செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மகன், மகள், மகார்

மகன், மகள், மகார் என்பன மிகவும் அழகுபெற நம் தமிழில் அமைந்த சொற்கள்.

மக +  அன்  =  மகன் என்று அமைந்தது சரிதான்.
அதுவேபோல்,  மக +  அள் = மகள் என்பதும்  நன்றேயாம்.

இதில் கேள்வி:  மக+ அன் = மகவன் என்றும்  மக +அள் = மகவளென்றும்  உடம்படு மெய் பொருந்தி ஏன் அமையவில்லை?

சிவ + அன் =  சிவன். செம்மைக் கடவுள். முருகனும்தான்.

உடம்படுமெய் இங்கெல்லாம் தேவையில்லை  என்க.

கருத்துகள் இல்லை: