வியாழன், 8 ஜூலை, 2021

உகரம் அகரமாகும் என்றால் ஐயமா?

 அகரத்தில் தொடங்கிய ஒரு சொல் திரிந்து உகரமுதலாகுமா என்று உங்களைக் கேட்டால்,   அதற்கு ஆம் என்று நீங்கள் பதிலளிக்கலாம்.  எடுத்துக்காட்டுக்காகக் காத்திருக்காமல் " அம்மா - சொல்வடிவங்கள்" என்ற நம் இடுகையை எடுத்துக் கேட்டவர் முன் வைக்கலாம். சொல்லாய்வு பற்றிய சிந்தனை உடையவரானால் கேட்டவர் உடன் ஒப்புவார். தெரியாதவரானால் அவர் படித்தறிந்து ஒப்புவதற்கு நீங்கள் சிறிது கால இடைவெளியை அவருக்களிக்கலாம்.  இங்குக் குறிப்பிட்ட இடுகை இதோ:

https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_68.html 

இன்னொன்று சொல் பார்க்கலாம்,  இது ஒரு விதியாய் அமையவேண்டுமானல் ஒன்று இருந்தால் போதுமா என்று வினவலாம்.  அவர்க்கு இன்னொன்றும் தருவோம்:

உவித்தல்  -  அவித்தல் என்பது இன்னொன்று.

இவ்வேளையில் அதழ் இதழ் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

ஞெகிழ் அதழ்க் கோடலும்  என்கின்றது கலித்தொகை. 101.  இங்கு நெகிழ் என்பது ஞெகிழ் என்றுமாகும் என்பதைக் குறித்துக்கொள்க.  நயம் என்பது ஞயம் என்று வரவில்லை?    " ஞயம்பட உரை".

தமிழ் கவிதையிலே வளர்ந்த மொழியாதலால்,  இத்தகைய பரிமாற்ற வடிவங்கள் பாவலர்க்குப்  பயன் பெரிது விளைத்தன எனற்பாலது சொல்லித் தெரியவேண்டாத ஒன்றாகும்.

அம்மா என்பது உம்மா என்று வருமென்றால்,  உம்மா என்பது உமா என்று குறையுமென்றால்,  இருத்துக மனத்திலே.

செந்தமிழ் வாழ்க.  அடுத்து :  சபலம் என்ற சொல்லுக்கு இன்னொரு முடிபு காட்டுவோம்.  ( அடுத்து வரும் இடுகைகளில் ஒன்றில்)

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.




கருத்துகள் இல்லை: