வியாழன், 23 டிசம்பர், 2021

உயர மேடை உயர்மேடை ஐயப்பன்

நாட்டுவானம் தொட்டு நிற்கும் ஐயப்பன்

வீட்டுவானும் தொட்டு நிற்பான் ஐயப்பன்

கூரைதொட மேடையேற்றி வைக்கிறோம்

கூடிநின்று கீர்த்திசொல்லி இலயிக்கிறோம்.


ஆயிரங்கள் இளைஞர்கூடித் தொழுகிறோம்

அவன் தெய்வக் கால்களிலே விழுகிறோம்

பாயிரங்கள் பாடல்பல சொல்கிறோம்

பாவம் தீமை என்றனைத்தும் வெல்கிறோம்.   (நாட்டு)


சாமியே சரணம் ஐயப்பா.


கவிதை: சிவமாலா

படம்  மோகன் ரஜினி


( இங்குள்ள படத்தில் பாருங்கள். ஐயப்பன் வீற்றிருக்கும் உயரமேடையை)






கருத்துகள் இல்லை: