புதன், 19 மார்ச், 2014

மூன்று துணுக்குப் பாடல்கள்

கலைகள் அனைத்திலுமே  ---  வரும்
கருத்தில் புதுமையும் வேண்டும்;
இலையில் புதுச்சுவை ஊண்  --- எனில்
ஏற்க மனத்தடை உண்டோ?


(இது ஏறத்தாழ பத்தாண்டுகளின் முன் எழுதப்பட்டது. மீதமுள்ள பாடல்களைக் காணவில்லை. எனவே இந்த வரிகள் மட்டும் இங்கே........)

-------------------------------------------------------------------------------------------

எதிரியென்று  யாரைச்சொல்வோம்?  -----  இன்றே
எதிரிஎன்பார்  நாளை  உதவு நண்பர் ;
உதறி எவர்  தம்மைவிடுப்போம்?  ---- இந்த
உலகத்தில் நிலையாய்க் கெட்டவர்யார்?

(இதுவும் சில ஆண்டுகளின் முன் எழுதியது.  தொடரவில்லை.)


------------------------------------------------------------------------------------------

கிழடு ஆன போதும் --- இன்னும்
பல்லில் ஒன்றும் பழுதில்லை!
தோலும் சுருங்க வில்லை --- பூனைக்கு
வாலும் அடங்கவில்லை.

(பாவம் .  நான் எழுதிக் கொஞ்ச நாளில் அது உந்து வண்டியில் அடிபட்டு
இறந்துவிட்டது.  கவலை......)


கருத்துகள் இல்லை: