிவிக்கின்றார். இந்தப் புலிகளின் இயல்பு அப்படிப் போலும். இதனை விலங்கியல் வல்லாரைக் கேட்டால்தான் தெரிந்துகொள்ள முடியும். இதை நுண்ணிதின் உணர்ந்துரைக்கும் நன்முல்லையாரை  வியந்து பாராட்டவேண்டும்.  கோட்புலி  =  கொலைத்  தொழிலையுடைய புலி A tiger that invariably kills. One with a killer instinct!! கடித்துப் பழக்கப்பட்டுவிட்ட நாய்  கடித்தே ஆவதுபோல இந்தப்புலி கொன்றே தீரும் என்பது புலவர்தம் கருத்து.  குருதியின் சுவை கண்ட புலி.

 








செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

அபாயம்

தெருவிலே திரியும் நாய்களில் எங்காவது ஒன்று வெறி நாயாக இருக்கும். அது  நடையர்க்கு (pedestrians)  "அபாயம் ".  அதேபோல்  கோகுலத்து வீடுகளில் நிற்கின்ற பசுக்களில் ஏதேனுமொன்று மனிதனை முட்டும் கோபக்கார மாடாக இருந்தால் அதுவும் அபாயமானதாய் இருக்கும்.

"கிட்டே போகாதே!அது பாயும் "  என்று எச்சரிக்கை செய்வார்கள்.  தமிழ் தழைத்திருந்த காலங்களில் "அந்த ஆ பாயும் , அருகில் செல்லாதே !  " என்று  சொல்வர் .

ஆ பாயும் என்பது நாளடைவில் குறுகி "அபாயம்" ஆயிற்று.

நாம் வழங்கும் சொற்களில் சில மாடுகள் வளர்ந்த இடங்களில் உருப்பெற்றவை. சில  மலையடி வாரங்களில் இருந்து புறப்பட்டவை. சில மீனவர்களிடமிருந்து கிடைத்தவை.  அபாயம் -   இந்தச் சொல் மாட்டுத் தொழுவங்களிலிருந்து நாம் அடைந்த பரிசு.

ராஜராஜ சோழன் முதலான அரசர் பெருமக்கள் தம் நாட்டிலிருந்து வெகு   தொலைவு வரை படை நடத்தினார்கள் .  அவர்களின் படையியல் சொற்கள் எல்லாம் எங்கே?   தமிழ்  மொழியில் உள்ள சொற்கள் அனைத்தையும் இப்படித்   துறை துறையாய் இதுவரை யாரும் தொகுத்தளித்ததாகத் தெரியவில்லை.  நீங்கள் முயன்று ஒரு பி.எச்.டி (முனைவர்)  !போடலாமே ....... அந்தக் காலத்தில் தொல்காப்பியனார் கொஞ்சம் செய்துள்ளார். நிகண்டுகள் சில உள்ளன.

கண்ணதாசன் பாடியதுபோல நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க !  ஆ பாயும் அபாயம் இன்றிப் பத்திரமாக -  நலமுடன் இருங்கள்.

notes:

Sanskrit has bhaya meaning:   (= பயம்)
 fear , alarm dread apprehension ; fear of  RV. {bhayAt} . `" from fear "' ; {bhayaM-kR} with abl. `" to have fear of "' ; {bhayaM-dA} , `" to cause fear , terrify "') ; . terror , dismay , danger , peril , distress ; danger from  or to , (comp.) ib. ; the blossom of . ; m. sickness , disease  ;

but abhaya means fearlessness. or protection from fear. (=அபயம் )

பயம் வேறு அபாயம் வேறு.  apAyam was absorbed into Skrt as Tamil teachers thought it was a Skrt word.


சட்டி.

சட்டி.


இந்தச் சொல் எங்ஙனம் வந்தது. சம்ஸ்கிருதமா? இல்லையே! பின் எப்படியாம்?

அடுதல் என்றால் நெருப்பில் வைத்துச் சூடேற்றுதல் என்று பொருள்.


அடு ‍>  அடுப்பு   நெருப்பு எரிக்குமிடம்.

அடு > அட்டி >சட்டி.

இப்போது சமர்ப்பித்தல். சபதம் என்னும் இடுகைகளைப் படித்துப்பாருங்கள்.

ஐயம் தீரும்.

எட்டி > செட்டி > செட்டியார்.  ( அரசரால் எட்டிப் பூமாலை சூட்டி  மதிக்கப்பெற்றவர் ) என்றனர் ஆய்வறிஞர். உயிர் முதலான‌ சொல், செகரம் பெற்றது காண்க.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

சமர்ப்பித்தல்

இனி சமர்ப்பித்தல் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

உயிர் எழுத்து முதலாக வந்த சொற்கள், பின் சகரம்,சகர வருக்க எழுத்தை முதலாகக் கொண்டு  மாறியது கண்டோம். இது சமர்ப்பித்தல் என்னும் சொல்லுக்கும் பொருந்தும்.


அமர்  ‍ >அமர்தல்
அமர்  >  அமர்த்தல்
அமர் >  அமர்ப்பித்தல்.

அமர்ப்பித்தல்  :  அதாவது  உங்கள் ஓலை  (வேண்டுகோள் கொண்டது)  அரசர் அல்லது அதிகாரி முன் "அமரச் செய்தல்" (அமர்வு பெறச் ) செய்தல்.

பின், இது சமர்ப்பித்தல் என்று  திரிந்துவிட்டது.

இன்னும் சில திரிபுகள்:

அமணர் >  சமணர்
.
அம்மட்டி > சம்மட்டி plants (not a hammer)

அம்+மதித்தல் > சம்மதித்தல்.  (அம் = அழகு , அழகாய் மதித்தல் -  எனவே ஏற்றுக்கொள்ளுதல் consent )
(இதை வேறுவிதமாக விளக்குவர் சிலர்)


அவை > சவை > சபை > சபா .

இவ்வளவு போதும், எடுத்துக்காட்டுக்கு !

அகரமுதலான சொற்கள் சகர முதலானதற்கு .......

சபதம்   (I , II ) என்னும் இடுகையையும் காண்க.      

சட்டக் கல்வியினால்

கல்லூரி கற்பித்த தென்னவோ---   சட்டக்
கல்வியினா லேதும் நன்மையோ?
கொல்லும் இனவெறி மற்றுண்டோ --- அறம்
கோரிடும் மானிடப் பற்றுண்டோ?

வாடிய மக்களைக் காப்பாற்ற--- ‍‍‍‍‍முன்
வந்திடு வானோஇங்  காமென?
கூடும் அறஆயம் மேல்சாற்றும்--- ஆணை
கூன்படச் செய்வானோ பூமியில்?

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

சபதம் II

முன்பதிந்த  இடுகையில் சபதம்  என்பது  அவம் > அவதம்  என்பதன் திரிபு என்றோம்.  எப்படி முடியும்?  அவம் என்பது எப்படி அவதம் ஆனது?

ஆக்கப்பட்ட சொற்கள் பலவற்றில் "அ து" என்பது இடையில் புகுத்தப் பட்டுள்ளது.  ("இடைப்புகவு ").

அவம் + அது+அம்   >  அவ + அது + அம்  >  அவ+ து+ அம்   >  அவதம் .

தச்சன் நிலைப்பேழையைச் செய்யும்போது வேண்டாத கட்டைகளை அறுத்து வீசிவிடுதல்போல் ேண்டாத ஒலிகள் களையப்பட்டன,  இல்லாவிட்டால் "அவமதுவம் " என்றாகிவிடும்.  நீங்கள் ஒரு புதிய பெயரையோ சொல்லையோ படைப்பதாயின் இந்த உருவாக்க முறையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பருத்தல் = becoming big in size.  to increase in size.
பரு > பரிய  big.
பரு+ அது + அம்

 =  பருவதம் > பர்வதம்  (இங்கே "வகர " உடம்படு மெய் வந்தது.  இல்லாவிட்டல் "பரதம்" என்ற சொல்லுடன் குழம்பிவிடும்  ("மயங்கும்").

இதுபோல அது இது என்ற சொற்கள் புனைவில் புகுத்தப்பட்ட சொல்லாக்கங்கள் மிகப்பல.

"வோவ் " (vow) என்னும் ஆங்கிலச் சொல்   "வகத்"  என்ற   சமஸ்கிருத  மூலத்தோடு தொடர்பு உடையதென்பார் அறிஞர் . Sanskrit vaghat- "one who offers a sacrifice.

notes:

c.1300, from Anglo-French and Old French vou, from Latin votum "a vow, wish, promise, dedication," noun use of neuter of votus,past participle of vovere "to promise solemnly, pledge, dedicate, vow," from PIE root *ewegwh- "to speak solemnly, vow" (cf. Sanskrit vaghat- "one who offers a sacrifice;" Greek eukhe "vow, wish," eukhomai "I pray").  (from Dictionary )

பர்வதம் -  சங்கதச் சொல் :  மலை. " பர்வத ராஜகுமாரி பவானி "  என்பது பாடல்.
பர்வதம் > பார்வதி .  மலைமகள்.

சபதம்

சபதம் என்பதைக் குறிக்கப் பல சொற்கள் சங்கதத்தில் உள. இவற்றுள் பல, "வ்ரத" என்ற இறுதிபெற்று முடியும். வெறுமனே வ்ரத என்றாலும் சங்கதத்தில் சபதம்தான். சபதம் என்பது அங்குக் காணப்படவில்லை. நீங்களும் தேடிப்பார்த்து, இருந்தால் தெரிவியுங்கள்.

சகரம் மொழிக்கு முதலில் வராது என்று தொல்காப்பியத்தில் ஒரு நூற்பா காணப்படுகிறது. இது ஆராய்ச்சி அற்ற‌ ஆசிரியர் எவரோ ஒருவரின் இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை.

சமைத்தல் என்பது சமஸ்கிருதம் அன்று.  சண்டை என்பதும்  அப்படியே. இங்ஙனம் எத்தனையோ சொற்கள்!  உதைப்பது என்று பொருள்படும் சவட்டு என்னும் மலையாளச் சொல்லைப் பாருங்கள்.   இந்த நூற்பா பிற்பட்ட காலத்திய இடைச்செருகல்,  இது  நன்றாகவே புரியும்.

சபதம் தொடக்கத்தில் "இன்னதைத் தடுக்காமல் விடமாட்டேன்" என்பதுபோன்ற உறுதிச்சொல்  வெளிப்பாட்டைக்  குறித்தது. இங்ஙனம்  தடுக்கப்பட்ட நிகழ்வு கெட்டுவிடும் அன்றோ? எனவே  கெடுத்தல்  கருத்தினடிப்படையில்  சபதம் அமைந்துள்ளது.

அவம்  >    அவதம்  >  ச‌வதம்.>   ச‌பதம்.

அவம் = கெடுதல்,  கெடுத்தல்.

அமைதல்  - சமைதல்   போன்றது  இது.  அ -ச திரிபு.


சபதக் கதைகள் பல நமக்குக் கிடைக்கின்றன. மங்கம்மா  சபதம், சரசு  வதி  சபதம்  எனத் தொடங்கிப் பலவாம் அவை .  சபதம் மேற்கொண்டவர் வெற்றி, மற்றவருக்குத் தோல்வி.தோல்வியிலும் நன்மை இருக்கலாம் எனினும் இத்தகு வெவ்வேறு  நிலைகளை அவ்வக் கதைகளில் கண்டுகொள்ளுங்கள்.

இனி இன்னொரு அ > ச திரிபைக் காட்டுகி ேன்.

அமர்  > சமர்.

அமர் என்ாலும் போர்;  சமர் என்றாலும் போர்.தான்.  இந்தத் திரிபில் பொருள்
மாறவில்லை.

எனவே அவதம்  எனற்பாலது சவதம் > சபதம் ஆனதென்பதை அறியலாம் .

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பி தா

தந்தையைக் குறிக்க சங்கதமொழியில் உள்ள சொற்கள் மிகப்பல. தந்தை யென்ற சொல்லும் அங்குள்ளது. இன்னும் பல. ஏக தந்தாய நம!  என்று இறைவணக்கத் தொடரில் வருகின்றதன்றோ?

ஆனால் இங்கு ஒரு சொல்லை மட்டும் சிந்தித்து அறிவோம்.

பின் என்ற சொல், சில சொற்சேர்க்கைகளில் பி‍ என்று குறையும்.   எடுத்துக்காட்டு:

தம்+ பின்   =   தம்பின்.>  தம்பி. ( தமக்குப் பின் பிறந்தவன்  தம்பி.)

தாய்க்குப் பின்  நாமறிந்துகொண்ட தெய்வம் பிதா.

பின்  + தாய்  =  பி(ன்) +  தா(ய்).=   பி தா.

சில சொற்கள்   முன் பின்னாய் அமையும் என்பதைப்  பல இடுகைகளில் எடுத்துக்காட்டி யுள்ளேன்

அப்பா எனபதில் உள்ள "பா"  பி   என்று திரிந்தது என்று  கொள்வாரும்  உளர் . அங்ஙனம் ஆயின் -தா என்பது பின்னொட்டு  எனல் வேண்டும்.
"பிதா" என்பதைப் பிரிக்கலாகாது என்று சிலர் வாதிடுவர்.  இலத்தீன் மொழியில் -பா என்றே சொல் தொடங்குகிறது..
"பா பா "  =  போப்பாண்டவர்.
ஆகவே பி(ன்) + தா(ய் ) என்பது .பொருத்தமானது .

மாதா -  பிதா - குரு  தெய்வம்  என்ற நிரலில் மாதாவிற்கு அடுத்து நிற்பவர் பிதா. தாய்க்குப் பின் தாரம் என்பது ஆண்மகனைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட  குடும்பவியல்  பழமொழி.  இங்கு மாறுபாடு எதுவுமில்லை..

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

derivations of words meaning mother

இப்போது  ஆத்தா என்ற சொல்லைப் பார்ப்போம்.

ஆய் என்றால் அம்மா என்று பொருள், இது யாவரும் அறிந்ததே.

தாய் என்பதும் அதே பொருளுடைய சொல்.

ஆய் + தாய் =  ஆ+ தா = ஆத்தா.   இச்சேர்க்கை இரு சொற்களிலும் உள்ள யகர ஒற்று மறைந்து புணர்ந்தது. இது உலக வழக்கில் அல்லது பேச்சு வழக்கில் விளைந்தது. (தாத்தா என்பது வேறு).

பல பெண்டிரின் பெயர்கள்  ‍‍தா என்ற பின்னொட்டுப் பெற்று முடியும்.  இவற்றிலும் தாய் என்ற சொல் யகர ஒற்றை இழந்து பெயர்ப் பின்னொட்டாக நிற்கின்றது.

நந்திதா, வேதிதா,.... என்பவெல்லாம்  நீங்கள் அறிந்தவை.

ஆகவே தாய் > தா. (கொடு என்னும் தா வேறு.)


மாதா என்பது (அம்)மா + தா(ய் ) =  மா + தா.  முழுமையானது  " அம்மா தாயி"   என்பது போன்றது.

தாய்  >  தா  > தாதி

தி என்பது பெண்பால்  பின்னொட்டு.

சனி, 15 பிப்ரவரி, 2014

makam - star name derivation

மகம் என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர்.  ஆங்கிலத்தில் இதற்கு "ரெகுலஸ்" (Regulus) என்று பெயர்.  கணியர்(சோதிடர்)களின் கருத்துப்படி இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் சிறந்த பலன்களை அடைந்தின்புறுவர் ஆதலான். இது உண்மையில் பெருமைக்குரிய நட்சத்திரம், அதனால் அது "மகம்" என்று பெயர் பெற்றது, மேலும் மகம் என‌ற்பாலது மஹா என்ற சொல்லினின்று பிறந்தது என்பர்.

இது பெரிது என்று பொருள்தரும் மஹா விலிருந்து தோன்றியிருத்தலும் கூடும்.  மஹா என்பதும் மா என்ற தமிழ்ச் சொல்லுடன் ஒத்த பொருளுடையதுதான்.

மகு  என்ற அடிச்சொல்லைச்  சற்றுக் காண்போம்.

மகு  >  மகு+இழ் >மகிழ்.

மகு   > மகு+ உடு +  அம்  =  மகுடம்.

மகு  >  மகு +  உடு  +  இ  = மகுடி.

(மகு + ஊது + இ  =  மகூதி  > மகுதி  > மகுடி  என்றும் வந்திருக்கலாம்)

மகு   >  மகிழ்   + அம் = மகிழம் (மகிழம்பூ)

மகு என்ற அடிச்சொல்லின் வழிவந்த சில சொற்களைக் கண்டோம்.  "மக" என்பதோ வேறு   ஓர்  அடிச்சொல். இச்சொல்லிலிருந்து மகன், மகள், மக்கள்,   மகார் முதலான சொற்கள் பிறந்துள்ளன என்பதை முன்  ஓர் இடுகையில் கண்டு இன்புற்றோம்.

 மகு, மஹா, மா என்பவற்றைவிட ,    " மகம்" என்ற நட்சத்திரப் பெயர், "மக:" என்பதினின்றும் தோன்றியது என்று கொள்வது பொருத்தமாகவே தெரிகிறது.  சோதிடர் சொல்லுகிறபடி, பலன்கள் நல்ல பல தருவது என்று கண்டபின்  தான் அதற்குப் பெயர் அமைத்தனர் (அதுவரை அதற்குப் பெயர் இல்லை ) என்பதினும் அது மக என்ற அடிச்சொல்லிலிருந்து தான்  பெயர் கொண்டுள்ளது எனல் அதிகம்  பொருந்துவது. ஏனெனில் மகம்  என்ற நட்சத்திரம்  நான்கு  உடுக்க‌ளை ஒரு குழுவாக உடையதாகும். கண்டதும் அறியக்கிடக்கும் அதன் கூட்டத்தைக் கண்டு பெயர் அமைத்தனர், பின்னர்  அது நற்பலன் தருவது என்று கண்டனர் என்பதே  இயல்பான நடப்பு ஆகும் .

இவை "நட்சத்திரப் பிள்ளைகள்" கூட்டம்,  ஆகவே   மக+அம் ‍=  மகம்  என்று நம் முன்னோர் பெயர் கொடுத்துள்ளனர் என்பதே  பொருத்தமாகும்.
========================================================================
Notes :

நகுதல் ;  நகு + அம்  = நக்கம்;  ஒளி விடுதல் .  திறம் -   திரம்  (போலி).
நக்கம்+ திரம்  =  நக்கத்திரம்  >  நட்சத்திரம்.   நகுதல்  - சிரித்தல்  இன்னொரு பொருள்.

magha :  meaning:-   a gift , reward , bounty ( Rig Veda). ; wealth , power . ; a kind of flower . ; a partic. drug or medicine  ; . of a Dvi1pa  ; of a country of the Mlecchas  ; . (also pl.) Name. of the soth or 15th Nakshatra (sometimes regarded as a wife of the Moon) AV. &c. &c. ; Name of the wife of Siva  ;  female:. a species of grain .  Note that there seems to be nothing common among these various meanings, unless it is said that all are "big". Since the "star" meaning did not manifest itself from Rig Veda, it may be right to say that it later entered as a star name in Atharva Veda.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

அவம், வருத்தம்

அவர்த்தி என்பது சங்கதத்தில் வறுமை என்று பொருள்படும் சொல். கடுந்துன்பம் என்ற பொருளும் உள்ளது.

அவம், வருத்தம் என்ற இரு சொற்கள் சுருங்கி இணைந்தால் "அவர்த்தி" என்னும் சொல்  தோன்றும். வருத்தம் > வருத்தி.

அவம்+ வருத்தி  = அவ + வருத்தி = அவர்த்தி.

வருத்தம் மேலிடும் கெடுதலான நிலை.

அவி+அம் = அவம், இங்கு இகரம் கெட்டது. 

abject poverty of Tamil pundits



தமிழில் புலவர் என்றிடினும்
தகுந்த மேலணி தரித்திரமோ?
இமிழும் கடலாம் அறிவினிலே
எனவே பலரும் போற்றிடினும்
அமுதே படைக்கும் அடியவளாம்
துணையைத் துவட்டும் நோயினுக்கோ
அமைவாய் மருந்தை அளித்திடவே
அதற்கும் பொருளே இலரானார்!



பட்டம் பலவே அளிப்பதினும்
பண்படு புலவர் அவரென்றால்
ஒட்டி வயிறும் உலர்வறுமை
ஓட்டும் வழியே  ஒன்றுதவி
நெட்ட நெடுகலும் அரசுதர
நிதியைத் திங்கள் ஒவ்வொன்றிலும்
கட்டி முடியாய்க் கொடுப்பதிலே
கழறும் தவறும் காண்பதுண்டோ?

புதன், 12 பிப்ரவரி, 2014

அற்றம் அறம்

கறார்  என்ற சொல் கீழே வி்ளக்கப்பட்டது.  கறு என்பது அடிச்சொல்.

இங்கு "று"   > "ற்று" ( ற்றா) என   இரட்டிக்கக்வில்லை. கற்றார் எனில் பொருள் வேறுபடும் . மறு + ஆர் என்பதோ   மற்றார்  என்று இரட்டிக்கும்.

சிறு + ஆர் எனில் சிறார்  என இரட்டிக்காது வரும். 

இனி அறு  என்பதனுடன் அம்  சேர என்னாகும்.?


அறு + அம்  = அறம் என்றாகும். அறுத்துப்  பெரியோரால் நிலை நிறுத்தப் பட்டது என்று பொருள் . (வரையறுக்கப் பட்டது.)  அறம் , பொருள்  இன்பம் என்பவற்றில் முதல் ஆவது .

அறு + அம்  = அற்றம் .  இப்படி இரட்டித்தால் "தருணம்" என்று பொருள்.

இங்கு இருவகையாகவும் வந்தது காண்க. ஆனால் பொருள் வேறுபட்டது. 

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

கரார் கறார்

பண்டமாற்றுக் காலத்திலிருந்தே பொருளைப் பேரம்பேசி வாங்குவதென்பதே மனநிறைவு அளிக்கத் தக்க நடவடிக்கையாக இருந்திருப்பது தெரிகிறது. பேரம் பேசாமல் வாங்கிவந்த பொருளை நம் தோழியர்களில் ஒருத்தி பார்த்து, குறைத்துக் கேட்கவில்லையா ‍  விலை அதிகம்போல் தோன்றுகிறதே என்றால், நாம் ஏமாந்துவிட்டதுபோன்ற உணர்வன்றோ மேலிடுகின்றது? பேரம்பேசி வாங்குவதே செம்மையான முறை என்று பலர் கருதுவர். செம்மை ‍  1,நேர்மைக்கு உரிய வழி, 2. சிவப்பு என்று இரு பொருளுண்டு. பேரம் இல்லையென்றால் அது கருப்பு, இருட்டுடன் தொடர்புடைய வணிக வழி.........!  -  என்று நினைத்தனர் .

கரு > கருப்பு.
கறு > கறுப்பு.

கரு >   கரார் .   (கரு+ஆர் )

கறு  > கறார் .  (கறு+  ஆர் )

ஆர்  ஈறு பெற்ற சொற்கள் .


கரார்  விலை =    வரையறவு செய்யப்பட்ட விலை.

கருப்பு  கறுப்பு  என்று இருவகையிலும் சொல்லமைதல் போல்  கரார்  
கறார் என்று அமைந்துள்ளன .

வாங்குபவன் பேசி  விலையை நிறுவிக்கொள்ள வழியில்லையென்ால்  நிலைமை கருப்பு நிறம்தான்!

வேண்டலும் வழங்கலுமே (demand and supply)   விலையை நிறுவும் என்பது இற்றைப் பொருளியல் கொள்கை. நம் சொற்கள்  பழைய உலகின் கண்ணாடிகள். 

இவை சந்தைச் சொற்கள். 

 

திராணி .

"எதிர்த்துக் கேட்க  அவனுக்குத் தெம்போ திராணியோ இல்லை" என்பர் பேசும்போது!

"திராணி " என்ற சொல்லைப் பார்க்கலாம்.  திராணி எனவும்  திறாணி எனவும்
 இருவகையிலும்  இது எழுதப்படுவதுண்டு .


tirANiability, capacity, strength, power

tiRANiability



திறம் + அணி  = திற + அணி = திறாணி .>  திராணி .


திறமணி  என்றோ  திறவணி  என்றோ அமையாது.

திறம் என்னும் அழகு என்பதாம், 





வியாழன், 6 பிப்ரவரி, 2014

உரொக்கம் > ரொக்கம்

தமிழில் தலையிழந்த சொற்கள் பல.   "நிரம்ப" என்பது "ரொம்ப" ஆனது ஓர் எடுத்துக்காட்டு, இதில் நாம் கவனித்துக்கொள்ள வேண்டியது நிறைதல்,  நிரம்புதல்  என்ற சொற்களின்  பொருள் ஒன்றுபாடும் நிறை ‍‍<> நிர என்பவற்றின் ஒலி அணிமையும் (proximity in sound)  ஆகும்.

இப்போது "ரொக்கம்  " என்பதை ஆராய்வோம்.

ரொக்கம்  என்பதில் உள்ள இரண்டாம் சொல்லை முதலில் எடுத்துகொள்வோம் .

ஒக்குதல் என்பதன் பொருள்களில் ஒன்று, ஒதுக்கி வைத்தல் என்பதாம். ஒக்குதல் என்பதுகூட ஒதுக்குதல் என்பதிலுள்ள துகரம் மறைந்த சொல் என்று கொள்வதும் இழுக்காது. ("இடைக்குறை" ) .

சிறு சிறு தொகைகளைக்  கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்துப்  பின் ஒன்றாக எடுக்கும்போது அதுவே "ரொக்கம்" ஆகிறது.  அதை ஒருத்தியிடம் கொடுத்து "ரொக்கம் " கொடுத்தேன் எனில் அது பொருந்துகிறது. சிறுசிறு தொகைகளாக இல்லாமல் ஒரே தடவையில் மொத்தமாக என்று பொருள்.
இதுவே அதன் தொடக்க காலச்  சொல்லமைப்புப் பொருளென்றாலும் இன்று அது காஷ் (cash or cash-in-hand) என்ற ஆங்கிலச்சொல்லுக்கு ஈடாக நிற்கின்றது. இன்று காசோலையாய் ‍இல்லாமல் "பணமாக"  எ ன்றன்றோ பொருள் தருகிறது! (NOT BY CHEQUE OR ATM ELECTRONIC TRANSFER OR GIRO DEDUCTION).

இனி "உரு"  என்ற  முன்  நிற்கும் சொல்லை அறிந்துகொள்வோம்.  உருத்தல் எனின் முன் தோன்றுதல்.  ஒதுக்கி வைத்த மொத்தமும் உங்கள் முன் இப்போது தோன்றிவிட்டது !  அதுவே உரு+ஒக்கம்  = உரொக்கம் > ரொக்கம் என்பதாகும்.

இந்தச் சொல்லின் பொருளை ஒரு வாக்கியத்தில் எழுதுவதானால், "ஒதுக்கி வைத்த மொத்தமும்  உங்களின் முன்  ஒன்றாகத் தோன்றிவிட்டது " என்று எழுத வேண்டும். எந்தப் பணமானாலும் எங்காவது  ஒதுக்கமாக (பைக்குள்) வைத்திருந்துதானே  உங்கள்முன் காட்டுகிறார்கள்.

நிதி பற்றிய கலை முன்னேற முன்னேறச் சொற்பொருளானது சில சாயல்களில் வேறுபடும்.  சொல்லின் அமைப்புப் பொருள் அதன் இற்றைப் புழக்கப் பொருளினின்று வேறுபடும் என்பதுணர்க.


குறிப்புகள் :

ஒதுக்குதல் >  ஒ(து)க்குதல் - ஒக்குதல்.    "து"    இடைக் குறைந்தது ( ஒத்தல் being equal என்பது வேறு  .)

உருத்தல் : "ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதும்"  - சிலப்பதிகாரம்.

சொல்லாக்கத்தில்  உடம்படு மெய்  வராமலும்  சொல்  அமையும் .  எ-டு  :   ,மகன்   மகள்  என்பவற்றுக்கு  சின்னாட்களுக்கு முன்  கீழே தரப்பட்ட விளக்கம்  கா்ண் க   ஆகவே  உரு  + ஒக்கம்  = உருவொக்கம்  என்று அமையவில்லை.  இது  புலவர்புனைவு ச்  சொல்  அன்ெ ன்பதும்  ஒரு காரணமாகலாம்  போலும் .  ஒக்கம்  என்பது இப்போது  பேச்சு வழக்கில்  இல்லை  என்று  நினைக்கிறேன் .


பிற+அன் =  பிறன் ,  இதில்   பிறன்  என்று  கர  உடம்படு  மெய்  வந்திலது   கா ்ண்க 



செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மகன், மகள், மகார்

மகன், மகள், மகார் என்பன மிகவும் அழகுபெற நம் தமிழில் அமைந்த சொற்கள்.

மக +  அன்  =  மகன் என்று அமைந்தது சரிதான்.
அதுவேபோல்,  மக +  அள் = மகள் என்பதும்  நன்றேயாம்.

இதில் கேள்வி:  மக+ அன் = மகவன் என்றும்  மக +அள் = மகவளென்றும்  உடம்படு மெய் பொருந்தி ஏன் அமையவில்லை?

சிவ + அன் =  சிவன். செம்மைக் கடவுள். முருகனும்தான்.

உடம்படுமெய் இங்கெல்லாம் தேவையில்லை  என்க.

A short dialogue on word formation.


புதன்கிழமை 29.1. 2014ல் வகரம் பகரமாகத் திரியும் என்னும் இடுகையில்

 இது  போன்றவை நம்  பழைய இலக்கணக் கோட்பாடுகட்கு இணங்க அமையவில்லை. இருப்பினும்  தமிழே.  

என்று எழுதியிருந்தேன். இதைப் படித்துவிட்டு, பழைய இலக்கணங்களில் குழறுபடிகள் ஏதும் இல்லை என்று எண்ணிவிடாதீர்கள்.

பழைய இலக்கண விதிகள் ஒத்துவராத இடங்கள் அந்தப் பழைய இலக்கண காலத்திலேயே ஏராளம். அதில் ஒன்று மட்டும் உங்களுக்குச் சொல்கிறேனே.  கேளுங்கள்.

மக்கள் என்ற சொல்லைப் பார்ப்போம்.

மக என்பது அடிச்சொல்.

மக > மகன்
மக > மகள்.  So far, so good.  But:

மக + கள் =  மக்கள்.

இயல்பாகப் பார்த்தால்   "மகக்கள்" என்றல்லவா வரவேண்டும்?  ஏன் மக்கள் என்று வந்தது?

அது போகட்டும்.

"கள்" விகுதி அஃறிணைக் குரியதென்றார் தொல்காப்பியனார். உயர்திணையாகிய "மக்களில்" எப்படி "கள்"  விகுதி   வந்தது?  அதை எப்படித்  தொல்காப்பியனாரே ஏற்றுக்கொண்டார்.

இதிலிருந்து   நாம்  அறிவது:   சொற்களை உருவாக்கும்போது இலக்கணத்தை  முழுவதும்  பின்பற்ற இயலாது என்பதுதான்.





திங்கள், 3 பிப்ரவரி, 2014

கோடி கொடுத்து.......

கோடி கொடுத்துக் கொடுந்தேர்த லில்வென்று
நாடு நடத்துமோர் நாயகனின்--- ‍‍‍‍கேடறிய
ஏடு வெளியிட்டும் ஏதும் தொடர்காணோம்
மூடினவோ ஊடகங்கள் வாய்.

வேறொரு நாட்டின் தலைவர் பற்றி ஒரு செய்தி வெளிவந்தது. ஆனால், அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்நிலை பற்றிய பாடல் இது.

 ஏடு = பத்திரிகை,  வெளியிட்டும் =‍‍ செய்தி வெளியிட்டும்.

பணம் "புரண்ட " தேர்தலாதலால் "கொடுந்தேர்தல் " ஆயிற்று.  

 சில சமயங்களில் செய்திக்குப் பிந்திய நிகழ்வுகளை ஊடகங்கள் கவனிப்பதில்லை. பின் நிகழ்வுகள் செய்தித் தகுதியை   (newsworthiness )இழந்துவிடுகின்றன போலும்.

வியாழன், 30 ஜனவரி, 2014

காரசாரம்

காரசாரம் என்பதோர் அழகிய சொல்.

காரம் என்பதற்குப் பல பொருளுண்டு எனினும், மிளகாயின் காரம் நினைவுக்கு வந்துவிடுகிறது.

சாரம்  : சார்ந்தது.  சார்தல், சார்பு, இவை சார் என்னும் அடிச்சொல் கொண்டு அமைந்தவை.

காரசாரமான விவாதம் என்கிறோம்.

விளக்கம் தேவையில்லாத சொல்லாகும்.

புதன், 29 ஜனவரி, 2014

வகரம் பகரமாகத் திரியும்

வகரம் பகரமாகத் திரியும் என்பது :தூபம்" என்ற சொல்லைப் பற்றிய விளக்க இடுகையில்  (கீழே )  எடுத்துச் சொல்லப்பட்டது.

இப்போது  வேறு  சில சொற்களை ஒப்பிடுவோம்.

கூவம் > கூபம்.
*தவி + அம் = தாவம் > தாபம். தாவம் > தாகம்.
அவி + அம் = அவம், அவம்> அப, (அவிதல், அவிந்து கெடுதல், கேடு)
(அப கீர்த்தி, அபகடம், அபகாரம்  அபத்தம் எனப்பல)

அவ என்பது ஒரு சங்கத முன்னொட்டானது )

பாவம் > பாபம்
சாவி(த்தல்), சாவி+ அம் = சாவம் > சாபம்,
கோவம்  > கோபம்.

கா > காவல் ;
கா > காவந்து > காபந்து @
(காவல் > காவல்+து >  காவந்து ) இது பேச்சு வழக்குச் சொல் .
காவல் >காவன் > காவன்  து  > காவந்து.  ல்>ன்  திரிபு  மற்றும் து விகுதிச் சேர்க்கை .

@ இது  போன்றவை நம்  பழைய இலக்கணக் கோட்பாடுகட்கு இணங்க அமையவில்லை. இருப்பினும்  தமிழே.  

...........எனப்  பலவாம்.

குறிப்புகள்

*தாகம்  எடுக்கிறது என்று சிலர் கூறினாலும் " தண்ணீர்  தவிக்கிறது"  என்று 
சிற்றூர்களில் கூ்றுவதுண்டு. எனவே "தவி" அடிச்சொல்..      

புதன், 22 ஜனவரி, 2014

தூபம்.



இப்போது சாம்பிராணி, பல மாதிரிகளில் கிடைக்கிறது. கட்டி, தூள், குப்பி என்பன எனக்குத் தெரிந்த சில  வடிவங்கள். இவற்றுள் கட்டிச் சாம்பிராணியே முந்தியது என்று தெரிகிறது. கட்டியை நொறுக்கித் தூளாக்கித் தான் தூபக்கால் நெருப்பில் இடவேண்டும்.

தூளாக்கித் தூவினால் நறுமணப் புகை வருகிறது.

தூவு  > தூவம் > தூபம்.

ஒப்பீடு :  வசந்த் -  பசந்த்   (வசந்தம்)

வகரம் பகரமாகத் திரியும். 

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

பெண் சம நிலை

"தலைமை அமைச்சராய்ப் பெண்ணிருப்பதா?
தாரணியில் நானிங்கே பின்னிருப்பதா?
குலைப்பேன் அரசுதனைக்  கூன்படுத்தியே,
கூடிடுவீர் சென்றவளைப் பின்கிடத்துவீர்....."

என்றகுரல் எங்கேனும் ஞாலம்தன்னில்   
ஒலித்தபடி செல்லுமிந்தக் காலம் தன்னில்!       
இன்றுவரும் நாளைவரும் ஒத்தநிலைஎன்
றிருந்ததன்றிக்  கையில்வரப் பெற்றதிலையே.

புதன், 15 ஜனவரி, 2014

baby, young persons - newcomers

( continue from post dated 7.1.14 below )    புதல்வர், புதல்வி, புதல்வன் என்பன புது (புதியது, புதுவரவு) என்பதிலிருந்து கிளைத்தமைந்த சொல் என்று இங்கு கூறப்பட்டுள்ளது.

இப்போது நாம் சில ஒப்பீடுகளைச் செய்யலாம்.

தமிழில் "பை"  (பைந்தமிழ், பைங்குழவி ) என்ற அடிச்சொல் இளமை, பசுமை முதலிய மூலக்கருத்துக்களை உடையது. பை > பையன். தென்கிழக்காசிய மொழிகளில் பாயோ*, பாயு* என்பன  புதுமைப் பொருளன. மலாய் மொழியில் பாயி என்பது குழந்தை.

பாலன், பால, என்பன இளமைப்பொருள. சில தென்கிழக்காசிய மொழிகளில் பாலோ என்பது புதிது என்றே பொருள்படுகிறது.


---------------------------------------------------------------------------------------------------------
Note: *word collections from Pangasinan and Kapampangan (South East Asian) languages.

The difference between b and p is disregarded..

வியாழன், 9 ஜனவரி, 2014

ஊர்ஜிதம்.

ஊர்ஜிதம்.

இப்போது  இந்த வாக்கியததைப்  பாருங்கள்:

அவர் தம் உறுதியைத் தெரிவித்தார்.

இவ்வாக்கியத்தில்  அழுத்தம்  குறைவாகவே  இருப்பதாகக் கருதுவர் சிலர்.


எப்படி அழுத்தம் கொடுப்பது?


தம்  உறுதி  என்பதை  உறுதிதம்  என்று  மாற்றுக.

அழுத்தம் போதவில்லை.

உறுதிதம்  >  உறுஜிதம்.

இப்போது  அழுத்தம் தென்பட்டுவிட்டது.  ஆனால் இன்னும் போகலாம்.


உறுஜிதம்  >    ஊர்ஜிதம்.

இப்போது அழகிய அழுத்தமான இன்னொரு சொல்  கிடைத்துவிட்டது .

ஊர்ஜிதத்தில்  வரும் தம்,  பிடித்தம் என்பதில் வரும் "தம்" போல ஒரு விகுதியாக  அல்லது சொல்லீறாக இருக்கட்டுமே! அப்படியே கொள்வோம்.  என்ன மோசம் போய்விட்டது.






புதன், 8 ஜனவரி, 2014

பினாமி

பினாமி 


இனி பினாமி என்ற சொல்லினைப் பார்ப்போம்.

இதை,  பின்+ ஆம் + இ என்றும்,  பின் + நாம் + இ என்றம் பிரிக்கலாம்.

இவற்றுள் ஆம் என்பது, ஆகும் என்பதன் சுருக்கம்.

பின்னால் நின்றுகொண்டு ஆகும் அனைத்தும் செய்பவன் (அல்லது செய்பவள்) "பினாமி" ஆவான்(ள்).

பின்னால் இருந்தபடி ஆமாம்சாமி போடுவோன் என்றும் பொருள்படும்.

நாம் என்பது நாமம் என்பதன் "சுருக்கம்".

பின்னால் இருந்தபடி தன் நாமத்தை (பெயரை)த் தந்துதவுபவர் என்பது பொருள்.
செயல்பாடுகளை இயக்குவோனே  முன்னிருப்போன். பின்னால் இருப்பவன் பின்னால்  ஆவன செய்துகொண்டு "நாமத்தைத்" தந்துதவி நிற்பவன்.

சொல்லமைப்பில் ஒற்றுக்கள்  இரட்டிக்காமலும் அமைவது பெருநிகழ்வு.

இச்சொல்  ஓர் இருபிறப்பி.

Note:  The title could not be entered. Error.

செவ்வாய், 7 ஜனவரி, 2014

புதல்வர்

புதல்வர் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் மக்கள் என்பது. புதல்வர் தமிழன்று என்பர் தமிழாசான்மார்.

புதல்வர் என்பதன் அடிச்சொல் புது என்பதே. முன் பிறந்து வாழ்ந்துகொண்டிருப்போரை நோக்க, புதுவரவுகளாகிய புதல்வர் புதியவர்களே ஆவர். இச்சொல்லை இப்படிப் பிரிக்கலாம்.

புது +  அல் + வ்+ அர்  =  புதல்வர்

அல் என்பது பல சொற்களில் விகுதியாய்ப் பயன்படுவதே. மத்தியக் கிழக்கு மொழிகளில் இது சொல்லின் முன் நிற்கும்.  உதாரணம்:   அல் கைதா.  அல் காதிப்.  அல் கிதாப்.  (al is like  "the" in English)

தமிழில்  பெரும்பாலும் தொழிற்பெயர்  விகுதியாய் வரும்.  காட்டாக: காணல், ஆகல்.

புதல்வர்  என்பதற்கு  நேராக,  தாய் தந்தையரைக் குறிக்கப்  "பழல்வர்"  என்ற சொல் அமையவில்லை.

---------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு : -  அல் சொல்லீ்று  ஆங்கிலத்திலும் உள்ளது:  committal, acquittal. நம் விகுதிகள்  அல்லது  சொல்லீறுகள் பல மொழிகளில் புகுந்துள்ளன.  

செவ்வாய், 24 டிசம்பர், 2013

நிர்ணயம்

இன்று நிர்ணயம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். இது தமிழன்று என்று வகைப்படுத்தப்படும் சொல்.

 இதன் தொடக்கமாகிய "நிர்" என்பது "நிறு" என்பதன் திரிபு. நிறு என்பதோ நிறுவு என்பதன் அடிச்சொல்.

ணய என்பது "நயம்" என்பதில் வேறன்று.

இதைப்   பின்வருமாறு விளக்கலாம்.

நிறு > நிறுவு > நிறுவுதல்.

நிறு > நிர். > நிர் நயம் > நிர்ணயம்.

எதையும் நிர்ணயம் செய்வதாவது,  அதை நயமாக நிறுவுதலே ஆகும்.

புதன், 11 டிசம்பர், 2013

Nelson Mandela

இனம் மொழி மதம் கடந்து
மனித இனத்தை நேசித்தார்
தனி மனித உரிமை களைத்
தலைதாழ்ந்து பணிந்திட்டார்.
நிறவெறி தனைஎதிர்த்து
நெடுங்காலம் போரிட்டார்
அறநிலை பிறழ்தலிலாப்
பெருவாழ்வில் நிலைநின்றார்

இன்னொரு காந்தியென‌
இவ்வுலகில் ஒளிவீசி,
தம்ம‌ரு நறுநாட்டின்
தலைமையிலும் கொடிநாட்டி
மின்னலென அது நீங்கி
மேலான தனிவாழ்வில்
தாமாக அமைந்திட்டார்.
தரணியில்யார் ஒப்பவரே?


நெல்சன் மண்டேலாவின்
நீடுபுகழ் பறைசாற்ற‌
கல்நின்று அணிசெய்யும்
மன்று ஒன்று  நாட்டுவரோ?

மறைந்தாலும் மறைவில்லா
மாமனிதர் புகழ் ஓங்க‌
நிறைந்துயரந்த தமிழ்ப் பாவால்  
நின்றுபணிந்தேத்திடுவோம்.






செவ்வாய், 10 டிசம்பர், 2013

riots in Singapore Island

சட்டமும் ஒழுங்கும் தலைமேற் கொள்ளும் சிங்கப்  பூரரசு
சாலைகள் சந்துகள் எல்லாம் தூய்மை உலகில் இதுஅரிது
கொட்டம டக்கிக் குறும்பரை வைக்கும் கொள்கை அதுபெரிது
குற்றம் அரிதெனக் கூறும் தீவினில் கலகம் ஒருவியப்பே!

அறிகுழு அமைத்தும் அதன்கா ரணம்தரும் நாளை எதிர்பார்ப்போம்
பிறிதொரு காரணம் உண்டிது பிறந்த திகதி நாள்  நட் சத்திரம்
அறிவது யாதெனின் ஆகுநே ரம்குன்றி ஆகா ததுவிரிந்தால்
பெறுவது தீமையே என்பதும் உண்மையே பேசும் இதுதெளிவே.


சூடு கிளப்பிச்  சூறாவளி தோன்றாமல்
பாடு தவிர்த்த‌பண் பட்டகா வல்துறை.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ஏகலைவன்

ஏகலைவன் என்ற மகாபாரதச் சொல்லை இப்போது ஆய்வுசெய்வோம்.

எய் =  அம்பு எய்தல்.
எய் ‍> ஏ  இது முதனிலை திரிந்த பெயர்ச்சொல். இங்ஙனம் நீட்சி அடைகையில் யகர ஒற்று, கெட்டது. (அதாவது, மறைந்தது). இப்படி மறையவில்லை என்றால், ஏய் என்று ஆகி, விளிச்சொல்லுடன் மயங்கும்.

அடுத்து, கலை என்ற சொல்.  அம்பு எய்வது ஒரு கலை.

வன் என்பதில், வ்+அன் ஆகவே வகர உடம்படு மெய்யும் அன் என்னும் ஆண்பால் விகுதியும்.

வல் > வன் என்றும் திரிந்து, வல்லவன் என்பதையும் குறிக்கும்.

ஆக இது தமிழ் மூலங்களையுடைய ஒரு பெயர்

Ekalavya:  Notes

ஏகலைவன் என்பது தமிழ் வடிவம். சங்கதத்தில் "ஏகலவ்யா". ஏகலைவன் என்று நேர்புனைவாக  இல்லாமல் ஏகலைவ்+ய்+அ(ன்)  என்று மாற்றம்பெற்றுள்ளது. வகர உடம்படு மெய்யும் யகர உடம்படு மெய்யும் உள்பொதியப்பட்டு, ஆண்பால் னகர ஒற்று களையப்பட்டுச் சொல்லாக்கம்  பொற்றுள்ளது. ஏகலைவன் கரு நிறத்தோன் என்பதும் கவனிக்கத் தக்கது.


வட  பெரு நிலப்பகுதியில் கருப்பு  இனத்தோர் ஆட்சி செய்த  பாகங்களும்  இருந்தன  என்பதும்  அவர்கள் ப‌ற்பல கலைகளையும் அறிந்திருந்தனர் என்பதும்  இதனால் பெறப்பட்டது.