புதன், 26 மார்ச், 2014

நாய் வால்

நாய் வால் நிமிர்த்திவிட்டு
நல்லபடி நோக்கியே
ஒயாது முற்படினும்
ஒக்குமோ ?
பேயாய்ப்    பிதற்றித் திரிவாரின்
பேதைமையைப் போக்க
எதைச் செய்தும் ஞாலத்தில் என்?

இதை எழுதிச் சில  ஆண்டுகள் ஆகியிருக்கும்,  ஆனால் எழுதியதன் பின்புலம் இப்போது ஞாபகத்தில் இல்லை.  நாய் வால் நிமிர்த்துதல் என்பது   பலரும் அறிந்ததுதான். இங்குள்ள  சீனர்  மலாய்க்காரரும்கூட சில வேளைகளில் சொல்வதுண்டு. கவிதையிலோ ஒரு புதுமை வேண்டும். பழம்பொருளாயினும் ஒரு புது நோக்கு  வேண்டுமே ! அது  கவிதை.  இதில் இருக்கிறதா என்பதை  நீங்கள் தாம் சொல்லவேண்டும்.....


ஒக்குமோ   -   வேறு  உயிரிகளின்  நேரான வாலுடன்  அது  சமமாகுமா ?  ஒ - (ஒத்தல் ) வினைச்சொல்  ,  ஒவ்வுதல்   எதிர்மறையில்  ஒவ்வாது  என வரும்.  ஒக்குமோ  (மலையாள வழக்கு )  முடியுமோ? எனப்  பொருள்.

ஒ  -  ஒப்பு   என்ற பழந்தமிழ் வினைச்சொல்லை  .. opt   என்ற  ஆங்கிலச்   சொல்லுடன்  ஒப்பிட்டு  ஓர் ஆய்வு   செய்யுங்களேன்........

யாருடைய  பேதைமையையும்  போக்குவது  நம் வேலையல்ல  (  வேலையன்று )  என்று  அறி ஞர்  சிலர்  கூறுவர்   இது  எப்படி ? ..




கருத்துகள் இல்லை: