வெள்ளி, 10 அக்டோபர், 2008

பாடலும் பொருளுரையும்.: "போனார் திரும்புவதும்"

இந்த எனது வெண்பா பற்றிய குறிப்புரை:

போனார் திரும்புவதும் புண்ணியமே; சொல்மதியைப்
பேணார் திருந்தவரும் கண்ணியமே; -- நாணிலாராம்
பெண்டிரும் மாறிடிலோ பேறுகளில் மேல்கண்ணாற்
கண்டுரைப் பாரே கரி.



போனார் = இறந்து போனார் என்று எண்ணப்படுபவர்;
திரும்புவதும் புண்ணியமே = மீண்டு வந்தாலும்் அது அவருக்கும் அவர்பால் அன்புடையாருக்கும் ஒரு புண்ணியமாம்.
சொல் மதியை = கூறப்படும் நல்ல அறிவுரையை; பேணார் திருந்தவரும் = கேட்டு அதைப் பயன்படுத்திக் கொள்ளாதவர் திருந்திவிட்டால் அதனால் உண்டாவது;
கண்ணியமே = பிறர் உயர்த்திப் போற்றும் நிலையாகும்;
நாணிலாராம் பெண்டிரும் = (பாலியல் தொழில் முதலானவற்றில் ஈடுபடும் ) நாணம் துறந்த பெண்டிரும்;்

மாறிடிலோ = மாறி மறுவாழ்வு பெற்றால்;
பேறுகளில் மேல் = பாக்கியங்களில் மேலானதே; ்கண்ணாற்
கண்ணாற் கண்டுரைப்பாரே கரி. = கண் கண்டபடி கூறுபவரே சாட்சி எனத் தகும்.


கருத்துகள் இல்லை: