ஞாயிறு, 21 ஜனவரி, 2018

கோயிலிற் சென்றுறைவோர் தாசியல்லர்



கோயிலுக் காண்டவன்பால் குன்றிவிடாப் பற்றினால்
தாயன் எனப்பணிந்து  தக்க அறிவோடு
சென்றுறைந்த பெண்ணெலாம் சீர்கெட்ட தாசியெனக்
கன்றுமதி  கொண்டோர் கழறுதற்குக் கண்டனத்தை
முன்வைத்தல் யாண்டுமே  வேண்டுவதே மாறுதல்பால்
கண்வைத்து நிற்போர்எக் காலமும் வேண்டாமே!
பத்தி இலார்நம்  பரமனின் ஆலயத்துள்
புத்தி புகட்டார் நமக்கேலோர்  எம்பாவாய்!


தாயன் -  தாய்போன்றவன்.

கருத்துகள் இல்லை: