வெள்ளி, 23 ஜூலை, 2021

பாரோ கிருஷ்ணையா: பொருள் தமிழ்

 இந்தக் கர்நாடகப் பாட்டின் பொருளைத் தமிழில் தருகிறோம்:

இதன் மூலப்பாடலைப் பாடியவர் கனகதாசன் என்னும் கருநாடக இசைப் பண்டிதர். (1509 – 1609).. இந்த மூலம் கீழே தரப்படுகிறது.


பாடல் சொல்வது:

வாராய் கிருஷ்ணையா

பக்தரின் மனைக்கேக, வாராயோ ( வாராய் கிருஷ்)


வாராய் முகம்காணத் தாராய் உன்நிகர் யாரோ

செகதலச் சீலனே ( வாராய் கிருஷ்)


அணிந்தபா துகைமற்றும் கால்களில் சிறு கச்சை

திம் திமி திமி திமி திமி என்னுதே

பொன் குழல் ஊதுக-வா ராயோ (வாராய் கிருஷ்)


பொன்னொளி வீசும் வளையல்களே அணிந்தாய்

கிண்கிணி கிணிகிணி கிணி என்னுதே

பொன் குழல் ஊதுக வாராயோ (வராய் கிருஷ்)


உடுப்பிலி வாசனே நிலையாதி கேசவனே

உன் பாத தாசன் பாததாசன் பாத தாசன் பாததாசன்

கனகன் வாராயோ



பொருள்


மனைக்கேக -  (பற்றரின் வீட்டுக்கு   வர).


(மூலம்)

பல்லவி

பாரோ கிருஷ்ணய்யா பாரோ கிருஷ்ணய்யா பக்தர மனகீகா

அனுபல்லவி

பாரோ நின்ன முக தோறோ நின்ன சரி யாரோ ஜகதர ஷீலனே

சரணங்கள்

அந்துகே பாதுகவு   காலந்துகே கிறு கஜ்ஜெ திம் திமி

திமி திமி திமி எனுதா பொங்குளலூதுத பாரையா    ( பாரோகிருஷ்ணய்யா)

கங்கண கரதள்ளி பொன்ங்குற ஹொளெயுத கிங்கிணி கிணி 

கிணி கிணி எனுதா பொங்குளலூதுத பாரையா  ( பாரோ கிருஷ்ணய்யா)

வாச உடுப்பிலி நெலயாதி கேசவனே தாச நின்ன பாத தாசா பாத தாச 
நின்ன பாததாச கனகனு பாரய்யா


அருஞ்சொற்பொருள்:  24072021

கிரு =  சிறு

கங்கணம்  -  காப்பு , வளையல்

மெய்ப்பு : 1700      24072021 


கருத்துகள் இல்லை: