வெள்ளி, 10 அக்டோபர், 2008

மதுவிலக்கு

மதுவிலக்கு

மண்ணுலகின் நாடுகளில்
மது விற்பனை இலா நாடு
எண்ணிடலாம் விரல்விட்டே!
இதுதானே உள்ள நிலை.

விற்பனைக்கு உளதெனினும்
வேண்டிமது அருந்திடுவோர்
சிற்சிலரே பிற இனத்தில்!
செந்தமிழ் நாட்டினிலே :

மதுவினால் உருக்குலைந்தோர்
மா நிதியம் இழந்தவர்கள்,
முதுமைவரை மனைவியரை
மொத்திமொத்தி எடுத்தவர்கள்

பல்லோரோ ஆகையினால்
பயனில்லா மதுவொழிக்க
உள்ளகட்சிக் காரர்கள்,
ஓங்கிடவே குரல்கொடுத்தார்?

தமிழரிடை மட்டுமிந்த
தலைதடு மாற்றமென்ன?
எமக்கது வேண்டாமென்று
ஏன் ஒதுங்க இயலவில்லை!

பிறர்போல் குடிக்காமல்,
ஏனிருக்க முடியவில்லை?
பிறர்போல் அளவருந்த
ஏனிவர்க்கு முடியவில்லை?

அரசியல் பேசுவோனும்
அரசும் காவலரும்
பிறரும் உரைக்காமல்
பிழைக்க அறியாதவனோ?


--------------------

கருத்துகள் இல்லை: