வியாழன், 27 மார்ச், 2014

கண்ணீரில் விளைத்த வாழ்வில்.................


(அறுசீர் விருத்தம் )

தண்ணீரில் மிதந்து சென்று 
காற்றொடு மழையில் சிக்கி 
கண்ணீரில் விளைத்த வாழ்வில் 
கால்வயி  றுண்ட மக்கள்
உண்ணீரும் இன்றி வாடி 
உற்றாரை இழந்து கண்கள் 
செந் நீரைச் சிந்தச் செய்தாய் 
சேய்க்கிது தாயின் தொண்டோ?

அமைதியும் வாழ்வும் இன்றி 
அலைந்திட்ட மீன  வர்க்கே 
அமிழ்ந்துயிர் எடுத்துக் கொள்ளும் 
அலைகளோ  பரிசு தந்தாய்?
"இமிழ்கடல் எங்கள் அன்னை"
இருந்தனர் இவ்வா றெண்ணி 
உமிழ்ந்தனை பேர லைகள்  
உயிர்களைக் குடித்தாய் அந்தோ !


இவை சுனாமி சமயத்தில் எழுதியவை .  அப்போது வெளியிடவில்லை, அப்போது கவிதைகள்  பல வெளிவந்தன. துயரை மிகுதிப் படுத்தலாகாது என்று  வெளியிடாமை மேற்கொண்டேன். ஒன்று வெளியிடவேண்டும் அல்லது எறிந்துவிடவேண்டும்  என்ற நிலையில் இப்போது  உள்ளபடியால் இதோ  அவற்றில் .சில...........பிற பின்பு!.
  

கருத்துகள் இல்லை: