வெள்ளி, 31 அக்டோபர், 2008

பக்கத்து நாட்டுப்் படுகொலைக்குக் கண்மூடி
துக்கத்தைத் தூண்டிய பாரதம்தன் --- கக்கத்துப்
பிள்ளைக்கே வந்துதான் பீடித்த நோய்கருமம்
கொள்ளைபோல் மீண்டதோ கூறு.

பக்கத்து நாடு = இலங்கை. கக்கத்துப் பிள்ளை = கைகளில் தூக்கிவைத்திருக்கும் பிள்ளை.
கருமம் = கருமவினை, கொள்ளை = கொள்ளை நோய்.
மீண்டதோ = கர்மாவினால் மீள வந்துற்றதோ.

கருத்துகள் இல்லை: