வியாழன், 2 அக்டோபர், 2008

A bird in agony: நண்பரை இழந்த துன்பம்...

நல்ல கனிமரமே - அதில்
நானொரு சிறுபறவை.
சொல்ல வொணாஇன்பம் - ஒரு
சோர்வின்றி இருக்கையிலே,

அந்தப் பெருமரமும் -- அதன்
அடியொடு தொலைந்திடவே,
நொந்து விழி நீரே -- உகுத்து,
வேதனைக் கடல்வீழ்ந்தேன்.

சுற்றி இருந்தவையாம் -- நல்ல
சுறுசுறுப் புடன்பறக்கும்,
உற்றஇன் நட்பினரை -- நான்
முற்ற இழந்துழந்தேன்.


என்றவற்றைக் காண்பேன்? -- நான்
எங்கு பறந்துசெல்வேன்?
வென்ற மனிதர்களும் -- எனை
விரட்டி அடிக்குமுன்னே!

கருத்துகள் இல்லை: