சனி, 11 அக்டோபர், 2008

வெண்பாக்கள்

தேனூறும் வெண்பா தெளிந்த செழுந்தமிழில்
நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும்
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப்
பானயிவை யாவும் கலந்து!!

வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத்
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்ல தமிழ்வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம்
வெல்க உலகில் தமிழ்.

1 கருத்து:

Veroniq S Guptha சொன்னது…

வியந்து போகிறேன் தோழி !

பாரதி பெண்ணுருவம்கொண்டு பிறந்துவிட்டானோ ?