புதன், 29 அக்டோபர், 2008

புணர்ச்சி விதிகளும் சொல்லாக்கமும் - 2

*


நகு+அம் = நகம் என்று வரும் ஆகவே நக்கத்திரம் என்று வராது என்பது சரியான வாதம் அன்று. இதற்கு ஐராவதம் மகாதேவன் நகு+அம்= நக்கம் என்று வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளது மட்டுமன்று, கீழ்க்கண்ட என் எடுத்துக்காட்டுக்களையும் கண்டு தெரிந்துகொள்ளவும்:

பகு+ ஐ = பகை (பக்கை என்று வரவில்லை).
ஆனால்:
பகு+அம் = பக்கம்!! (பகம் என்று வரவில்லை).
வேறுபாடு நோக்குக:
தக்குதல்: தக்கு+அம் = தக்கம்.

நகு+ஐ = நகை.
ஆனால்: நகு+ அல் = நக்கல் (சிரிப்பு).
நகு+அல் = நகல்.(சிரிப்பு).

இப்படிப் பல.
இதை எல்லாம் ஆய்வு செய்து பின் குறை சொல்லட்டுமே!

கருத்துகள் இல்லை: