சனி, 4 டிசம்பர், 2021

மண்டூகம் [ கூபமண்டூகம்]

இது தவளை என்று பொருள்படும் சொல். இதை ஆய்வு செய்வோம்.

தவளை என்பது பெரிதும் மண்ணில் தூங்குவது. கொஞ்சம் நீர்கலந்த மண்தரையாயின் அவ்விடமானது தவளைக்கு மிகவும் பிடித்தமானது ஆகிவிடும்.

மலர்த் தூங்கும் வண்டு.

மண்ணில் தூங்கும் தவளை.

[இது மலரில் தூங்கும் என்று விரிவதால்  இல் என்னும் உருபு தொகுந்து ( மறைந்து) வருகிறது.

மலர் தூங்கும் என்றால் பூவே உறங்கிவிட்டது என்று பொருள்.

மலர்த் தூங்கும் என்றால் மலரில் மற்றொன்று ( வண்டு) தூங்குகிறதென்பது.  இங்கு வலி மிகும்.]

[ தட்டச்சு செய்கையில் கவனம் தேவை ].

மண்+ தூங்கு > மண்டூங்கு,  இதில் அம் விகுதி சேர,

மண்டூங்கம் என்றாகும் .  ஙகர ஒற்று இடைக்குறைந்து, மண்டூகம் ஆகும்.

அடி அகலமாகவும் வாய்ப்பகுதி சற்றுச் சிறுத்தும் இருக்கும் கேணி என்பது கூவம் ஆவது:    குவி + அம் > கூவம்,  வகர பகரத் திரிபில் இது கூபம் ஆகிவிடும்.

கூவம் > கூபம் என்பது முதனிலை நீண்டு, அம் விகுதி பெற்று வகரம் பகரமாய்த் திரிந்தது.

வகரம் பகரமாவது அடிக்கடி காணும் திரிபு. பிற மொழிகளிலும் உள்ளது. Not language specific.

இத்தகைய திரிபுகள் வருங்கால், ஒரு கையேட்டில் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். 

பகு <> வகு என்பது அத்தகையது.

கூபம் + மண்டூகம் >  கூபமண்டூகம்.

கிணற்றுத் தவளை என்பது.  கிணற்றில் வாழ்வது.  மண்ணில் துங்குவது.

இதை ஊங்கு, ஊக்கு என்ற சொற்களை இறுதியாக்கியும் பொருளுரைக்கலாம் ஆதலின் பல்பிறப்பி ஆகும். மற்ற உள்ளுறைவுகளை ஈண்டு விரிக்கவில்லை. பின்பு  கண்போம்.

மண்+ தூக்கம்> மண்டூக்கம்> மண்டூகம் எனினுமாம்.  இடைக்குறைச்சொல். இதுவுமது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: