புதன், 8 அக்டோபர், 2008

எல்லாளன் பின்னோரே

எல்லாளன் பின்னோரே ஈழத் தமிழர்
இதுவேநல் வரலாறென் றுள்ள பொழுதில்,
வல்லாளர் சட்டத்தை ஞால முழுதும்
வழங்கியவர் வழுவாதோர் என்றே புகழும்
சொல்லாடும் பிரித்தானி ஆண்டார் குழுவும்
சோர்ந்துற்ற அறிவாலோ ஈழ நிலத்தை,
அல்லாடும் சிங்களவர் கையில் கொடுத்தே
அன்முறைதான் செய்ததற்கு மாற்றும் உளதோ?

கருத்துகள் இல்லை: