புதன், 29 அக்டோபர், 2008

சொல்லாக்கமும் புணர்ச்சிவிதிகளும் - 1

சொல்லாக்கத்தில் புணர்ச்சி விதிகள் முழுமையாகப் பின்பற்றப்படா. உண்மையில் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் கூறும் விதிகள் சொல்லாக்கத்திற்கு உரியவை அல்ல. அவை முழுச்சொற்கள் புணர்தல் பற்றியவை.


நாடு + அன் = நாடன். இச்சொல் மலையாள மொழியில் பெருவழக்கு. தமிழில் இலக்கிய வழக்கு உடையது.

நாடு + ஆர் = நாடார்.

நாடு+ ஆன், நாடு+ ஆர் = நாட்டான், நாட்டார். (வேறு சொல்லைப் பிறப்பிக்க வேறுவகையாகப் பு ணர்த்த்தப் பெற்றது எனலாம்)

நாட்டார் என்பது ஒரு பட்டப்பெயர்: எ-டு: அறிஞர் வேங்கடசாமி நாட்டார்.

ஆனால் வேற்றுமைஉருபு ஏற்கும்போது,

நாடு+ இல் = நாட்டில; நாடு + ஐ = நாட்டை ......் என இரட்டிக்கும்.

முழுச்சொற் புணர்ச்சி விதிகள் சொற்றொகுதி வளர்ச்சிக்கு ஒரு தடையாக நிற்கவில்லை என்பது பெற்றாம். அவை வேண்டியாங்கு ்டியாங்கு விலக்கப்பட்டன. இதற்குக் காரணம் இவ்விதிகள் முழுச்சொற்கள் புணவர்வது பற்றியவை.

இது நான் முன் எழுதியது:

மனத்தை ஒன்றன்மேல் இடுவதுதான் இட்டம் எனப்பட்டது. இச்சொல் இடு + அம் = இட்டம் என்றாகியது. இதைச் சங்கதச் சொல் என்பதும், பின் இதை இஷ்டம் என்று எழுதுவதும் தவறு. தமிழ்ப்பண்டிதர்கள் தாம் சிறு அகவையின்போது சொல்லப்பட்டதையொட்டியே பண்டிதரான பின்பும் சிந்திக்காமல் செயல்பட்டு இதைச் சங்கதமொழி என்றனர்.

கடுமையான நிலையைக் குறிப்பதே கட்டம் என்பது. கடு+ அம் = கட்டம்(1). இதுவும் பின் கஷ்டம் என்று பிறழக் கூறப்பட்டது. கட்டு + அம் என்பதும் கட்டம்(2) என்றே முடியும். ஆனால் அதன் பொருள் pattern என்பது போன்றது. கட்டம் கட்டமான சட்டையணிந்துள்ளான் என்பதுண்டு.( chequered shirt.)
கட்டம்1 என்பது கஷ்டம் என்று மாறியபின் கட்டம(்2) முன்போலவே கட்டம் என்றே இருந்தது.

படிப்பறிவு குறைந்த மக்கள் "இக்கட்டான" நிலை என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்களே! இது "இழுக்கட்டு" என்றிருந்து பின் இக்கட்டு ஆகிற்று என்று தெரிகிறது. இழுத்துக் கட்டிவைத்ததுபோன்ற நிலையைக் குறிப்பதாகவோ அல்லது இழுக்கு என்பது இச்சொல்லின் முன்பாதியாகவோ இருந்து மருவியிருக்கலாம்.

இதை இங்கு மறுபதிவு செய்தது ஏன் என வினவலாம்.

இடு+ அம் = இடம்.

இடு + அம் = இட்டம். (இங்கு டகரம் இரட்டித்தது).


நாடன், நாட்டான் என்பவற்றோடு ஒப்பு நோக்குக.

சங்கதத்தில் இஷ், இஷ்டதாஸ், இஷ்டயாமன், இஷ்டி, இஷ்டு முதலிய விரும்புதல் தொடர்புடைய சொற்கள் உள. இருக்கு, அதர்வண வேதங்களிலும் இவை இடம்பெற்றுள. பாரசீகத்தில் "அப இஸ்தன"், " காமிஸ்தன்" முதலிய சொற்கள் உள. அவை ஆராயத்தக்கவை.

இட்டம் என்பது மன ஈடுபாடு. இடு > ஈடு> ஈடுபாடு. இடு> இட்டம். இஷ் , இஸ் எனப் பிறமொழியில் வருவன இவ்வடியில் தோன்றியவை என்பது தெரிகிறது.

இலத்தீன் அகரமுதலி தருபவை:
voluntas, voluntatis N (3rd) F 3 1 F [XXXAX]
will, desire; purpose; good will; wish, favor, consent;

lubido, lubidinis N (3rd) F 3 1 F [XXXAO]
desire/longing/wish/fancy; lust, wantonness; will/pleasure; passion/lusts (pl.);

libido, libidinis N (3rd) F 3 1 F [XXXAO]
desire/longing/wish/fancy; lust, wantonness; will/pleasure; passion/lusts (pl.);

adpeto, adpetere, adpetivi, adpetitus V (3rd) TRANS 3 1 TRANS [XXXAO]
seek/grasp after, desire; assail; strive eagerly/long for; approach, near;

appeto, appetere, appetivi, appetitus V (3rd) TRANS 3 1 TRANS [XXXAO]
seek/grasp after, desire; assail; strive eagerly/long for; approach, near;

capto, captare, captavi, captatus V (1st) TRANS 1 1 TRANS [XXXAO]
try/long/aim for, desire; entice; hunt legacy; try to catch/grasp/seize/reach;

கருத்துகள் இல்லை: