சனி, 27 ஜனவரி, 2018

ஒற்றுமை தொடங்குமிடம்.




அடுத்த நாட்டுடன் சண்டையென்றால்
அப்போது  கிடைப்பதே உள்ளொற்றுமை;
எடுத்ததற் கெல்லாம் ஒற்றுமை ஒற்றுமை
என்பதிற் கிடைப்பதோ என்னசொல்வீர்.
படுத்திருப் பவர்க்கே உறக்கமையா
பசித்திருப் பவர்க்கே உணவென்பதே.




காசு   மீரம் கிட்டிவிட்டால்
காசில் லாதவர் எங்கிருப்பார்??
தேச ஒருமைக்கு வேண்டுவதே
காசு மீரம் பெறுவதொன்றோ

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை அன்றோ?
 



கருத்துகள் இல்லை: