ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

சபதம் II

முன்பதிந்த  இடுகையில் சபதம்  என்பது  அவம் > அவதம்  என்பதன் திரிபு என்றோம்.  எப்படி முடியும்?  அவம் என்பது எப்படி அவதம் ஆனது?

ஆக்கப்பட்ட சொற்கள் பலவற்றில் "அ து" என்பது இடையில் புகுத்தப் பட்டுள்ளது.  ("இடைப்புகவு ").

அவம் + அது+அம்   >  அவ + அது + அம்  >  அவ+ து+ அம்   >  அவதம் .

தச்சன் நிலைப்பேழையைச் செய்யும்போது வேண்டாத கட்டைகளை அறுத்து வீசிவிடுதல்போல் ேண்டாத ஒலிகள் களையப்பட்டன,  இல்லாவிட்டால் "அவமதுவம் " என்றாகிவிடும்.  நீங்கள் ஒரு புதிய பெயரையோ சொல்லையோ படைப்பதாயின் இந்த உருவாக்க முறையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பருத்தல் = becoming big in size.  to increase in size.
பரு > பரிய  big.
பரு+ அது + அம்

 =  பருவதம் > பர்வதம்  (இங்கே "வகர " உடம்படு மெய் வந்தது.  இல்லாவிட்டல் "பரதம்" என்ற சொல்லுடன் குழம்பிவிடும்  ("மயங்கும்").

இதுபோல அது இது என்ற சொற்கள் புனைவில் புகுத்தப்பட்ட சொல்லாக்கங்கள் மிகப்பல.

"வோவ் " (vow) என்னும் ஆங்கிலச் சொல்   "வகத்"  என்ற   சமஸ்கிருத  மூலத்தோடு தொடர்பு உடையதென்பார் அறிஞர் . Sanskrit vaghat- "one who offers a sacrifice.

notes:

c.1300, from Anglo-French and Old French vou, from Latin votum "a vow, wish, promise, dedication," noun use of neuter of votus,past participle of vovere "to promise solemnly, pledge, dedicate, vow," from PIE root *ewegwh- "to speak solemnly, vow" (cf. Sanskrit vaghat- "one who offers a sacrifice;" Greek eukhe "vow, wish," eukhomai "I pray").  (from Dictionary )

பர்வதம் -  சங்கதச் சொல் :  மலை. " பர்வத ராஜகுமாரி பவானி "  என்பது பாடல்.
பர்வதம் > பார்வதி .  மலைமகள்.

கருத்துகள் இல்லை: