புதன், 5 மார்ச், 2014

பக்கொடா !!

உளுந்துவடை ("உளுந்தவடை") அல்லது மெதுவடை என்பது நம் வடை வகைகளுள் ஒன்று. குளம்பி நீர் (coffee) அல்லது கொழுந்து நீர் (tea)  குடிக்கும்போது கடிக்க மிக்கச் சுவையாய் இருக்கும். இந்த மெது வடைக்குப் பக்கத்தில் கடித்துச்  சுவைக்கும் பொருட்டு கடின "வடை" ஒன்று வைக்கப்பட்டது.  அதைப் பக்கவடை என்றனர்.  பார்ப்பதற்கு வடைபோன்று  இல்லாமலும் ஓருருவில் இல்லாமலும் இருக்கும் பலகாரம் அது.

பக்கவடை > பக்கவடா > பக்கொடா  !!
(வடைக்குப் பக்கத்தில் வைப்பதற்குரிய பலகாரம் )

இப்போது யாரும்  பக்கவடை என்று சொல்வதில்லை என்று நினைக்கிறேன்.. பக்கொடா, பக்கடா என்றுதான் சொல்கிறார்கள்.

வடு >  வட்டம்  (டகரம்  இரட்டித்தது.)   வடு+அம் .
வடு >  வடை    (டகரம்  இரட்டிக்கவில்லை)  வடு+ ஐ .

சொல்லமைப்பில் இருவகையிலும்  இயலும்.

Please read through my various posts in the past where I have adverted to this in word-building.  Make a list for yourselves for your own reference.

வேங்கடம் : இங்கு  கடம் என்ற சொல் (கடு+அம்  ) -  இரட்டிக்கவில்லை.(  கட+ அம் என்பர் சிலர்.)

கருத்துகள் இல்லை: