ஞாயிறு, 25 ஜூலை, 2021

திவ்வியம்

 

இன்று திவ்வியம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.


திருவெல்லாம் திரண்டு புனிதமாகிவிட்ட திருவடிகள் இறைவனுடையவை. திருவெல்லாம் அங்கு இயல்கின்றது, இயங்குகின்றது, திகழ்கின்றது. திருவென்பதோ எண்ணிக்கைக்கு இயலாத துய்யதான திரட்சி ஆகும். மற்றும் திருவென்ற சொல், இவ்வுலகத்துச் செல்வங்களையும் மொத்தமாய்க் குறிக்குமொரு சொல். இதனின்று சொல்லாய்வில் கல்லி எடுக்கும் அடிச்சொல் திர் என்பது. இவ்வடிச்சொல் தனித்தியக்கம் அற்றதொன்றாம். ஏனெனில் திர் என்ற சொல்லை யாரும் பேசுவதில்லை.


திர் > திரள் ( அள் )

திர் > ( - முன்னிருப்பு குறிக்கும் சுட்டும் விகுதியும்)

திர் > திரை ( - உயர்வும் குறிக்கும் விகுதி )

திர் > திரி ( இ விகுதி; மாறுதலும் ஓரிடத்து நில்லாமையும் உணர்த்துவது)

திர் > திறு > திறம்: ( திரட்சியில் வரும் வலிமை, திரிந்து அம் விகுதி பெறுதல்)

அர் இர் ~ர் ஈறு றுகரமாதல்: திடர் > திடறு ( -கா).

திர் > திரம் ( திறம் குறிக்கும் விகுதி). -டு: திறமாகவும் சரியாகவும் சொல்லப்படும் நேர்வுத்தொகுப்பு. " சரித்திரம்".

[ வரலாறு]

திர் > திரணை உருட்டிப் பிடிக்கப்பட்டது. (திரள் > திரண் > திரணை)


திர் > திரவியம்

திர் > திரவணம்

திர் > திரவம்


திர் > திராணி. மனத்து வன்மைத் திரட்சி.


திர் > திரளை (உருண்டை)


இன்னும் பல.


திர் > தி ( கடைக்குறை)


தி > தி + இயம் > திவ்வியம். ( திருத்திரளமைவு).


அறிக மகிழ்க. மெய்ப்பு பின்



கருத்துகள் இல்லை: