வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

abject poverty of Tamil pundits



தமிழில் புலவர் என்றிடினும்
தகுந்த மேலணி தரித்திரமோ?
இமிழும் கடலாம் அறிவினிலே
எனவே பலரும் போற்றிடினும்
அமுதே படைக்கும் அடியவளாம்
துணையைத் துவட்டும் நோயினுக்கோ
அமைவாய் மருந்தை அளித்திடவே
அதற்கும் பொருளே இலரானார்!



பட்டம் பலவே அளிப்பதினும்
பண்படு புலவர் அவரென்றால்
ஒட்டி வயிறும் உலர்வறுமை
ஓட்டும் வழியே  ஒன்றுதவி
நெட்ட நெடுகலும் அரசுதர
நிதியைத் திங்கள் ஒவ்வொன்றிலும்
கட்டி முடியாய்க் கொடுப்பதிலே
கழறும் தவறும் காண்பதுண்டோ?

கருத்துகள் இல்லை: