சனி, 13 ஜனவரி, 2018

பொங்கல் வாழ்த்து அனைவருக்கும்.



உழுதுண்பார் உலகுக்கும் உணவளிப்பார்
 உயர்ந்தோராம்  அவரென்போம்
கொண்டாடும்
பொங்கல்  நன்னாள்;

பழுதில்லை  பாரெங்கும் யார்பிறரும் 
அவருடனே பொழுதெல்லாம்
களித்தாடிப்
பொஙகல் உண்டால்;

மெழுகாக உருகுள்ளம் படைத்தவர்கள்
உள்ளிலொரு கபடமற்றார்
மேதினியில்
 மக்கள் வாழ

அழகாகத் தம்கடனை ஆற்றிடுவார்
அவர்துயரெங் கிருந்தாலும்
அதுதுடைத்தல்
 கடனே யார்க்கும்;

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: