வியாழன், 27 மார்ச், 2014

Traffic Accidents

மனிதனாய்ப் பிறந்துவிட்டால் 
மண்டிவரும் குறைகளுக்கோ
பஞ்சமில்லை;

தனியளாய் உந்துதனைத் 
தகச்செலுத்திச் சோலிகளை
முடிக்கவேண்டி 

இனியவா  னொலிப்பாடல்
இதமாகக் கேட்டபடி
ஏகுங்காலை 

கனிவிழைந்த  வாயிலொரு 
காய்வந்து திணிந்ததுபோல்
விபத்து நேரும்! 

நேர்ந்துவிட்ட விபத்தினைச்ச 
மாளிக்க ஒருதிறமை 
வேண்டும்வேண்டும்!

ஊர்ந்துவந்த   வீதியில்கைப்  
பேசிகளில் படமெடுப்பார் 
நடிகை யாமே !

பேர்ந்துவிடும் முகரை எனப் 
பேச்சிலொரு மிரட்டலினை 
விடுப்பார் கேட்டுச் 

சோர்ந்துவிட நேர்ந்துவிட்டால் 
சோமனருள் அன்றியொரு 
காவலுண்டோ?   

----    சிவமாலா 

பாடலில் வரும் பதங்களுக்கு விளக்கம் .

குறைகள் :  கோபம்,  தேவையற்ற வாய்ப்பேச்சு,  அச்சம்,  ஆயுதமெடுத்தல் 
போன்ற  குறைகள் .  உந்து  -  (கார்),     தக -  நன்றாக;  செலுத்தி-  வண்டியை  ஓட்டி ;   நடிகை  யாமே -   யாம் அங்கு விபத்தில் மாட்டிக்கொண்டால்,  எ ம்மைப்  பட மெடுப்பவர்கள்     camera crew ;    I then become the actress!  !    யாமே நடிகையானோம் என்றபடி.


நீங்கள்  படித்தின்புற  சாலையில்  நடப்பவை  பற்றிய  ஒரு கட்டுரை:

Anger, Social Media and Singaporeans

http://theindependent.sg/anger-social-media-and-singaporeans/ 


(விபத்து ஒன்றும் நேர்ந்துவிட வில்லை;  சிங்கப்பூரில் மட்டுமன்று,   எங்கும்  நடப்பதுதானே, ஓட்டுநரும் பயணிகளும் சாலையில் சற்று நிதானம்   கடைப்பிடிக்கவேண்டும்....  அந்த நாள் வரவேண்டும்.   )                                                                                                                

கருத்துகள் இல்லை: