ஞாயிறு, 30 மார்ச், 2014

வெட்டப்படுமுன் விலகிச்செல்ல‌..............

வெட்டப்படுமுன் விலகிச்செல்ல‌
கட்டிக்கொண்டவளுக்குக் கருத்துவர வில்லையோ!
வெட்டப்படுவதும் உன்னாலென்றால்
விழை சொர்க்கமும் அதுவேயென்று
வேண்டிக்கொண்டு நின்றவளோ?

ஆயிரம் ஆண்டுகளின் முன்னே
அரிய மணச்சடங்குகள் நிறுவினரே!
ஆயிரம் ஒடிவிட்டதாலே
அந்த உட்பயிர் வாடிவருகிறதோ?
புதுமை வதங்கிவிட்டதோ!

திருமணமே வேண்டாமை
தெளிந்த பாதையோ...!

சேர்ந்தால் வாழாமையேல்
பிரிந்தால் பிழைத்தோடிவிட‌
வழியதோ! விழிவைப்ப்பாய் தங்காய்.

Written last year after a murder incident. where the husband, who married her according to rites and lived with her happily for a while finished her off...............shocking relatives and friends and the country at large!

கருத்துகள் இல்லை: