செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பி தா

தந்தையைக் குறிக்க சங்கதமொழியில் உள்ள சொற்கள் மிகப்பல. தந்தை யென்ற சொல்லும் அங்குள்ளது. இன்னும் பல. ஏக தந்தாய நம!  என்று இறைவணக்கத் தொடரில் வருகின்றதன்றோ?

ஆனால் இங்கு ஒரு சொல்லை மட்டும் சிந்தித்து அறிவோம்.

பின் என்ற சொல், சில சொற்சேர்க்கைகளில் பி‍ என்று குறையும்.   எடுத்துக்காட்டு:

தம்+ பின்   =   தம்பின்.>  தம்பி. ( தமக்குப் பின் பிறந்தவன்  தம்பி.)

தாய்க்குப் பின்  நாமறிந்துகொண்ட தெய்வம் பிதா.

பின்  + தாய்  =  பி(ன்) +  தா(ய்).=   பி தா.

சில சொற்கள்   முன் பின்னாய் அமையும் என்பதைப்  பல இடுகைகளில் எடுத்துக்காட்டி யுள்ளேன்

அப்பா எனபதில் உள்ள "பா"  பி   என்று திரிந்தது என்று  கொள்வாரும்  உளர் . அங்ஙனம் ஆயின் -தா என்பது பின்னொட்டு  எனல் வேண்டும்.
"பிதா" என்பதைப் பிரிக்கலாகாது என்று சிலர் வாதிடுவர்.  இலத்தீன் மொழியில் -பா என்றே சொல் தொடங்குகிறது..
"பா பா "  =  போப்பாண்டவர்.
ஆகவே பி(ன்) + தா(ய் ) என்பது .பொருத்தமானது .

மாதா -  பிதா - குரு  தெய்வம்  என்ற நிரலில் மாதாவிற்கு அடுத்து நிற்பவர் பிதா. தாய்க்குப் பின் தாரம் என்பது ஆண்மகனைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட  குடும்பவியல்  பழமொழி.  இங்கு மாறுபாடு எதுவுமில்லை..

கருத்துகள் இல்லை: