ஞாயிறு, 19 ஜனவரி, 2014

பெண் சம நிலை

"தலைமை அமைச்சராய்ப் பெண்ணிருப்பதா?
தாரணியில் நானிங்கே பின்னிருப்பதா?
குலைப்பேன் அரசுதனைக்  கூன்படுத்தியே,
கூடிடுவீர் சென்றவளைப் பின்கிடத்துவீர்....."

என்றகுரல் எங்கேனும் ஞாலம்தன்னில்   
ஒலித்தபடி செல்லுமிந்தக் காலம் தன்னில்!       
இன்றுவரும் நாளைவரும் ஒத்தநிலைஎன்
றிருந்ததன்றிக்  கையில்வரப் பெற்றதிலையே.

கருத்துகள் இல்லை: