செவ்வாய், 21 அக்டோபர், 2008

கொடிய விலங்குகள்..............

கொடிய விலங்குகள் கொல்தொழிற் காட்டில்
விடிய விடிய விழித்துக் --- கடிகாவல்
முன்கொண்டு தாமே முனைப்போடு வாழ்ந்திட்ட
வன்மைசேர் காலத்தில் மாண்டோரும் --- பன்மையோர்!
ஒண்மை அறிவியல் ஓச்சும் அரசுயர்
தன்மை உடையவிந் நாளிலே -- புன்மைசேர்
குண்டுகளால் துன்பக் குறுநேர்ச்சி தம்மினால்
பண்டுபோல் மாண்டோரும் பல்லோராம் --- என்றுமே
மாளவே பற்பல காரணங்கள் அல்லாமல்
மாளுதலில் மாற்றமென் றொன்றில்லை --- கேளுமே!
போவ துறுதி! புதுப்புதுக் காரணங்கள்!
நாவில் தவழ்சொல்லும் நல்லதே -- மேவினோ,
ஆவதோர் குற்றமும் ஆங்கில்லை நோவதேன்?
கூவுக தேவனின் பேர்.

கருத்துகள் இல்லை: