ஞாயிறு, 19 டிசம்பர், 2021

இல்லங்களில் பத்தியோகம்

 யாமறிந்த  வீடுகளில் பத்தி யோகம்

யாதொருநா ளென்றாலும் குன்ற லின்றி

தேமதுர மணியோசை பாடல் மற்றும்

தேவனுக்குப் படையலென யாவும் கொண்டு,

ஓமெனுமந் திரவோசை ஒன்றி மேவ

உவந்தனைவ ருஞ்சேர்ந்து பங்கு கொள்ள

ஏமுறுக இவ்வுலகம் என்று கூவ,

இயல்கிறது காண்கின்றோம் ஞாலம் வாழ்க.


கருணா  அகத்துக் கனிபத்திக்   காட்சி

தருநேர்த்  தகுபடங்கள்    காண்.


பொருள்:


பத்தியோகம் -  பக்தியோகம்

யாதொருநாள் -  எந்த உரிய நாளாக இருந்தாலும்

தேவனுக்கு -  இறைவனுக்கு

ஒன்றி மேவ - எல்லா நிகழ்விலும் கலந்து நடைபெற

உவந்து - மகிழ்ந்து

ஏமுறுக -  பாதுகாவல் மிகவேண்டும்

ஞாலம் வாழ்க -  உலகம் வாழ்க

அகந்தனில் - வீட்டில்

கனிபத்திக்காட்சி =  பக்தியானது கனிந்து ஒழுகும் தோற்றநிகழ்வு

தரு -  வருகின்ற

நேர் - உண்மையான

தகு படங்கள் - தகுதி பெறும் படங்கள்.

காண் -  பாருங்கள்




படம் அனுப்பிய பற்றாளர்:  கருணாஜீ


கருத்துகள் இல்லை: