திங்கள், 20 அக்டோபர், 2008

சிறு குடில் அழகு

அழகியதோர் ஏரிதனை அண்டுசிறு குடிலே,
அரக்குநிறக் களிமண்ணால் ஆனதுவே சுவரும்;
தழைகளையே தரித்திட்ட மழைக்கூரை;
தனியேநான் இக்குடிலில் தங்குவதென் ஆசை.

உமையவளின் அழகினையே ஊருக்குக் காட்டி
உள்ளமைதி தருகின்ற குடிலருகில்,
இமைப்போதும் வண்டுகளும் நிறுத்தாமல் முரலும்.
என்கருத்ததைத் தேன்கூடு பகலெல்லாம் கவரும். பக்49

ஏரிதன்னின் நீர்ப்பரப்பில் சீறிவரும் காற்றால்
இக்கரைமேல் எழுந்தூர்ந்து கைதட்டும் அலைகள்!
பாரிலிது போலமைதி எங்குகிட்டும்?
பயக்குமொரு 'நித்' 'திரை'யால் "திரைநிற்றல்" கூடும்.

கருத்துகள் இல்லை: