புதன், 22 அக்டோபர், 2008

கூரையா விழுந்தது?

கூரை விழலாம் விழுந்தநாள் தொட்டு அசை
சீரைத் தளையைச் சிறப்புடனே --- ஆரணியே
சேரக் கவிபாடச் செய்தமை ஓருங்கால்
யாரே கவலைகொள் வார்.

[இளங்கவி ஒருவர், எழும்புமுன் கூரை விழுந்துவிட்டது...ஆகையினால் களத்திற்கு வர இயலவில்லை என்பதுபோல் பாடலொன்று புனைந்திருந்தார். ஆனால் கூரையினால் அவர் "பாதிக்கப்" பட்டதாகத் தெரியவில்லை. இப்பாடல் அவருக்குப் பதிலாக அமைந்து, கூரை விழுந்ததும் கவி பாடத் தொடங்கி விட்டீர், இனி யார் கவலைப்படுவார் என்று வினவுகிறது.]

கருத்துகள் இல்லை: